வேதக் கதைகள்
நாவூவைக் கட்டுதல்


“நாவூவைக் கட்டுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“நாவூவைக் கட்டுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1840–1842

2:18

நாவூவைக் கட்டுதல்

ஒரு அழகான நகரத்திற்கான கர்த்தரின் திட்டங்கள்

மிசிசிப்பி நதிக்கு அருகில் கூடாரங்களில் வசிக்கும் பரிசுத்தவான்கள்.

கர்த்தர் பரிசுத்தவான்களை ஒரு புதிய இடத்தில் கூடும்படி கூறினார். அது மிசிசிப்பி என்ற பெரிய நதிக்கு அருகில் இருந்தது. நிலம் ஈரமாகவும் சேறும் சகதியுமாக இருந்தது. சிலருக்கு, அது ஒரு நகரத்தைக் கட்டுவதற்கு இது நல்ல இடமாகத் தெரியவில்லை. ஆனால் கர்த்தருடைய உதவியுடன், அதை அழகாக்க முடியும் என்பதை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிந்திருந்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:25; Saints, 1:417

பரிசுத்தவான்கள் நாவூவைக்  கட்டுதல்.

அதை வாழ்வதற்கு ஒரு நல்ல இடமாக மாற்ற பரிசுத்தவான்கள் கடுமையாக உழைக்கத் தொடங்கினர். தீர்க்கதரிசி ஜோசப் அந்த நகரத்தை நாவூ என்று அழைத்தார், அதன் அர்த்தம் “அழகான இடம்” என்பதாகும்.

Saints, 1:417

ஜோசப் ஸ்மித்தும் மற்றவர்களும் ஒரு வீட்டைக் கட்டுகிறார்கள்.

பயணிகள் வந்து ஓய்வெடுக்க நாவூவில் ஒரு வீட்டைக் கட்டும்படி கர்த்தர் பரிசுத்தவான்களிடம் கூறினார். நாவூ அனைவரும் வரவேற்கப்படும் இடமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:22–24, 60; Saints, 1:426

எதிர்கால ஆலயத்திற்கான இடத்தை ஜோசப் சுட்டிக்காட்டுகிறார்.

நாவூவுக்காக தாம் பெரிய திட்டங்களை வைத்திருப்பதாக கர்த்தர் தீர்க்கதரிசி ஜோசப்பிடம் கூறினார். அவர் தனது பரிசுத்தவான்கள் இங்கு கூடி ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார். தம்முடைய வீட்டைக் கட்டுவதற்கு முடிந்தவரை கடினமாக உழைக்கும்படி அவர் அவர்களிடம் கேட்டார். பரிசுத்தவான்கள் விரைவாக வேலை செய்யத் தொடங்கினர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:25–28, 44, 55; Saints, 1:420–21, 425–27

ஜோசப் ஆலயத்தைப் பற்றி போதித்தல்.

பரிசுத்தவான்களுக்குக் கொடுக்க மகத்தான ஆசீர்வாதங்கள் இருந்ததால், அவர்கள் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஆலயத்தில், அவர்கள் கர்த்தருடன் உடன்படிக்கைகள் அல்லது சிறப்பு வாக்குறுதிகளைச் செய்வார்கள். பரலோக பிதாவின் எல்லா பிள்ளைகளுக்கும் அவர் அளிக்கும் மகிழ்ச்சியின் திட்டத்தைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:29–41; Saints, 1:453–55

கட்டி முடிக்கப்பட்ட ஆலயம்.

கர்த்தர் கட்டளையிட்டபடியே, ஆலயத்தைக் கட்டுவதற்கு பரிசுத்தவான்கள் கடுமையாக உழைத்தனர். இது நீண்ட காலம் எடுத்தது, ஆனால் கர்த்தர் தம்முடைய ஆலயத்தில் அவர்களுக்காக வைத்திருந்த சிறப்பு வாக்குறுதிகளைப் பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் உற்சாகமாக இருந்தனர்.

Saints, 1:453–55