வேதக் கதைகள்
இயேசு ஞானஸ்நானம் பெற்றார்—தேவனுக்குக் கீழ்ப்படிதலின் முன்னுதாரணம்


மத்தேயு 3

இயேசு ஞானஸ்நானம் பெற்றார்

தேவனுக்குக் கீழ்ப்படிதலின் முன்னுதாரணம்

யோவான் ஸ்நானனின் ஒரு விளக்கப்படம்

ஜனங்களை இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு தயார்படுத்த தேவன் யோவானை அழைத்தார். யோவான், ஜனங்கள் மனந்திரும்பவும் ஞானஸ்நானம் பெறவும் போதித்தான். ஜனங்கள் அவரை யோவான் ஸ்நானன் என்று அழைத்தனர்.

மத்தேயு 3:1-12

இயேசு ஞானஸ்நானம் பெற யோவானிடம் வருதல்.

யோவான் ஒரு வல்லமைமிக்க போதகர் ஆவார். பலர் யோவானின் போதனையை கேட்டு, ஞானஸ்நானம் பெற வந்தார்கள். ஒரு நாள், இயேசு ஞானஸ்நானம் பெற வந்தார்.

மத்தேயு 3:5, 13

இயேசுவும் யோவானும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருத்தல்.

இயேசு எப்போதும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் என்பது யோவானுக்குத் தெரியும். அவர் மனந்திரும்ப வேண்டிய அவசியமில்லை. இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று யோவான் நினைக்கவில்லை. இயேசு தான் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று யோவான் எண்ணினான்!

மத்தேயு 3:14

யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

இயேசு தாமும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று கூறினார். அவர் தம்முடைய பிதாவின் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க விரும்பினார். அவர் நமக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்க விரும்பினார். யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

மத்தேயு 3:13–15; 2 நேபி 31:5–7

இயேசு ஞானஸ்நானம் பெற்றார். பரிசுத்த ஆவி இறங்குதல்.

இயேசு தண்ணீரிலிருந்து வெளியே வந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர் மீது இறங்கினார். பரலோக பிதா பரலோகத்திலிருந்து கூறியதாவது, “இவர் என்னுடைய நேசகுமாரன்.” பரலோக பிதா இயேசுவால் மிகவும் மகிழ்ந்தார்.

மத்தேயு 3:16-17