மாற்கு 8:22–25
இயேசு ஒரு குருடனை சுகமாக்குதல்
காலப்போக்கில் நடைபெறும் ஒரு குணமடைதல்
பெத்சாயிதா எனப்படும் ஊரிலே, மக்கள் சிலர், குருடன் ஒருவனை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவன் பார்வை பெறும்படி, இயேசு அவனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
மாற்கு 8:22
இயேசு அந்த மனுஷனுடைய கையைப்பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோனார். பின்னர் இயேசு, அந்த மனுஷன்மேல் தம்முடைய கைகளை வைத்து, அவனை ஆசீர்வதித்தார்.
மாற்கு 8:23
இயேசு அந்த மனுஷனிடம், அவன் எதையாவது காண்கிறானா என்று கேட்டார். அவன் கண்களை ஏறெடுத்து பார்த்தான். அந்த மனுஷன் பார்க்கத் தொடங்கினான், ஆனால் அவன் பார்வை இன்னும் மங்கலாக இருந்தது. நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான்.
மாற்கு 8:23–24
இயேசு அந்த மனுஷனை மீண்டுமாய் ஆசீர்வதித்தார். இந்த முறை, அவன் ஏறிட்டு பார்த்தபோது, அனைத்தும் தெளிவாக தெரிந்தது. இயேசு அவனை குணப்படுத்தியிருந்தார்!
மாற்கு 8:25