பொது மாநாடு
“நான் உங்களை குணப்படுத்தும்படியாக … என்னிடத்தில் திரும்புங்கள்.”
ஏப்ரல் 2025 பொது மாநாடு


11:3

“நான் உங்களை குணப்படுத்தும்படியாக … என்னிடத்தில் திரும்புங்கள்.”

திரும்பி வருபவர்களினித்தம் பரலோகத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது. நீங்கள் திரும்பி வர இன்னும் தாமதமாகிவிடவில்லை.

நாங்கள் ஒரு காலத்தில் கம்பீரமான மரங்களால் சூழப்பட்ட ஒரு வீட்டில் வசித்து வந்தோம். நுழைவாயிலுக்கு அருகில் ஒரு அழகான வில்லோ மரம் இருந்தது. ஒரு சோகமான இரவில் ஒரு பெரிய புயல் வீசியது, வில்லோ மரம் சரிந்து விழுந்தது. அது வேர்கள் பிடுங்கப்பட்டு தரையில் கிடந்தது ஒரு பரிதாபகரமான காட்சியாக இருந்தது.

நான் சங்கிலி ரம்பத்தைப் புதுப்பிக்கவும், விறகுக்காக மரத்தை வெட்டவும் தயாராக இருந்தபோது, ​​எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னைத் தடுக்க ஓடி வந்தார். மரத்தை கைவிடுவதற்காக அவர் என்னைக் கண்டித்தார், மேலும் அதை அகற்ற வேண்டாம் என்று அவர் எங்களை உறுதியாக வலியுறுத்தினார். பின்னர் அவர் தரையில் இன்னும் ஒரு வேரை சுட்டிக்காட்டி, நாம் மரத்தை முட்டுக் கொடுத்து, அதன் கிளைகளை வெட்டி, அதை வளர்த்தால், வேர்கள் மீண்டும் பற்றிக்கொள்ளும் என்று கூறினார்.

விழுந்த வில்லோ மரம்.
ஒரு மரத்தின் வேர் நிலத்தில் மீதமுள்ளது.

இவ்வளவு வெளிப்படையாக விழுந்து பிரச்சினையில் இருந்த ஒரு மரம் எப்படி உயிர் பிழைத்து மீண்டும் உயிர் பெற முடியும் என்று எனக்கு சந்தேகம் இருந்தது, சந்தேகித்தேன். அது மீண்டும் வளர ஆரம்பித்தாலும், அடுத்த புயலைத் தாக்குப்பிடிக்காது என்று நான் நினைத்தேன். ஆனால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அந்த மரத்திற்கு இன்னும் எதிர்காலம் இருப்பதாக நம்புவதை அறிந்து, நாங்கள் திட்டத்துடன் இணைந்தோம்.

வெற்று மரத்தண்டு
மரத்தில் வளர்ச்சியின் அறிகுறிகள்.

அதன் விளைவு? சிறிது காலத்திற்குப் பிறகு, மரம் வேரூன்றத் தொடங்கியதும், உயரோடிருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டோம். இப்போது, ​​12 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மரம் வண்ணமயமாகவும், வலுவான வேர்களைக் கொண்டதாகவும், மீண்டும் நிலப்பரப்பின் அழகுக்கு பங்களிக்கிறது.

துடிப்பான மற்றும் ஆரோக்கியமான மரம்.

உலகெங்கிலும் உள்ள பரிசுத்தவான்களைச் சந்திக்கும் போது, ​​இந்த வில்லோ மரமும், எல்லாம் தொலைந்து போனதாகத் தோன்றினாலும் நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் சிலர் வில்லோவைப் போல வலுவாகவும் துடிப்பாகவும் இருந்த சுவிசேஷத்தின் சாட்சியங்களைக் கொண்டிருந்தனர். பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக, அந்த சாட்சியங்கள் பலவீனமடைந்து, விசுவாச இழப்புக்கு வழிவகுத்தன. மற்றவர்கள் சுவிசேஷ பூமியில் மெல்லிய வேர்களைப் பதித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும், தங்கள் சீஷத்துவத்தைப் புதுப்பித்து, தங்கள் வீடாகிய சபைக்குத் திரும்பி வரத் தேர்ந்தெடுத்த பலரின் கதைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். பயனற்ற விறகுகளைப் போல தங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தூக்கி எறிவதற்குப் பதிலாக, அவர்கள் ஆவிக்குரிய தூண்டுதல்களுக்கும், திரும்புவதற்கான அன்பான அழைப்புகளுக்கும் பதிலளித்துள்ளனர்.

கொரியாவில் நடந்த ஒரு பிணைய மாநாட்டில் நான் கலந்து கொண்டேன், அங்கு திரும்பி வந்த ஒரு உறுப்பினர், “எனது நம்பிக்கையின்மையையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்ததற்காகவும், என்னைத் தொடர்பு கொண்டதற்காகவும், எப்போதும் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கும் உறுப்பினர்களுக்காகவும் சகோதரர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று பகிர்ந்து கொண்டார். என்னைச் சுற்றி இன்னும் குறைந்த உற்சாகமான நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தைத் திரும்பப் பெற சபைக்கு திரும்பிச் செல்லுமாறு ஒருவருக்கொருவர் சொல்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அனைவரும் விசுவாசத்திற்காக ஏங்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

விசுவாசத்திற்காக ஏங்கும் அனைவருக்கும், நாங்கள் உங்களை மீண்டும் வர அழைக்கிறோம். நீங்கள் மீண்டும் பரிசுத்தவான்களுடன் ஆராதிக்கும்போது உங்கள் விசுவாசம் பலப்படுத்தப்படும் என்று நான் வாக்களிக்கிறேன்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னாள் ஊழியக்காரர், ஒரு மூத்த சபைத் தலைவருக்கு கடிதம் எழுதி, தனது போதனைகளால் ஒரு குறிப்பிட்ட கலாச்சார பாரம்பரியம் குறித்து புண்படுத்தப்பட்டு, அதனால் அவர் பின்பு சபையை விட்டு வெளியேற வழிவகுத்ததற்காக, மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினார். அவர் பணிவுடன் இவ்வாறு தெரிவித்தார்: “துக்ககரமாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் கோபப்பட்டேன் என்பது என்னை மிகவும் பெரிய விலை கொடுக்க வைத்துள்ளது. நான் நிறைய இழந்துவிட்டேன்—நான் நினைத்ததை விட மிக அதிகம். நான் இந்த வழியில் ஏற்படுத்திய தீங்கை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் திரும்பி வந்ததற்கான வழியைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் இழந்ததை உணர்ந்த அனைவருக்கும், சுவிசேஷத்தின் மகிழ்ச்சியான கனியை மீண்டும் ஒருமுறை ருசிக்க உங்களை மீண்டும் வருமாறு அழைக்கிறோம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு சகோதரி பல வருடங்களாக சபையிலிருந்து விலகி இருந்தார். பிரிந்து செல்லும் அன்புக்குரியவர்களுக்காக வேதனைப்படும் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, அவள் திரும்பி வந்த கதையில் வல்லமைவாய்ந்த பாடங்கள் உள்ளன. அவள் எழுதினாள்:

“நான் ஏன் சபையிலிருந்தும், சுவிசேஷத்திலிருந்தும், ஒரு வகையில் என் குடும்பத்திலிருந்தும் விலகிச் சென்றேன் என்பதற்கான எண்ணற்ற காரணங்களை என்னால் பட்டியலிட முடியும். ஆனால் அவை உண்மையில் முக்கியமில்லை. நான் சபையை விட்டு வெளியேற ஒரு பெரிய முடிவை எடுக்கவில்லை—நான் அநேகமாக ஆயிரம் தேர்வுகளை செய்திருக்கலாம். ஆனால் எனக்கு எப்போதும் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், என் பெற்றோர் ஒரு பெரிய முடிவை எடுத்தார்கள், அவர்கள் அதில் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் என்னை நேசிக்க முடிவு செய்தார்கள்.

“எவ்வளவு கண்ணீர் சிந்தப்பட்டது, எத்தனை தூக்கமில்லாத இரவுகள், எத்தனை இதயப்பூர்வமான மன்றாட்டு வார்த்தைகள் எனக்காகச் சொல்லப்பட்டன என்பதை என்னால் அறிய முடியவில்லை. அவர்கள் என் பாவங்களுக்காக என்னை அழைக்கவில்லை; மாறாக, என் பாவநிலையில் என்னை அழைத்தார்கள். அவர்கள் வீட்டிலோ அல்லது குடும்பக் கூடுகைகளிலோ என்னை வரவேற்கப்படாதவளாக உணர வைக்கவில்லை; அந்த உணர்வுகளில் எதுவானாலும் என் சொந்த செயலால் ஏற்பட்டவை. மாறாக, அவர்கள் என்னை தொடர்ந்து வரவேற்றுக்கொண்டே இருந்தார்கள். காலப்போக்கில் என் வெளிச்சம் மங்குவதை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்போதைய நான், நான் இன்னும் ஆகவேண்டிய ஒரு மனிதனின் நிழல் மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

“சபையை விட்டு நான் விலகிச் செல்லும் பாதை சிக்கலானதாக இருந்ததைப் போலவே, நான் திரும்பிச் செல்லும் பாதையும் அப்படியே இருந்தது. ஆனால் திரும்பி வருவதில் கடினமாக இல்லாத ஒரு விஷயம் என்னவென்றால், எனக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பி வருவது போன்ற உணர்வு.”

இன்றைய எனது செய்தி, ஒரு காலத்தில் விசேஷமாக ஆவியை உணர்ந்த அனைவருக்கும், ஆனால் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறதா அல்லது திரும்பிச் செல்ல வழி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அனைவருக்குமானது. இது, பயனின்றி காத்துக்கொண்டிருக்கும் அல்லது விலகிச் செல்லத் தூண்டப்படும் எவருக்கும் பொருந்தும்.

இந்த செய்தி ஒரு சவாலும் அல்ல, கண்டனமும் அல்ல. இது உங்கள் ஆவிக்குரிய வீட்டிற்கு உங்களை மீண்டும் வரவேற்க அன்புடனும் உண்மையான விருப்பத்துடனும் கொடுக்கப்படும் அழைப்பு.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து இந்த அன்பான அழைப்பையும் மகத்துவமான வாக்குறுதியையும் நீங்கள் இப்போது கேட்கும்போது, ​​பரிசுத்த ஆவியின் சாட்சியத்தை நீங்கள் உணர வேண்டும் என்று நான் ஜெபித்திருக்கிறேன்:

“நீங்கள் இப்பொழுதாவது என்னிடத்தில் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை குணப்படுத்தும்படியாக மனம் மாறமாட்டீர்களோ?”

ஒவ்வொரு வாரமும் பலர் இரட்சகரின் அழைப்பிற்கு பதிலளித்து, சீஷத்துவத்திற்கும் சபை நிகழ்ச்சிகளுக்கும் திரும்பி, இயேசு வாக்குறுதியளித்த குணப்படுத்துதலை அமைதியாகவும் பணிவாகவும் தேடுகிறார்கள். சில சமயங்களில் பரவும் கதைகளுக்கு மாறாக, நமது இளைஞர்களில் சாதனை எண்ணிக்கையிலானோர் வலுவாக இருந்து இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளத் தேர்வு செய்கிறார்கள்.

கப்பர்நகூமில் இயேசுவின் சீஷர்களில் சிலர் அவருடைய போதனைகளைக் கடினமாகக் கண்டு வெளியேறத் தேர்ந்தெடுத்தபோது, ​​அவர் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் திரும்பி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்று கேட்டார்.

நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட சோதனை நேரங்களை எதிர்கொள்ளும்போது பதிலளிக்க வேண்டிய கேள்வி இதுதான். இயேசுவுக்கு பேதுரு அளித்த பதில் காலத்தால் அழியாதது மற்றும் எதிரொலிக்கிறது: “யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.”

எனவே, இரட்சகர் அவரிடம் திரும்புவதற்கான அழைப்பை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​வில்லோ மரத்தின் கதையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  1. திரும்பும் பயணம் பெரும்பாலும் எளிதானது அல்லது வசதியானது அல்ல, ஆனால் அது தகுதியானது. எங்கள் வில்லோ மீண்டும் நின்றபோது, ​​அதன் கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டன. அது அழகாக இருக்கவில்லை! பழைய வழிகளை நிராகரித்து, பெருமையை விட்டுவிடும்போது நாமும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உணரலாம். இயேசு கிறிஸ்துவின் மீதும் அவருடைய சுவிசேஷத்தின் மீதும்—அடிமரம் மற்றும் வேர்கள் மீதும்—உங்கள் விசுவாசத்தை ஒருமுகப்படுத்துவது, அந்த முதல் அடியை திரும்ப வைக்க உங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும்.

  2. எங்கள் வில்லோ அதன் முந்தைய வலிமையையும் அழகையும் மீண்டும் பெற பல ஆண்டுகள் ஆனது. இப்போது அது முன்பை விட இன்னும் வலுவாகவும் அழகாகவும் இருக்கிறது. உங்கள் விசுவாசமும் சாட்சியும் வளரும்போது பொறுமையாக இருங்கள். “இத்தனை வருடங்களாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” போன்ற சிந்தனையற்ற கருத்துகளைக் கேட்டு கோபப்படாமல் இருப்பதும் இதில் அடங்கும்.

  3. நிலையான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து இல்லாமல் வில்லோ ஒருபோதும் உயிர் பிழைத்திருக்காது. ஒவ்வொரு வாரமும் திருவிருந்து மேஜையில் விருந்துண்டு, கர்த்தருடைய வீட்டில் நீங்கள் ஆராதிக்கும்போது, ​​உங்கள் விசுவாசத்தையும் உங்கள் சாட்சியத்தையும் நீங்கள் போஷிப்பீர்கள்.

  4. வில்லோ அதன் கிளைகள் மற்றும் இலைகள் மீண்டும் வளர சூரிய ஒளி தேவைப்பட்டது போல, நீங்கள் ஆவியின் உணர்வுகளுக்கும் சாட்சிக்கும் உணர்திறன் உடையவராக இருக்கும்போது உங்கள் சாட்சியம் வளரும். “நான் பலமுறை அழைக்கப்பட்டேன், ஆனால் நான் கேட்கவில்லை“ என்று கூறி, தனது நேரத்தை குறைவான ஆர்வமுடன் இருந்த உறுப்பினராக விவரித்த அமுலேக்கிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

  5. என் பக்கத்து வீட்டுக்காரருக்கு வில்லோ மீண்டும் என்னவாகும் என்பது தெரியும். அதேபோல், உங்கள் தெய்வீக ஆற்றலும், உங்கள் விசுவாசமும் உங்கள் சாட்சியமும் என்னவாக முடியும் என்பதையும் கர்த்தர் அறிவார். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம், உடைந்த அனைத்தையும் குணப்படுத்த முடியும்.

திரும்பி வருபவர்களைப் பார்த்து பரலோகத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது என்பதை நான் சாட்சியாகக் கூறுகிறேன். நீங்கள் தேவைப்படுகிறீர்கள், நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள். இயேசு கிறிஸ்து நமது இரட்சகர் என்றும், அவரிடம் திரும்பும் அனைவரையும் அவர் அதிக சமாதானத்துடனும் அதிக மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கிறார் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன். அவருடைய இரக்கத்தின் கரங்கள் மடிக்கப்படவில்லை, ஆனால் உங்களுக்காகத் திறந்திருக்கின்றன, நீட்டப்பட்டுள்ளன. நீங்கள் திரும்பி வர இன்னும் தாமதமாகிவிடவில்லை. எங்கள் இருதயங்களில் உள்ள அனைத்து அன்புடனும், நாங்கள் உங்களை வீட்டிற்கு வரவேற்கிறோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. இதுவே வாஷிங்டன் ஸ்போகேன் ஊழியத்துக்கான ஊழிய இல்லமாக இருந்தது, இன்னும் உள்ளது. வில்லோ மரத்தின் புகைப்படங்களை என் மனைவி ஜாக்கி எடுத்தார்.

  2. 3 நேபி 9:13. மனந்திரும்புவதற்கான அழைப்பு நம் அனைவருக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. 1 யோவான் 1:8 (“If we say that we have no sin, we deceive ourselves”) and President Russell M. Nelson’s invitation to repent daily: “The Power of Spiritual Momentum,” Liahona, May 2022, 98–99 பார்க்கவும்.

  3. See Quentin L. Cook, “Facing Life and Faith Challenges” (worldwide devotional for young adults, Nov. 14, 2023), சுவிசேஷ நூலகம்: “உங்கள் தகவலுக்கு, இளைஞர்களும் இளம் வயதுவந்தவர்களும் கடந்த காலங்களை விடக் குறைவாகச் செயல்படுவதில்லை அல்லது அதிக எண்ணிக்கையில் சபையை விட்டு வெளியேறுவதில்லை என்பது பரவலாகப் பரப்பப்படுகிறது. சேவை செய்ய அழைக்கப்படும் ஊழியக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வளரும் தலைமுறையினருக்கான சபை பங்கேற்பின் சதவீதம் தொடர்ச்சியான மேல்நோக்கிய போக்கைக் காட்டுகிறது. மேலும், முதிர் வேத பாட வகுப்பில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    See also D. Todd Christofferson and Clark G. Gilbert, “Video: Elder Christofferson Challenges Narrative, Says Spirit Working in Youth,” Church News, Dec. 13, 2024, newsroom.ChurchofJesusChrist.org.

  4. யோவான் 6:67.

  5. யோவான் 6:68.

  6. ஆல்மா 5:28 பார்க்கவும்.

  7. See Dieter F. Uchtdorf, “Nourish the Roots, and the Branches Will Grow,” Liahona, Nov. 2024, 102: “இயேசு கிறிஸ்துவும் அவரது பாவநிவாரண பலியும் நமது சாட்சியத்தின் வேர். மற்ற அனைத்தும் கிளைகள். இயேசு கிறிஸ்து பற்றிய நமது சாட்சியங்களை போஷிக்கும் போது, ​​நாம் சில சமயங்களில் கிளைகளை வேர்கள் என்று தவறாக நினைக்கிறோமோ என்று எண்ணுகிறேன். வேர்களை போஷிக்கவும், கிளைகள் வளரும்.”

  8. ஆல்மா 32:41 பார்க்கவும்.

  9. See Russell M. Nelson, “Think Celestial,” Liahona, Nov. 2023, 119: “ஆலயத்தில் திக நேரம் செலவிடுதல் விசுவாசத்தைக் கட்டுகிறது. மேலும் ஆலயத்தில் உங்களின் சேவையும் ஆராதனையும் சிலஸ்டியலாக நினைக்க உதவும்.”

    See also Russell M. Nelson, “Rejoice in the Gift of Priesthood Keys,” Liahona, May 2024, 122: “இதோ எனது வாக்குத்தத்தம். இருப்புக்கோலை உறுதியாகப் பிடித்துக் கொள்ள, தவறாமல் ஆலயத்தில் வழிபடுவதைத் தவிர அதிகமாக வேறு எதுவும் உங்களுக்கு உதவாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவர்த்தி பற்றிய உங்கள் சாட்சியத்தை வேறு எதுவும் வலுப்படுத்தாது அல்லது தேவனின் மகத்தான திட்டத்தை அதிகம் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவாது.

  10. ஆல்மா 32:28 பார்க்கவும்.

  11. ஆல்மா 10:6.

  12. See Patrick Kearon, “God’s Intent Is to Bring You Home,” Liahona, May 2024, 87: “தேவன் உங்களை இடைவிடாது தேடுகிறார்.”

  13. See Jeffrey R. Holland, “Broken Things to Mend,” Liahona, May 2006, 69–71.

  14. லூக்கா 15:11–32; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:13 ஐயும் பார்க்கவும்.

  15. யோவான் 15:9 பார்க்கவும்.

  16. ஆல்மா 5:33 பார்க்கவும்.

  17. See Russell M. Nelson, “The Lord Jesus Christ Will Come Again,” Liahona, Nov. 2024, 122: “இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீஷராக மாற இது முந்தியுமில்லை தாமதமுமில்லை. அப்போது அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.”

    “நீங்கள் உடன்படிக்கையின் பாதையில் இருந்து வெகுதூரம் அல்லது மிக நீண்ட தூரம் சென்றுவிட்டதாக உணர்ந்தால், திரும்புவதற்கு வழி இல்லை என்றால், அது உண்மையல்ல.” The Power of Spiritual Momentum ரசல் எம்.நெல்சன், பார்க்கவும்.