லூக்கா 7:1–10
இயேசு ஒரு நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை குணப்படுத்துதல்
ஒரு ரோமானியப் படைத்தலைவன் மகத்தான விசுவாசத்தை வெளிப்படுத்துதல்
இயேசு அடிக்கடி போதித்த கப்பர்நகூம் என்ற ஊரில், ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதி வாழ்ந்து வந்தான். அவன் ஒரு பெரிய படைவீரர் குழுவின் தலைவனாக இருந்தான்.
லூக்கா 7:1-2
இந்த நூற்றுக்கு அதிபதிக்கு மிகவும் பிரியமான ஒரு வேலைக்காரன் இருந்தான். அந்த வேலைக்காரன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தான்.
லூக்கா 7:2
நூற்றுக்கு அதிபதி யூதராக இல்லாவிட்டாலும், அவன் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவன் இயேசுவிற்கு பெரிய அற்புதங்களைச் செய்யும் வல்லமை உண்டு என்று நம்பினான். இயேசு வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கும்படி கேட்க, அவன் யூதர்களின் தலைவர்களில் சிலரை அனுப்பினான்.
லூக்கா 7:3-4
தலைவர்கள் இயேசுவிடம் நூற்றுக்கு அதிபதியையும் அவனது வேலைக்காரனையும் பற்றிக் கூறினர். இந்த நூற்றுக்கு அதிபதி யூதர்களை அன்புடன் நடத்துவதாக அவர்கள் கூறினர் இயேசு நூற்றுக்கு அதிபதியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆனால் அவர் அங்கு செல்வதற்கு முன்பு, நூற்றுக்கு அதிபதியின் சில நண்பர்கள் இயேசுவைத் தடுத்தனர். வீட்டிற்குள் வர வேண்டாம் என்று அவர்கள் சொன்னார்கள்.
லூக்கா 7:4-6
அந்த நூற்றுக்கு அதிபதி, இயேசு தனது வீட்டிற்குள் வர அவன் தகுதியானவன் அல்ல என்று நினைப்பதாக அவன் நண்பர்கள் சொன்னார்கள் இயேசு தனது வேலைக்காரனை தூரத்திலிருந்து கூட குணப்படுத்த முடியும் என்று அவன் நம்பினான்!
லூக்கா 7:6-8
நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தைக் கண்டு இயேசு வியந்தார். அவர் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் கண்டதில்லை என்று கூறினார்.
லூக்கா 7:9
நூற்றுக்கு அதிபதியின் நண்பர்கள் அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, வேலைக்காரன் முழுமையாகக் குணமடைந்திருந்தான். இயேசு, அந்த நூற்றுக்கு அதிபதி விசுவாசித்தது போலவே, அவனது வேலைக்காரனை குணப்படுத்தினார்.
லூக்கா 7:10