“டெசிடேரியாவின் கனவு,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“டெசிடேரியாவின் கனவு,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1880–1886
டெசிடேரியாவின் கனவு
மெக்சிகோவில் கர்த்தரால் வழிநடத்தப்படுதல்
மெக்சிகோவில் உள்ள நோபாலாவில் டெசிடெரியா யானஸ் வசித்து வந்தார். ஒரு இரவு, மெக்சிகோ நகரில் ஒரு சிறிய புத்தகம் தயாரிக்கப்படுவது குறித்து டெசிடேரியா கனவு கண்டார். இது வாஸ் டி அமோநஸ்டேசன் அல்லது எச்சரிக்கையின் குரல் என்று அழைக்கப்பட்டது. டெசிடேரியா விழித்தெழுந்தபோது, அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்.
Saints, 2:477
ஆனால் மெக்சிகோ நகரம் வெகு தொலைவில் இருந்தது, டெசிடேரியா மிகவும் வயதானதால் இவ்வளவு நீண்ட பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புவதாக அவர் உணர்ந்தார். அதனால் அவர் தன் மகன் ஜோஸிடம் அந்தக் கனவைப் பற்றிச் சொன்னார். அந்தப் புத்தகம் முக்கியமானது என்று அவரும் நம்பினார். அவர் தன் அம்மாவிடம் அதை அவருக்காகக் கண்டுபிடித்துத் தருவதாகச் சொன்னார்.
Saints, 2:478
ஜோஸ் மெக்சிகோ நகரத்திற்கு வந்தபோது, தெருக்கள் பரபரப்பாகவும், சத்தமாகவும், மக்களால் நிறைந்தும் இருந்தன. இவ்வளவு நெரிசலான இடத்தில் அவரால் எப்படிப் புத்தகத்தைக் கண்டுபிடிக்க முடியும்?
Saints, 2:478
சில நாட்களுக்குப் பிறகு, ஜோஸ் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் என்ற ஊழியக்காரரைச் சந்தித்தார். வாஸ் டி அமோநஸ்டேசன் என்ற புத்தகத்தை அச்சடிக்கும் பணியில் இருப்பதாக ஜேம்ஸ் கூறினார்.
Saints, 2:478
ஜோஸ் மிகவும் உற்சாகமாக இருந்தார்! அவர் தன் தாயின் கனவைப் பற்றி ஜேம்ஸிடம் சொன்னார். இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், மார்மன் புஸ்தகத்தைப் பற்றியும் மக்களுக்குக் கற்பிக்க ஊழியக்காரர்கள் வாஸ் டி அமோநஸ்டேசன் பயன்படுத்துவார்கள் என்று ஜேம்ஸ் விளக்கினார்.
Saints, 2:478
“வாஸ் டி அமோநஸ்டேசன்” இன்னும் முடிக்கப்படவில்லை, மேலும் மார்மன் புஸ்தகம் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால் ஜேம்ஸ் ஜோஸுக்கும் அவரது தாயாருக்கும் இயேசு கிறிஸ்து, மார்மன் புஸ்தகம் மற்றும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை பற்றி கற்றுக்கொள்ள உதவும் வகையில் மற்ற புத்தகங்களையும் ஆவணங்களையும் கொடுத்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:11; Saints, 2:478–79
ஜோஸ் தனது தாயிடம் வீட்டிற்கு விரைந்தார். அவர்கள் ஒன்றாக சுவிசேஷத்தைப் படித்தார்கள், அது உண்மையென்று அவர்களுக்குத் தெரியும். ஊழியக்காரர்கள் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வருமாறு டெசிடேரியா கேட்டார்.
Saints, 2:479
மெக்சிகோவில் ஞானஸ்நானம் பெற்ற முதல் பெண்களில் டெசிடேரியாவும் ஒருவர். ஜோஸும் அவருடைய மகளும் கூட ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Saints, 2:479
வாஸ் டி அமோநஸ்டேசன் முடிந்ததும், ஜோஸ் தனது தாயாருக்கு நோபாலாவில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள 10 பிரதிகளைப் பெற்றார். பல வருடங்களுக்குப் பிறகு, மார்மன் புஸ்தகம் இறுதியாக ஸ்பானிஷ் மொழியில் அச்சிடப்பட்டபோது, மெக்சிகோவில் அதன் பிரதியைப் பெற்ற முதல் நபர் டெசிடேரியா ஆவார். கர்த்தர் தன்னைத் தம்முடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு வழிநடத்தியதை அவர் அறிந்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:81; Saints, 2:479