உத்தமமான பிறப்புரிமையின் இளைஞர்களே
உடன்படிக்கையின் பிள்ளைகளாகிய உங்களை, அவரது அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வீட்டிற்கு தம்மிடத்தில் அழைத்து வரும் அவரது பணிக்கு உதவுவதற்காக தேவன் நம்புகிறார்.
மூப்பர் ஸ்டீவன்சன், இது ஒருபோதும் மறக்க முடியாத மாநாடு.
தேவனுக்கு குழந்தைகளின் கடிதங்கள் என்ற சிறிய புத்தகத்தை எங்கள் குடும்பம் எப்போதும் ரசித்திருக்கிறது. சில இங்கே உள்ளன.
“அன்புள்ள தேவனே, மக்களை இறக்க அனுமதித்து, புதியவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, இப்போது உங்களிடம் உள்ளவர்களை மட்டும் ஏன் வைத்துக்கொள்ளக் கூடாது?”
“உங்களுக்கு மட்டும் எப்படி பத்து விதிகள் உள்ளன, ஆனால் எங்கள் பள்ளியில் மில்லியன்கள் உள்ளன?”
“நீங்கள் டான்சில்களை மீண்டும் வெளியே எடுக்கப் போகிறீர்கள் என்றால் ஏன் உள்ளே வைத்தீர்கள்?”
இன்று இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை, ஆனால் இளைஞர்களிடம் இருந்து நான் அடிக்கடி கேட்கும் கேள்வியை பற்றி நான் பேச விரும்புகிறேன். மங்கோலியாவின் உலான்பாதரில் இருந்து தாமஸ், ஐடஹோ வரை கேள்வி ஒன்றுதான்: “ஏன்? பிற்கால பரிசுத்தவான்கள் ஏன் மற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக வாழ வேண்டும்?”
வித்தியாசமாக இருப்பது கடினம் என்று எனக்குத் தெரியும்—குறிப்பாக நீங்கள் இளமையாக இருக்கும்போது, மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒவ்வொருவரும் பொருத்தமாக இருக்கவிரும்புகிறார்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சைபர் பயமுறுத்தல் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இன்றைய டிஜிட்டல் உலகில் அந்த ஆசை ஆரோக்கியமற்ற விகிதத்தில் பெரிதாக்கப்படுகிறது.
அப்படியென்றால், அத்தனை அழுத்தங்களுடனும், பிற்காலப் பரிசுத்தவான்கள் ஏன் வித்தியாசமாக வாழ்கிறார்கள்? பல நல்ல பதில்கள் உள்ளன: ஏனென்றால் நீங்கள் தேவனின் பிள்ளை. ஏனென்றால் நீங்கள் கடைசி நாட்களுக்காக பாதுகாத்து வைக்கப்பட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்.
ஆனால் அந்த பதில்கள் உங்களை எப்போதும் தனித்து வைப்பதில்லை. ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளை. இப்போது பூமியில் உள்ள அனைவரும் கடைசி நாட்களில் இங்கு அனுப்பப்பட்டனர். இன்னும் நீங்கள் முயற்சி செய்யும் விதத்தில் எல்லோரும் ஞான வார்த்தை அல்லது கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வதில்லை. இந்த சபையில் உறுப்பினர்களாக இல்லாத கிறிஸ்துவின் பல துடிப்பான சீஷர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் உங்களைப் போன்று ஊழியம் செய்வதில்லை மற்றும் முன்னோர்களுக்காக கர்த்தரின் வீடுகளில் நியமனங்களை செய்வதில்லை. அதற்கு மேலும் இருக்க வேண்டும், இருக்கிறது.
இன்று என் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிற ஒரு கூடுதல் காரணத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். 1988 இல், ரசல் எம். நெல்சன் என்ற இளம் அப்போஸ்தலர், ப்ரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் “உடன்படிக்கைக்கு நன்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில், அப்போதைய மூப்பர் நெல்சன், தேவனுடன் உடன்படிக்கைகளை உருவாக்குவதற்கும், அதைக் கடைபிடிப்பதற்கும் நமது ஒழுக்க சுயாதீனத்தைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் நம் முன்னோர்களுடன் செய்துள்ள நித்திய உடன்படிக்கையின் வாரிசுகளாக மாறுகிறோம் என்று விளக்கினார். மற்றொரு வழியில், நாம் “உடன்படிக்கையின் பிள்ளைகள்” ஆகிறோம் என சொல்லப்பட்டது. அது நம்மை வேறுபடுத்துகிறது. பிறப்புரிமை உட்பட நம் முற்பிதாக்கள் மற்றும் முன்தாய்மார்கள் பெற்ற அதே ஆசீர்வாதங்களை அது நமக்கு வழங்குகிறது.
பிறப்புரிமை! அந்த வார்த்தையை நீங்கள் கேட்டிருக்கலாம். நாம் அதைப் பற்றி பாடல்களையும் பாடுகிறோம்: “உத்தமமான பிறப்புரிமையின் இளைஞர்களே, தொடரவும், தொடரவும், தொடரவும்!” இது ஒரு அழுத்தமான வார்த்தை. ஆனால் அதன் அர்த்தம் என்ன?
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், ஒரு தந்தை இறந்துவிட்டால், அவரது பிறப்புரிமை பெற்ற மகன் தனது தாய் மற்றும் சகோதரிகளின் கவனிப்புக்கு பொறுப்பானவர். அவரது சகோதரர்கள் தங்கள் சொத்தைப் பெற்று, உலகில் முன்னேற்றம் அடைய புறப்பட்டுச் சென்றனர், ஆனால் பிறப்புரிமை பெற்ற மகன் எங்கும் செல்லவில்லை. அவர் திருமணம் செய்துகொண்டு தனது சொந்த குடும்பத்தை பெற்றிருப்பார், ஆனால் அவர் தனது தந்தையின் சொத்து விவகாரங்களை நிர்வகிக்க தனது நாட்கள் முடியும் வரை தங்கியிருப்பார். இந்த கூடுதல் பொறுப்பு காரணமாக, அவருக்கு கூடுதல் அளவு சொத்து வழங்கப்பட்டது. வழி நடத்துவதும் மற்றும் மற்றவர்களைக் கவனிப்பதும் என்ன மிகுதியாகவா கேட்கப்படுகிறது? அவருக்கு வழங்கப்பட்ட கூடுதல் சொத்தை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது அப்படியல்ல.
இன்று நாம் பூமியிலுள்ள குடும்பங்களில் உங்கள் பிறப்பு வரிசை அல்லது பழைய ஏற்பாட்டு பாலின பாத்திரங்களைப் பற்றிப் பேசவில்லை. கிறிஸ்துவோடும் பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவோடும் பிரவேசிக்க நீங்கள் தேர்ந்தெடுத்த உடன்படிக்கை உறவின் காரணமாக கிறிஸ்துவுடன் சுதந்தரருமாக நீங்கள் பெறும் சொத்தைப் பற்றி நாம் பேசுகிறோம். நீங்கள் சிறப்பாக வழிநடத்தி அவர்களுக்கு சேவை செய்யும்படிக்கு, அவருடைய மற்ற குழந்தைகளை விட வித்தியாசமாக வாழ வேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பது மிகவும் அதிகமானதா? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை— உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய இரண்டையும் கருத்தில் கொள்ளும்போது அப்படி அல்லவே.
உங்கள் பிறப்புரிமை என்பது மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர் என்று அர்த்தமா? இல்லை, ஆனால் மற்றவர்கள் சிறப்பாக இருக்க உதவுமாறு நீங்கள் எதிர்பார்க்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பிறப்புரிமை என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அர்த்தமா? ஆம், ஆனால் மற்றவர்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவர்களுக்கு சேவை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தேவனின் அன்பிற்கு உங்கள் பிறப்புரிமை சான்றா? ஆம், ஆனால் அதைவிட முக்கியமாக, அது அவருடைய நம்பிக்கைக்கு சான்றாகும்.
நேசிக்கப்படுவது ஒன்று, முழுமையாக நம்பப்படுவது மற்றொரு விஷயம். இளைஞரின் பெலனுக்காக வழிகாட்டியில் நாம் வாசிக்கிறோம், “உங்கள் பரலோக பிதா உங்களை நம்புகிறார். உங்களை அவருடன் பிணைத்து, அவருடைய வல்லமையை உங்கள் வாழ்வில் கொண்டுவரும் சுவிசேஷத்தின் பரிபூரணம் மற்றும் பரிசுத்த நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் உட்பட, அவர் உங்களுக்கு பெரும் ஆசீர்வாதங்களை அளித்துள்ளார். அந்த ஆசீர்வாதங்களுடன் கூடுதல் பொறுப்பும் வருகிறது. நீங்கள் உலகில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவர் அறிவார், அதற்கு பல சமயங்களில் உலகத்திலிருந்து வேறுபட்டிருப்பது தேவைப்படுகிறது.
நமது பூலோக அனுபவம், தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு அனுப்பிய பயணக் கப்பலுக்கு ஒப்பிடப்பட முடியும். பயணம் கற்கவும், வளரவும், மகிழ்ச்சியாக இருக்கவும், முன்னேறவும் வாய்ப்புகள் நிறைந்தது, ஆனால் அது ஆபத்துகள் நிறைந்தது. தேவன் தம்முடைய எல்லா குழந்தைகளையும் நேசிக்கிறார் மற்றும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டவர். அவர்களில் யாரையும் இழக்க அவர் விரும்பவில்லை, எனவே அவர் தனது குழுவில் உறுப்பினர்களாக இருக்கத் தயாராக உள்ளவர்களை அழைக்கிறார்—அது நீங்கள் தான். உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் அதைக் கடைப்பிடிப்பதற்கும் உங்கள் விருப்பத்தின் காரணமாக, அவர் உங்களுக்கு அவருடைய நம்பிக்கையை வழங்குகிறார். நீங்கள் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கும்படி அவர் நம்பி உங்களை பணிக்கிறார். ஏனெனில் நீங்கள் செய்யவேண்டுமென அவர் நம்பும் முக்கியமான பணியின் காரணமாகவே.
அதைப்பற்றி சிந்தியுங்கள்! தேவன் உங்களை நம்புகிறார்—பூமியில் உள்ள அனைத்து மக்கள், உடன்படிக்கையின் குழந்தைகள், அவருடைய குழு உறுப்பினர்கள்—அவரது அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வரும் அவரது பணிக்கு உதவுவார். தலைவர் ப்ரிகாம் யங் ஒருமுறை, “பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் இந்த சிறிய அளவு மக்களைப் பார்க்கிறார்கள்“ என்று கூறியதில் ஆச்சரியமில்லை.
பூமி என்று அழைக்கப்படும் இந்த உல்லாசக் கப்பலில் நீங்கள் சுற்றிப் பார்த்தால், மற்றவர்கள் லவுஞ்ச் நாற்காலிகளில் அமர்ந்து குடிப்பதையும், சூதாட்ட விடுதிகளில் சூதாடுவதையும், மிகவும் வெளிப்படும்படியான ஆடைகளை அணிவதையும், செல்போன்களில் முடிவில்லாமல் ஸ்க்ரோலிங் செய்வதையும், எலக்ட்ரானிக் கேம்களை விளையாடி அதிக நேரத்தை வீணடிப்பதையும் நீங்கள் காணலாம். ஆனால் “ஏன் என்னால் அதைச் செய்ய முடியாது?” என ஆச்சரியப்படுவதற்கு பதிலாக, நீங்கள் ஒரு சாதாரண பயணி அல்ல என்பதை நினைவில் கொள்ளலாம். நீங்கள் குழுவில் ஒரு உறுப்பினர். பயணிகளுக்கு இல்லாத பொறுப்புகள் உங்களுக்கு உள்ளன. சகோதரி அர்டெத் காப் ஒருமுறை கூறியது போல், “கடற்கரையில் உள்ள மற்ற நீச்சல் வீரர்களைப் போல நீங்கள் தோற்றமளித்தால் நீங்கள் ஒரு உயிர்[பாதுகாவலராக] இருக்க முடியாது.”
அனைத்து கூடுதல் கடமைகளால் நீங்கள் அதைரியமடைவதற்கு முன்பு, மற்ற பயணிகளுக்கு கிடைக்காத ஒன்றைக் குழு உறுப்பினர்கள் பெறுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: இழப்பீடு. மூப்பர் நீல் எல். ஆண்டர்சன் சொன்னார், “நீதிமான்களுக்கு ஈடுசெய்யும் ஆவிக்குரிய வல்லமை உள்ளது,” “அதிக உறுதிப்பாடு, அதிக திடமனம் மற்றும் அதிக நம்பிக்கை” ஆகியவை அடங்கும். முற்காலத்து ஆபிரகாமைப் போலவே, நீங்கள் அதிக மகிழ்ச்சியையும் சமாதானத்தையும், அதிக நீதியையும், அதிக அறிவையும் பெறுவீர்கள். உங்கள் இழப்பீடு பரலோகத்தில் உள்ள மாளிகை மற்றும் தங்கத்தால் அமைக்கப்பட்ட தெருக்கள் மட்டுமல்ல. பரலோக பிதா தன்னிடம் உள்ள அனைத்தையும் உங்களுக்குக் கொடுப்பது எளிதாக இருக்கும். எல்லாவிதமாகவும் அவர்போல நீங்கள் ஆவதற்கு உதவுவதே அவருடைய விருப்பம். எனவே, உங்கள் அர்ப்பணிப்புகள் உங்களிடமிருந்து அதிகமாகக் கோருகின்றன, ஆனால் தேவன் அவ்வாறே உங்களை அதிகமாக உருவாக்குகிறார்.
இது “யாரிடமும் கேட்பது அதிகம்தான், ஆனால் நீங்கள் யாரோ அல்ல”! நீங்கள் உத்தமமான பிறப்புரிமையின் இளைஞர்கள். தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உடன்படிக்கை உறவு நம்பிக்கையின் உறவு இதில் நீங்கள் அவர்களின் கிருபையை அதிகமாகப் பெறலாம்—அவர்களின் தெய்வீக உதவி, வலிமையின் தரிப்பித்தல் மற்றும் சாத்தியமாக்கும் வல்லமை. அந்த வல்லமை வெறும் ஆசையான நினைப்போ, அதிர்ஷ்ட வசீகரமோ, சுயதிருப்தியின் தீர்க்கதரிசனமோ அல்ல. அது உண்மையானது.
உங்கள் பிறப்புரிமைப் பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றும்போது, நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. திராட்சைத் தோட்டத்தின் கர்த்தர் உங்களோடு பிரயாசப்படுகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் கைகோர்த்து செயல்படுகிறீர்கள். ஒவ்வொரு புதிய உடன்படிக்கையுடனும்—அவருடனான உங்கள் உறவு ஆழமடையும் போது—நீங்கள் உறுதியாக ஒன்றாக இணைக்கப்படும் வரை ஒருவரையொருவர் மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறீர்கள். அவருடைய கிருபையின் அந்த பரிசுத்தமான சின்னத்தில், இரட்சகர் எப்படி வாழ்ந்தார் என்ற—உலகிலிருந்து வித்தியாசமாக வாழ ஆசை மற்றும் பெலன் இரண்டையும் நீங்கள் காண்பீர்கள். இயேசு கிறிஸ்து உங்களைப் பற்றிக்கொண்டதால் நீங்கள் இதைப் பெற்றீர்கள்!
2 நேபியில் 2:6 இல் நாம் வாசிக்கிறோம், “ஆகையால், மீட்பு பரிசுத்த மேசியாவிலும், அவர் மூலமுமே வருகிறது. ஏனெனில் அவர் கிருபையிலும், சத்தியத்திலும் நிறைந்திருக்கிறார்.” அவர் சத்தியம் நிறைந்திருப்பதால், அவர் உங்களை உண்மையாக இருப்பதுபோலவே பார்க்கிறார்—குறைபாடுகள், பலவீனங்கள், வருத்தங்கள் மற்றும் அனைத்தையும். அவர் கிருபையால் நிரம்பியிருப்பதால், நீங்கள் இருக்க முடிவதுபோலவே அவர் உங்களைப் பார்க்கிறார். நீங்கள் இருக்கும் இடத்தில் அவர் உங்களைச் சந்திக்கிறார், மேலும் நீங்கள் மனந்திரும்பவும், மேம்படவும், வெற்றிபெறவும், மேலோங்கவும் உதவுகிறார்.
“உத்தமமான பிறப்புரிமையின் இளைஞரே, தொடருங்கள், தொடருங்கள், தொடருங்கள்!” நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்—நீங்கள் நம்பகமானவர்— இன்றும், 20 வருடங்களிலும், என்றென்றும், என்று நான் சாட்சியம் கூறுகிறேன். உங்களின் பிறப்புரிமையை கூழுக்கு விற்காதீர்கள். எல்லாவற்றையும் ஒன்றுமில்லாததற்கு வியாபாரம் செய்யாதீர்கள். உலகை மாற்ற நீங்கள் பிறந்திருக்கும்போது உலகம் உங்களை மாற்ற அனுமதிக்காதீர்கள். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.