அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:5–24
சீமோனும் தேவ வல்லமையும்
தேவனின் ஆசாரியத்துவத்தைப் பற்றி கற்றல்
சமாரியாவில் சீமோன் என்ற ஒருவன் வசித்து வந்தான். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்டபோது, அவன் விசுவாசித்தான். தேவ வல்லமையால் இயேசுவின் சீஷர்கள் செய்த அற்புதங்களைக் கண்டு அவன் வியப்படைந்தான். சீமோனும், சமாரியாவில் இருந்த பல ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:5–13
சமாரியாவில் மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டனர். பேதுருவும் யோவானும் சமாரியாவுக்குச் சென்றார்கள். தேவனின் வல்லமையையும், ஆசாரியத்துவத்தையும் பயன்படுத்தி, ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மீது தங்கள் கைகளை வைத்து, அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் வரத்தைக் கொடுத்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:14–17
பேதுருவும் யோவானும் இதைச் செய்வதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, “எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும்” என்றான். அவனும் பரிசுத்த ஆவியின் வரத்தைக் கொடுக்க ஏதுவாக தேவனின் ஆசாரியத்துவத்தை விலைக்கு வாங்க விரும்பினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18–19
தேவனின் வல்லமையை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று பேதுரு விளக்கினான். இது அவரிடமிருந்து கிடைக்கும் வரம். சீமோனின் மனம் மாற வேண்டும் என்று பேதுரு அவனிடம் கூறினான். மனந்திரும்பி, மன்னிப்புக்காக தேவனிடம் ஜெபிக்குமாறு அவன் சீமோனை அழைத்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:20–23
சீமோன் வருந்தினான். தன்னை மாற்றிக்கொள்ள உதவ ஜெபிக்கும்படி பேதுருவிடம் கேட்டான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:24