வேதக் கதைகள்
பவுலும் சீலாவும்—கர்த்தரிடமிருந்து வந்த அற்புதங்களால் மீட்கப்பட்டனர்


அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9–40

பவுலும் சீலாவும்

கர்த்தரிடமிருந்து வந்த அற்புதங்களால் மீட்கப்பட்டனர்

பவுலும் சீலாவும் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள்.

கர்த்தர் பவுலையும் சீலாவையும் ஒன்றாகச் சேர்ந்து சுவிசேஷம் பிரசங்கிக்க அழைத்தார். அங்குள்ள சபைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்க அவர்கள் பல நகரங்களுக்குச் சென்றனர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:40–41; 16:4–8

பவுல் ஒரு தரிசனம் காண்கிறான்.

ஒரு இரவு, ஒரு தரிசனத்தில், பவுல் மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் தனது நகரத்திற்கு வரும்படி கேட்பதைக் கண்டான். பவுலும் சீலாவும் உடனே புறப்பட்டுச் சென்றனர். தேவன் அவர்களைப் போகச் சொன்னார் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9–10

பவுலும் சீலாவும் லீதியாள் என்ற பெண்ணிடம் பிரசங்கிக்கிறார்கள்.

அவர்கள் மக்கெதோனியாவை அடைந்தபோது, ​​லீதியாள் என்ற பெண் அவர்கள் போதிப்பதைக் கேட்டாள். கர்த்தர் லீதியாளின் இருதயத்தைத் திறந்தார். பவுல் போதித்ததை அவள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:13–15

லீதியாள் பவுலிடமும் சீலாவிடமும் அவர்கள் தன் வீட்டில் தங்கலாம் என்று கூறுகிறாள்.

பவுலும் சீலாவும் அங்கே இருக்கும்போது தன் வீட்டில் தங்கலாம் என்று லீதியாள் சொன்னாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15

மக்கள் பவுலையும் சீலாவையும் சந்தைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ஆனால் பவுலும் சீலாவும் அங்கு இருந்தது அனைவருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் போதித்த விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் பவுலையும் சீலாவையும் சந்தைக்கு அழைத்துச் சென்று, நகரத் தலைவர்களிடம், அவர்கள் பிரச்சனையை ஏற்படுத்துவதாகக் கூறினர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16–21

மக்கள் பவுல் மீதும் சீலா மீதும் கோபமாக இருக்கிறார்கள்.

மக்கள் பவுல் மீதும் சீலா மீதும் கோபமடைந்தனர். நகரத் தலைவர்கள் பவுல் மற்றும் சீலாவின் ஆடைகளைக் கிழித்து, அவர்களை அடிக்க வேண்டும் என்று கூறினர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22–23

பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

பின்னர் நகரத் தலைவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் அடைத்தனர். அவர்களது கால்களைக் கட்டி, அவர்களுக்கு ஒரு காவல் வைத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:23–24

பவுல் மற்றும் சீலாவின் சிறை சங்கிலிகள் தளர்த்தப்படுகின்றன.

அன்று இரவு, பவுலும் சீலாவும் ஜெபித்து, தேவனை துதித்துப் பாடினார்கள், மற்ற கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று, பூமி அதிர்ந்தது. சிறைச்சாலைக் கதவுகள் திறந்தன, கட்டுகள் அவிழ்க்கப்பட்டன.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25–26

கவலைப்பட வேண்டாம் என்று பவுல் காவலனிடம் கூறுகிறான்.

காவலன் விழித்தெழுந்து கதவுகள் திறந்திருப்பதைக் கண்டான். கைதிகள் தப்பித்துவிட்டதாகவும், அவர்களைத் தப்பிக்க அனுமதித்ததால் தனக்குப் பிரச்சினை ஏற்படும் என்றும் அவன் நினைத்தான். கவலைப்பட வேண்டாம் என்று பவுல் காவலனிடம் கூறினான். கைதிகள் அனைவரும் இன்னும் அங்கேயே இருந்தனர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27–28

பவுல் காவலனிடம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கச் சொல்கிறான்.

காவலன் பயந்து போனான். அவன் பவுலிடமும் சீலாவிடமும் மண்டியிட்டு, “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவர்கள் “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி” என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27–31

பவுலும் சீலாவும் காவலனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் சுவிசேஷத்தைக் போதிக்கிறார்கள்.

பவுலும் சீலாவும் காவலனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் சுவிசேஷம் போதித்தனர். பவுல் மற்றும் சீலாவின் காயங்களுக்குக் காவலன் சிகிச்சை அளித்தான். அன்று இரவு, அவனும் அவனுடைய குடும்பத்தினரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்!

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:32–33