மத்தேயு 25:14–30
தாலந்துகள் உவமை
தேவன் நமக்குக் கொடுத்தவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல்
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி போதிப்பதற்காக, இயேசு ஓர் உவமையைச் சொன்னார். இந்த உவமையில், ஒரு மனிதன் வெகுதூரத்தில் உள்ள ஒரு நாட்டிற்குப் பயணம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் புறப்படுவதற்கு முன்பாக, தனது மூன்று வேலைக்காரர்களைச் சந்தித்து, தான் இல்லாத நேரத்தில் தனது பணத்தை முறையாக நிர்வகிக்குமாறு கேட்டுக்கொண்டான்.
மத்தேயு 25:14
அந்த மனிதன் தனது வேலைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ’தாலந்துகள்’ எனப்படும் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்தான். அவன் ஒரு வேலைக்காரனுக்கு ஐந்து தாலந்துகளைக் கொடுத்தான். அவன் மற்றொரு வேலைக்காரனுக்கு இரண்டு தாலந்துகளைக் கொடுத்தான். அவன் கடைசி வேலைக்காரனுக்கு ஒரு தாலந்தைக் கொடுத்தான். பின்பு அவன் தனது பயணத்தைத் தொடங்கினான்.
மத்தேயு 25:15
ஐந்து தாலந்து பெற்ற வேலைக்காரன் கடினமாக உழைத்தான். அவன் அந்த தாலந்துகளைப் பயன்படுத்தி மேலும் ஐந்து சம்பாதித்தான்.
மத்தேயு 25:16.
இரண்டு தாலந்துகளைப் பெற்ற வேலைக்காரன் கடினமாக உழைத்தான். அவன் அந்தத் தாலந்துகளைப் பயன்படுத்தி இன்னும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்தான்.
மத்தேயு 25:17.
ஒரு தாலந்தைப் பெற்ற வேலைக்காரன் நிலத்தில் ஒரு குழி தோண்டி, அந்தத் தாலந்தைப் புதைத்து வைத்தான்.
(மத்தேயு 25:18).
சில காலத்திற்குப் பிறகு, அந்த மனிதன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தான். அவன் கொடுத்த தாலந்துகளை வைத்து அந்த வேலைக்காரர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவன் அறிய விரும்பினான்.
மத்தேயு 25:19.
ஐந்து தாலந்துகளைப் பெற்ற வேலைக்காரனும், இரண்டு தாலந்துகளைப் பெற்ற வேலைக்காரனும், தங்கள் எஜமான் இல்லாத நேரத்தில் தாங்கள் எப்படி இரண்டு மடங்கு லாபம் ஈட்டினோம் என்று அவனிடம் கூறினார்கள். எஜமான் மகிழ்ச்சியடைந்தான். அவர்கள் மிகவும் உண்மையுள்ளவர்களாக இருந்ததால், இன்னும் அதிகமானவற்றை அவர்கள் பொறுப்பில் ஒப்படைப்பதாக அவன் கூறினான். அவர்களைச் சந்தோஷமாக இருக்கும்படி அவன் கூறினான்.
மத்தேயு 25:20–23
ஒரு தாலந்தைப் பெற்ற வேலைக்காரன், தான் பயந்ததாகவும், அதனால் அந்தத் தாலந்தை நிலத்தில் மறைத்து வைத்ததாகவும் தன் எஜமானிடம் கூறினான். அவன் அந்தத் தாலந்தை மீண்டும் எஜமானிடமே திருப்பிக் கொடுத்தான்.
மத்தேயு 25:24–25
அந்த எஜமான் இந்த வேலைக்காரனைக் குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அவன் கொடுத்தவற்றைப் பயன்படுத்தி இன்னும் அதிகமான தாலந்துகளை அந்த வேலைக்காரன் சம்பாதித்திருக்க வேண்டும் என்று அவன் கூறினான். எஜமான் அந்தத் தாலந்தை எடுத்து, பத்து தாலந்துகளை வைத்திருந்த வேலைக்காரனிடம் கொடுத்தான். எஜமான் தான் கொடுத்த தாலந்துகளைப் பயன்படுத்தி, தனது ராஜ்யத்தை வளர்க்க தனது வேலைக்காரர்கள் உதவ வேண்டும் என்று விரும்பினான்.
மத்தேயு 25:26–29