“கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
டிசம்பர் 1832–மார்ச் 1836
கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டுதல்
கர்த்தருக்கு ஒரு விசேஷித்த வீடு
கர்த்லாந்தில் பரிசுத்தவான்கள் ஒரு விசேஷித்த வீட்டைக் கட்ட வேண்டிய நேரம் இது என்று கர்த்தர் ஜோசப் ஸ்மித்திடம் கூறினார். இந்த வீடு ஒரு ஆலயமாக இருக்கும், கர்த்தர் தம் மக்களைச் சந்தித்து அவர்களுடன் வாக்குறுதிகளை அளிக்கும் இடமாக இருக்கும். அவர் தனது ஆலயத்தில் அவர்களுக்கு ஒரு விசேஷித்த வரத்தைக் கொடுப்பார். அவர் அந்த வரத்தை வல்லமையின் தரிப்பித்தல் என்று அழைத்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:119; 95:8; Saints, 1:205
பரிசுத்தவான்கள் உடனடியாக ஆலயத்தைக் கட்டத் தொடங்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, ஆலயம் மிகவும் முக்கியமானது என்பதை கர்த்தர் அவர்களுக்கு நினைவூட்டினார். ஹைரம் ஸ்மித் கருவிகளைச் சேகரிக்க தனது பெற்றோரின் வீட்டிற்கு ஓடினார். அவரது அம்மா அவரை எங்கே போகிறாய் என்று கேட்டபோது, அவர் கர்த்தருடைய ஆலயத்தில் முதலில் வேலை செய்ய விரும்புவதாகக் கூறினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:1–8
கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்கள் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினர். அதற்கு நிறைய பணம் செலவானது, நிறைய வேலை தேவைப்பட்டது. சிட்னி ரிக்டன் போன்ற சபை உறுப்பினர்கள் ஆலயம் கட்டுவதற்கு நிறைய பணம் கொடுத்தனர். கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றி, அவருடைய வீட்டில் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற அவர்கள் உற்சாகமடைந்தனர்.
Saints, 1:209–211
பரிசுத்தவான்கள் ஆலயத்தில் வேலை செய்யும்போது, அவர்களிடம் பணம் தீர்ந்து போக ஆரம்பித்தது. சிட்னியும் பிற சபைத் தலைவர்களும் கவலைப்பட்டனர். சிட்னி உதவிக்காக தேவனிடம் ஜெபித்தார்.
Saints, 1:210–11
கரோலின் டிப்பெட்ஸ் என்ற சபை உறுப்பினரும் அவளது குடும்பத்தினரும் நிறைய பணத்தை சேமித்து வைத்திருந்தனர். கரோலின், ஆலயம் கட்ட உதவுவதற்காக சபை அவளுடைய பணத்தை கடன் வாங்க அனுமதித்தாள்.
Saints, 1:211–13
கர்த்லாந்தில் உள்ள பல பரிசுத்தவான்கள் ஆலயத்தைக் கட்ட கடுமையாக உழைத்தனர். சிலர் கற்கள் நிறைந்த வண்டிகளை ஆலயத்துக்கு ஓட்டிச் சென்றனர். மற்றவர்கள் தொழிலாளர்களுக்கு உடைகள் மற்றும் உணவு தயாரித்தனர். குழந்தைகள் உடைந்த கண்ணாடித் துண்டுகளைச் சேகரித்து அரைத்து, ஆலய சுவர்களில் வைத்தார்கள், அதனால் அவை சூரிய ஒளியில் மின்னும், பிரகாசிக்கும்.
Saints, 1:210, 219, 221
சீக்கிரமே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது! பரிசுத்தவான்கள் கர்த்தருடைய வீட்டிற்குள் சென்று அவர் வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாதங்களைப் பெற உற்சாகமாக இருந்தார்கள்.
Saints, 1:221