வேதக் கதைகள்
யனகிடா குடும்பம்


“யனகிடா குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“யனகிடா குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1950–1951

2:30

யனகிடா குடும்பம்

தசமபாகமும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும்

டோஷிகோ மற்றும் டோகிச்சி யனகிடா அவர்களின் குடும்பத்துடன்.

டோஷிகோ மற்றும் டோகிச்சி யனகிடா ஆகியோர் ஜப்பானில் வசித்து வந்தனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்பி அவருடைய சபையில் சேர்ந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் ஜப்பானில் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஒரு போர் பல வீடுகளையும் கட்டிடங்களையும் அழித்துவிட்டது. டோஷிகோவும் டோகிச்சியும் தங்கள் குடும்பத்திற்கு ஒரு வீடு கட்ட விரும்பினர், ஆனால் அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள்.

Saints, 3:543

யனகிடாக்கள் சபை ஊழியக்காரர்களுடன் பேசுதல்.

யனகிடாக்கள் தசமபாகம் செலுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிந்திருந்தனர், ஆனால் அவர்களால் முடியுமா என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. டோஷிகோ ஒரு ஊழியக்காரரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். “தசமபாகம் எங்களுக்கு மிகவும் கடினம்,” என்று அவள் கூறினாள். அவர்கள் தங்கள் தசமபாகத்தை செலுத்தினால், சொந்த வீடு கட்டும் இலக்கை அடைய கர்த்தர் அவர்களுக்கு உதவுவார் என்று ஊழியக்காரர் உறுதியளித்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 119; Saints, 3:543–44

டோஷிகோவும் டோகிச்சியும் தொடர்ந்து தசமபாகம் செலுத்துவது என்று முடிவு செய்கிறார்கள்.

டோஷிகோ மற்றும் டோகிச்சிக்கு உறுதியாக தெரியவில்லை. அவர்களிடம் தங்கள் மகனுக்குப் பள்ளி மதிய உணவு வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லை. ஆனால் அவர்கள் கர்த்தரை நம்பி தசமபாகம் செலுத்த முடிவு செய்தனர்.

Saints, 3:543–44

தங்கள் எதிர்கால வீடாக அமையும் இடத்திற்கு அருகில் நிற்கும் யனகிடாக்கள்.

கர்த்தர் யனகிடா குடும்பத்தை ஆசீர்வதித்தார். விரைவில் அவர்கள் நிலம் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர்.

Saints, 3:544

யனகிடாக்களிடம் அவர்களின் வீட்டைக் கட்ட முடியாது என்று கூறும் ஒரு கட்டுமானத் தொழிலாளி.

ஒரு நாள் ஒரு ஆய்வாளர் வந்தார். அவர்களுடைய நிலத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அங்கு வீடு கட்ட முடியாது என்றும் அவர் கூறினார். அவர் தொழிலாளர்களை நிறுத்தச் சொன்னார்.

Saints, 3:544

ஊழியக்காரர்களில் ஒருவர் குடும்பத்துடன் பேசுகிறார்.

யனகிடாக்கள் மிகவும் சோகமாக இருந்தனர். அவர்கள் ஊழியக்காரர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். ஊழியக்காரர்கள் யனகிடாக்களுடன் உபவாசம் இருந்து ஜெபிப்பதாக சொன்னார்கள்.

Saints, 3:545

குடும்ப வீட்டின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்குகின்றன.

பின்னர், மற்றொரு ஆய்வாளர் வந்தார். அவர்களின் நிலப் பிரச்சினையை சரிசெய்ய முடியும் என்று அவர் கூறினார். யனகிடாக்கள் தங்கள் வீட்டைக் கட்ட முடியும். “நீங்கள் இருவரும் ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும்,” என்று ஆய்வாளர் டோஷிகோ மற்றும் டோகிச்சியிடம் கூறினார். தேவன் தங்களை ஆசீர்வதித்ததை அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் அவரை நம்பி தசமபாகம் செலுத்தியதற்காக மகிழ்ச்சியடைந்தார்கள்.

Saints, 3:545