அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9–40
பவுலும் சீலாவும்
கர்த்தரிடமிருந்து வந்த அற்புதங்களால் மீட்கப்பட்டனர்
கர்த்தர் பவுலையும் சீலாவையும் ஒன்றாகச் சேர்ந்து சுவிசேஷம் பிரசங்கிக்க அழைத்தார். அங்குள்ள சபைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்க அவர்கள் பல நகரங்களுக்குச் சென்றனர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:40–41; 16:4–8
ஒரு இரவு, ஒரு தரிசனத்தில், பவுல் மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் தனது நகரத்திற்கு வரும்படி கேட்பதைக் கண்டான். பவுலும் சீலாவும் உடனே புறப்பட்டுச் சென்றனர். தேவன் அவர்களைப் போகச் சொன்னார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9–10
அவர்கள் மக்கெதோனியாவை அடைந்தபோது, லீதியாள் என்ற பெண் அவர்கள் போதிப்பதைக் கேட்டாள். கர்த்தர் லீதியாளின் இருதயத்தைத் திறந்தார். பவுல் போதித்ததை அவள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:13–15
பவுலும் சீலாவும் அங்கே இருக்கும்போது தன் வீட்டில் தங்கலாம் என்று லீதியாள் சொன்னாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15
ஆனால் பவுலும் சீலாவும் அங்கு இருந்தது அனைவருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் போதித்த விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் பவுலையும் சீலாவையும் சந்தைக்கு அழைத்துச் சென்று, நகரத் தலைவர்களிடம், அவர்கள் பிரச்சனையை ஏற்படுத்துவதாகக் கூறினர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16–21
மக்கள் பவுல் மீதும் சீலா மீதும் கோபமடைந்தனர். நகரத் தலைவர்கள் பவுல் மற்றும் சீலாவின் ஆடைகளைக் கிழித்து, அவர்களை அடிக்க வேண்டும் என்று கூறினர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22–23
பின்னர் நகரத் தலைவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் அடைத்தனர். அவர்களது கால்களைக் கட்டி, அவர்களுக்கு ஒரு காவல் வைத்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:23–24
அன்று இரவு, பவுலும் சீலாவும் ஜெபித்து, தேவனை துதித்துப் பாடினார்கள், மற்ற கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று, பூமி அதிர்ந்தது. சிறைச்சாலைக் கதவுகள் திறந்தன, கட்டுகள் அவிழ்க்கப்பட்டன.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25–26
காவலன் விழித்தெழுந்து கதவுகள் திறந்திருப்பதைக் கண்டான். கைதிகள் தப்பித்துவிட்டதாகவும், அவர்களைத் தப்பிக்க அனுமதித்ததால் தனக்குப் பிரச்சினை ஏற்படும் என்றும் அவன் நினைத்தான். கவலைப்பட வேண்டாம் என்று பவுல் காவலனிடம் கூறினான். கைதிகள் அனைவரும் இன்னும் அங்கேயே இருந்தனர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27–28
காவலன் பயந்து போனான். அவன் பவுலிடமும் சீலாவிடமும் மண்டியிட்டு, “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவர்கள் “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி” என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27–31
பவுலும் சீலாவும் காவலனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் சுவிசேஷம் போதித்தனர். பவுல் மற்றும் சீலாவின் காயங்களுக்குக் காவலன் சிகிச்சை அளித்தான். அன்று இரவு, அவனும் அவனுடைய குடும்பத்தினரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்!
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:32–33