வேதக் கதைகள்
இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை சார்ந்திருத்தல்—அவருடைய கிருபையால் இரட்சிக்கப்படுதல்


ரோமர் 3:21–28; 5:1–11; 6:3–6

இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை சார்ந்திருத்தல்

அவருடைய கிருபையால் இரட்சிக்கப்படுதல்

ஜனங்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்படுதல்

பல இடங்களிலிருந்தும் மக்கள் இயேசு கிறிஸ்துவின் சபையில் இணைந்தனர். சபை உறுப்பினர்கள் பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ரோமர் 1:7

மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பற்றி இரண்டு பேர் பேசுகிறார்கள்.

பரிசுத்தவான்களில் சிலர் யூதர்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்தை இப்போதும் பின்பற்றுகிறவர்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ரோமர் 2:14–15; 23–29

பவுல் ஒரு கடிதம் எழுதுகிறான்.

பரிசுத்தவான்களுக்கு இந்தக் கேள்விகள் இருப்பதை பவுல் அறிந்திருந்தான். அவன் ரோமாபுரியில் உள்ள பரிசுத்தவான்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற முயற்சிப்பதன் மூலம் யாரும் இரட்சிக்கப்பட முடியாது என்று அவன் அவர்களிடம் கூறினான். நாம் அனைவரும் பாவம் செய்கிறோம் என்று அவன் விளக்கினான். இரட்சிக்கப்பட, ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரைப் பின்பற்ற வேண்டும்.

ரோமர் 3:20–23

பவுலின் கடிதத்தைப் படிக்கும் இரண்டு ஆண்கள்.

நம்முடைய பாவங்களைத் தம்மேல் சுமக்கஇயேசு கிறிஸ்துவை தேவன் அனுப்பினார் என்று பவுல் போதித்தான். இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நாம் மனந்திரும்பி நமது பாவங்களுக்காக மன்னிக்கப்பட முடியும்.

ரோமர் 3:24–31

இரண்டு ஆண்கள் ஒன்றாக திருவிருந்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மன்னிப்பின் வரத்தையும் மற்றும் நல்ல காரியங்களைச் செய்வதற்கான பலத்தையும் தருகிறார் என்று பவுல் போதித்தான். இந்த அன்பான வரம் இயேசு கிறிஸ்துவின் கிருபை என்று அழைக்கப்படுகிறது, மேலும் அது நம்மை நம்பிக்கையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகிறது. இயேசுவைப் போலவே நாமும் ஞானஸ்நானம் பெறும்போது, ​​அது இயேசுவின் சீஷராக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவது போன்றது என்று பவுல் கூறினான்.

ரோமர் 5:1–11; 6:3–6