எபேசியர் 6:11–17
தேவனுடைய சர்வாயுதவர்க்கம்
ஆவிக்குரிய ரீதியாக பாதுகாப்பாக இருத்தல்
நாம் அனைவரும் தீமைக்கு எதிரான ஆவிக்குரிய போராட்டத்தில் இருக்கிறோம் என்று பவுல் எபேசுவில் உள்ள பரிசுத்தவான்களுக்குப் போதித்தான். தங்கள் உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்க போர்க்கவசம் அணியும் வீரர்களைப் போலவே, நம் ஆத்துமாவைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவனின் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை நாம் அணியலாம்.
எபேசியர் 6:11–13
பவுல் ஒரு போர்வீரனின் கவசத்தை, நம்மை ஆவிக்குரிய ரீதியில் பாதுகாக்கும் பொருட்களுடன் ஒப்பிட்டான். உதாரணமாக, சத்தியம் என்பது நம் இடுப்பைச் சுற்றியுள்ள ஒரு கச்சை அல்லது பெல்ட்டைப் போன்றது என்று அவன் கூறினான்.
எபேசியர் 6:14
அடுத்து, நீதி என்பது நம் இருதயத்தைப் பாதுகாக்கும் ஒரு மார்புக்கவசத்தைப் போன்றது என்று பவுல் கூறினான்.
எபேசியர் 6:14
இயேசு கிறிஸ்துவின் சமாதான சுவிசேஷம், நம் கால்களைப் பாதுகாக்க நாம் அணியும் காலணிகளைப் போன்றது.
எபேசியர் 6:15
இயேசு கிறிஸ்துவின் மீதான நமது விசுவாசம் சாத்தானிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு கேடயம் போன்றது, ஒரு கேடயம் வீரர்களை அவர்களின் எதிரிகளின் அம்புகளிலிருந்து பாதுகாப்பது போல.
எபேசியர் 6:16
நம் தலையையும் மனதையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் தலைக்கவசம் போன்றது இரட்சிப்பு என்று பவுல் கூறினான்.
எபேசியர் 6:17
இறுதியாக, பவுல் ஆவியும் தேவனுடைய வார்த்தையும் ஒரு பட்டயத்தைப் போன்றது என்று கூறினான்.
எபேசியர் 6:17
நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியையும் அணிந்து கொள்ளும்போது, பிசாசின் பொய்கள் மற்றும் சோதனைகளுக்கு எதிராக தைரியமாக நிற்க முடியும். நமது ஆத்துமாவைப் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவும் வகையில் தேவன் நமக்கு இந்த சர்வாயுதவர்க்கத்தைக் கொடுத்தார்.
எபேசியர் 6:11–13