வேதக் கதைகள்
இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்—இயேசு கிறிஸ்துவில் யோவானின் நம்பிக்கை தரிசனம்


வெளிப்படுத்தல்

இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்

இயேசு கிறிஸ்துவில் யோவானின் நம்பிக்கை தரிசனம்

இயேசு கிறிஸ்துவின் அருகில் நிற்கும் யோவான்.

அப்போஸ்தலன் யோவானுக்கு ஒரு சிறப்புத் தரிசனம் கிடைத்தது. அவன் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தான், அவர் யோவானுக்கு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய பல விஷயங்களைக் காட்டினார். அவர் யோவானிடம் தான் கண்டவற்றை எழுதச் சொன்னார். பரிசுத்தவான்கள் தம்மைப் பின்பற்ற தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகத்திலுள்ள தீமையை விட தாம் வல்லமையுள்ளவர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:1–2, 9–11, 13–15, 19; 2–3

இயேசு கிறிஸ்துவின் தோளில் கையை வைத்துள்ள பரலோக பிதா.

யோவான் தனது தரிசனத்தில், யாராலும் திறக்க முடியாத ஒரு புத்தகத்தைக் கண்டான். பின்னர் யோவான் இயேசு கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான்; அவரால் புத்தகத்தைத் திறக்க முடிந்தது. பூமி படைக்கப்படுவதற்கு முன்பே, பரலோக பிதா இயேசுவை நம் இரட்சகராகத் தேர்ந்தெடுத்தார் என்பதை யோவான் கற்றுக்கொண்டான். இது தேவனின் திட்டத்தின் மிக முக்கியமான பகுதியாகும், இயேசுவால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

வெளிப்படுத்த்தின விசேஷம் 5

சாத்தானும் ஒரு ஆவிப் பிள்ளைளின் கூட்டமும் பரலோகத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

யோவான் சாத்தானைக் குறிக்கும் ஒரு வலுசர்ப்பத்தையும் கண்டான். தேவனின் திட்டம் சாத்தானுக்குப் பிடிக்கவில்லை. அவன் பரலோகத்தில் ஒரு போரைத் தொடங்கினான். பரலோக பிதாவின் ஆவிப் பிள்ளைகளில் பெரும்பாலோர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அவரைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர்களில் சிலர் சாத்தானைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுடைய தேர்வின் காரணமாக, அவர்கள் பரலோகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

வெளிப்படுத்த்தின விசேஷம் 12:3–11

அணிவகுத்துச் செல்லும் வீரர்கள், தேவையில் உள்ள மக்கள் மற்றும் பஞ்சத்தைக் காட்டும் ஒருங்கிணைந்த படம்.

பூமியில் இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் எதிராக சாத்தானும் அவனைப் பின்பற்றுபவர்களும் தொடர்ந்து சண்டையிடுவதை யோவான் கண்டான். இரட்சகரின் சுவிசேஷத்தை மக்கள் நம்பாதபடி அவர்கள் ஏமாற்ற முயன்றனர். நிறைய போர், அழிவு, நோய் ஆகியவை இருந்தன.

வெளிப்படுத்த்தின விசேஷம் 6; 8–9; 12:17; 13:11–18; 17–18

ஜோசப் ஸ்மித்தை தங்கத் தகடுகளுக்கு வழிநடத்தும் மரோனி தூதன்.

ஆனால் பரலோக பிதா இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூமியிலுள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும்படி பரலோகத்திலிருந்து தூதர்களை அனுப்பினார்.

வெளிப்படுத்த்தின விசேஷம் 14:6–7

ஒரு குடும்பம் திருவிருந்தில் பங்கேற்றல்.

சிலர் பரலோகத்தில் செய்தது போல, இயேசுவை விசுவாசித்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்கள். இயேசுவைப் பற்றிய அவர்களின் சாட்சியம் சாத்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற அவர்களுக்கு உதவும்.

வெளிப்படுத்த்தின விசேஷம் 12:11; 19:8–10

இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார், அவருக்குப் பின்னால் தூதர்கள் இருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவார் என்பதை யோவான் கண்டான். அவர் முழு உலகத்திற்கும் ராஜாவாக இருப்பார். சாத்தானுக்கு இனி எந்த வல்லமையும் இருக்காது. இயேசுவின் காரணமாக, இனிமேல் துக்கமோ வேதனையோ இருக்காது. இயேசுவை விசுவாசித்து, அவருடன் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளும் எல்லா மக்களும் அவருடனும் பரலோக பிதாவுடனும் என்றென்றும் வாழ்வார்கள்.

வெளிப்படுத்த்தின விசேஷம் 19:11–16; 20:1–2; 21:1–7