மாற்கு 2:1–12
இயேசு நடக்க முடியாத ஒரு மனுஷனை குணப்படுத்துதல்
உடல் மற்றும் ஆவிக்குரிய சுகமடைதல்
இயேசுவின் போதனைகளைக் கேட்க அநேகர் விரும்பினர். ஜனக்கூட்டம் நிறைந்த ஒரு வீட்டில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார்.
மாற்கு 2:1–2
நடக்க முடியாத ஒரு நண்பருடன் நான்கு பேர் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அவரை ஒரு படுக்கையில் சுமக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் நண்பரை இயேசுவிடம் அழைத்து வர விரும்பினர், ஆனால் வீடு மிகவும் கூட்டமாக இருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
மாற்கு 2:3–4
எனவே அவர்கள் தங்கள் நண்பரை வீட்டின் கூரைக்கு தூக்கிச் சென்றனர். அவர்கள் வீட்டின் கூரையின் ஒரு பகுதியை அகற்றி, தங்கள் நண்பனை அவரது படுக்கையோடு கூட்டத்தின் நடுவே, இயேசுவின் முன் கீழிறக்கினர்.
மாற்கு 2:4
“இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.”
மாற்கு 2:5
இதைக் கேட்ட யூதத் தலைவர்களில் சிலர் வருத்தமடைந்தனர். தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
மாற்கு 2:6–7
அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள, அவர் ஒரு அற்புதத்தைச் செய்தார். “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று நடக்க முடியாத அம்மனுஷனிடம் அவர் கூறினார். அம்மனுஷன் எழுந்து நடந்து போனான். அனைவரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினர்.
மாற்கு 2:8–12