சுவிசேஷ வகுப்புகள்
அத்தியாயம் 5: மார்மன் புஸ்தகத்தின் வல்லமையைப் பயன்படுத்துங்கள்.


“அத்தியாயம் 5: மார்மன் புஸ்தகத்தின் வல்லமையைப் பயன்படுத்துங்கள்,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)

“அத்தியாயம் 5,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

மேற்கு அரைக்கோளத்தில் இயேசு போதித்தல் (இயேசு கிறிஸ்து அமெரிக்காவிற்கு வருகை தருதல்)-ஜான் ஸ்காட்

அத்தியாயம் 5

மார்மன் புஸ்தகத்தின் வல்லமையைப் பயன்படுத்துங்கள்

இதைக் கருத்தில் கொள்ளவும்

  • மார்மன் புஸ்தகம் எவ்வாறு நமது மதத்தின் முக்கியக் கல்லாக உள்ளது?

  • மதமாற்ற முறையில் மார்மன் புஸ்தகம் ஏன் மிகவும் வல்லமை வாய்ந்தது?

  • இயேசு கிறிஸ்துவைப் பற்றி மார்மன் புஸ்தகம் என்ன கற்பிக்கிறது?

  • நானும் மற்றவர்களும் தேவனிடம் நெருங்கி வர உதவ மார்மன் புஸ்தகத்தை நான் எவ்வாறு பயன்படுத்தலாம்?

  • ஆத்துமாவின் கேள்விகளை மார்மன் புஸ்தகம் எவ்வாறு கையாள்கிறது?

  • மார்மன் புஸ்தகத்தை வாசித்து சாட்சியமளிக்க மக்களுக்கு நான் எவ்வாறு உதவ முடியும்?

மார்மன் புஸ்தகம், ஆவியுடன் இணைந்து, உங்கள் மனமாற்றத்தில் மிகவும் வல்லமைவாய்ந்த ஆதாரமாகும். இந்தப் புஸ்தகம் இயேசுவே கிறிஸ்து என்பதை எல்லா மக்களையும் நம்ப வைப்பதற்காக எழுதப்பட்ட ஒரு பழமையான, பரிசுத்த பதிவு. (மார்மன் புஸ்தகம் தலைப்புப் பக்கம் பார்க்கவும்). அதன் துணைத்தலைப்பு சொல்வது போல், மார்மன் புஸ்தகம் “இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு.” தேவன் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்தார் என்பதற்கும், அவர் மூலம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ததற்கும் இது ஒரு உறுதியான சான்றாகும்.

முக்கியக்கல்லுடன் கூடிய வளைந்த வாசல்

மார்மன் புஸ்தகமே நமது மதத்தின் முக்கியக்கல்.

மார்மன் புஸ்தகம் “நமது மதத்தின் முக்கியக் கல்” (மார்மன் புஸ்தகத்திற்கான முன்னுரை) என்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கற்பித்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் கூறினார்: “மார்மன் புஸ்தகத்தையும் வெளிப்பாடுகளையும் எடுத்து விடுங்கள், நம்முடைய மதம் எங்கே? நம்மிடம் எதுவுமில்லை” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 196).

ஒரு வளைவு என்பது ஒன்றுக்கொன்று எதிராக சாய்ந்திருக்கும் ஆப்பு வடிவ துண்டுகளால் ஆன ஒரு வலுவான கட்டிடக்கலை அமைப்பாகும். நடுத்துண்டு அல்லது முக்கியக்கல், பொதுவாக மற்ற ஆப்புகளை விடப் பெரியதாக இருக்கும், மேலும் அவற்றை நிலையாக வைத்திருக்கும்.

தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன், மார்மன் புஸ்தகம் குறைந்தது மூன்று வழிகளில் நமது மதத்தின் மையக் கல்லாகும் என்றார்:

கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி “நாம் செய்யும் அனைத்திற்கும் மூலைக்கல்லாக இருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நமது சாட்சியத்தில் மார்மன் புஸ்தகம் முக்கியக் கல்லாகும். அது வல்லமையுடனும் தெளிவுடனும் அவருடைய யதார்த்தத்திற்கு சாட்சி பகர்கிறது.

கோட்பாட்டின் முழுமை. “மார்மன் புஸ்தகம் ‘இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தை’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:9 27:5]. … பார்க்கவும்], கொண்டுள்ளது என்று கர்த்தர் தாமே கூறியுள்ளார். … மார்மன் புஸ்தகத்தில், நமது இரட்சிப்புக்குத் தேவையான [கோட்பாட்டின்] முழுமையைக் காண்போம். மேலும் [இது] தெளிவாகவும் எளிமையாகவும் கற்பிக்கப்படுகிறது, இதனால் குழந்தைகள் கூட இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் வழிகளைக் கற்றுக்கொள்ள முடியும்.”

சாட்சியத்தின் அடித்தளம். “திறவுகோல் கல் அகற்றப்பட்டால் வளைவு நொறுங்குவது போல, மார்மன் புஸ்தகத்தின் உண்மைத்தன்மையுடன் முழு சபையும் நிற்கிறது அல்லது விழுகிறது. … மார்மன் புஸ்தகம் உண்மையாக இருந்தால் … மறுஸ்தாபிதத்தின் கோரிக்கைகளை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 129, 131128.)

மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்ற சாட்சியத்தைப் பெறுவதன் மூலம், ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்பதை நாம் அறியலாம். அவர் மூலமாக, தேவனின் ஆசாரியத்துவ அதிகாரம் பரலோக தூதர்களால் மறுஸ்தாபிதம் செய்யபட்டது. இயேசு கிறிஸ்துவின் சபையை ஒழுங்கமைக்க ஜோசப்புக்கு தேவன் அதிகாரம் அளித்தார். வெளிப்படுத்துதல் இன்றும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மூலம் தொடர்கிறது.

வாலிபன் வேதம் வாசித்தல்

தனிப்பட்ட மனமாற்றத்திற்கு மார்மன் புஸ்தகம் அவசியம்.

மனமாற்றத்தின் ஒரு முக்கிய பகுதி, மார்மன் புஸ்தகம் உண்மையானது என்பதற்கு பரிசுத்த ஆவியின் வல்லமையால் சாட்சியமளிப்பதாகும். நீங்கள் அதை உண்மையாகப் வாசித்துப் படிக்கும்போது, ​​அதன் வார்த்தைகள் உங்கள் ஆத்துமாவை விரிவுபடுத்துவதை உணருவீர்கள். அதன் வார்த்தைகள் வாழ்க்கையைப் பற்றியும், தேவனுடைய திட்டத்தைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் உங்கள் புரிதலை தெளிவுபடுத்தும் (ஆல்மா 32:28 ஐப் பார்க்கவும்). கிறிஸ்துவில் உண்மையான நோக்கத்துடனும் விசுவாசத்துடனும் புஸ்தகத்தைப் பற்றி ஜெபியுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அது தேவனுடைய வார்த்தை என்பதற்கு பரிசுத்த ஆவியின் மூலம் ஒரு சாட்சியைப் பெறுவீர்கள் (மரோனி 10:4–5 பார்க்கவும்).

மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய உங்கள் சொந்த சாட்சியம், மற்றவர்கள் மனந்திரும்ப உதவும் அதன் வல்லமையில் ஆழமான மற்றும் நிலையான விசுவாசத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் கற்பிக்கும் நபர்கள் அதை உண்மையாகப் படிக்கும்போது அவர்கள் உணரும் தெளிவுபடுத்தலை அடையாளம் காண உதவுங்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அதன் வல்லமைமிக்க சாட்சியை வலியுறுத்துங்கள். இந்தப் புஸ்தகம் உண்மை என்பதற்கு அவர்களுடைய சொந்த சாட்சியைப் பெற ஜெபிக்க அவர்களை ஊக்குவிக்கவும்.

மார்மன் புஸ்தகத்தைப் பற்றி பரிசுத்த ஆவியிடமிருந்து சாட்சியைத் தேட மக்களை ஊக்குவிப்பது உங்கள் போதனையின் மையக் குறிக்கோளாக இருக்க வேண்டும். மார்மன் புஸ்தகம் அவர்களின் வாழ்க்கையை என்றென்றைக்குமாக மாற்றும்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்பிக்க மார்மன் புஸ்தகத்தைப் பயன்படுத்துங்கள்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கூறினார், “பூமியில் உள்ள எந்த புஸ்தகத்திலும் மார்மன் புஸ்தகம் மிகவும் சரியானது” (மார்மன் புஸ்தகத்திற்கான அறிமுகம்). இது கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறது மற்றும் அவரது கோட்பாட்டை தெளிவாகக் கற்பிக்கிறது.(2 நேபி 31; 32:1–6; 3 நேபி 11:31–39; 27:13–22 பார்க்கவும்). இது அவருடைய சுவிசேஷத்தின் பரிபூரணத்தைக் கற்பிக்கிறது. மார்மன் புஸ்தகத்தில் கற்பிக்கப்பட்டுள்ளபடி, சுவிசேஷத்தின் முதல் கொள்கைகளும் நியமங்களும் வளமான வாழ்க்கைக்கான வழியாகும்.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கற்பிக்க மார்மன் புஸ்தகத்தை உங்கள் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் கற்பிக்கும் மார்மன் புஸ்தகத்திலுள்ள சில உண்மைகளை பின்வரும் அட்டவணை பட்டியலிடுகிறது.

அத்தியாயம் 3 இல் ஊழியப் பாடம்

கோட்பாடு

குறிப்புகள்

அத்தியாயம் 3 இல் ஊழியப் பாடம்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித செய்தி

கோட்பாடு

தேவனின் இயல்பு, இரட்சகரின் ஊழியம் மற்றும் பாவநிவர்த்தி, ஒரு வீழ்ச்சி, மறுஸ்தாபிதம், ஜோசப் ஸ்மித், ஆசாரியத்துவ அதிகாரம்

குறிப்புகள்

1 நேபி 12–14

2 நேபி 3; 26–29

மோசியா 2–5

அத்தியாயம் 3 இல் ஊழியப் பாடம்

பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டம்

கோட்பாடு

ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு உள்ளிட்ட “நித்திய தேவனுடைய மகத்தான திட்டம்”

குறிப்புகள்

2 நேபி 2; 9

மோசியா 3; 15–16

ஆல்மா 12; 34:9; 40–42

அத்தியாயம் 3 இல் ஊழியப் பாடம்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்

கோட்பாடு

கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம், மற்றும் முடிவுபரியந்தம் நிலைத்திருத்தல்

குறிப்புகள்

2 நேபி 31–32

3 நேபி 11; 27:13–22

அத்தியாயம் 3 இல் ஊழியப் பாடம்

இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷர்களாக மாறுதல்

கோட்பாடு

ஞானஸ்நானம், ஆசாரியத்துவ நியமனம் மற்றும் திருவிருந்து போன்ற நியமங்கள்

குறிப்புகள்

3 நேபி 11:22–2818

மரோனி 2–6

வேதப் படிப்பு

மார்மன் புஸ்தகத்தைப் பற்றி இரட்சகர் என்ன சொல்கிறார்?

மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிக்கிறது.

மார்மன் புஸ்தகத்தின் மைய நோக்கம் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிப்பதாகும். இது அவரது வாழ்க்கை, ஊழியம், உயிர்த்தெழுதல் மற்றும் வல்லமை ஆகியவற்றின் யதார்த்தத்தை உறுதிப்படுத்துகிறது. இது கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய பாவநிவாரணத்தைப் பற்றியும் உண்மையான கோட்பாட்டைக் கற்பிக்கிறது.

மார்மன் புஸ்தகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள எழுத்துக்களுக்குச் சொந்தமான பல தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவை நேரில் கண்டனர். யாரேதின் சகோதரர், நேபி மற்றும் யாக்கோபு ஆகியோர் அநித்தியத்திற்கு முந்தைய கிறிஸ்துவைக் கண்டனர். நேபியர்களிடையே இரட்சகரின் ஊழியத்தின் போது ஏராளமானோர் இருந்தனர் (3 நேபி 11–28 ஐப் பார்க்கவும்). பின்னர், மார்மனும் மரோனியும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்டனர் (மார்மன் 1:15; ஏத்தேர் 12:39 ஐப் பார்க்கவும்).

ஜனங்கள் மார்மன் புஸ்தகத்தைப் படித்து ஜெபிக்கும்போது, ​​அவர்கள் இரட்சகரை நன்கு அறிந்துகொண்டு அவரது அன்பை அனுபவிப்பார்கள். அவர்கள் அவரைப் பற்றிய சாட்சியத்தில் வளர்வார்கள். அவர்கள் அவரிடம் வந்து இரட்சிக்கப்படுவது எப்படி என்பதை அறிவார்கள். (1 நேபி 15:14–15 பார்க்கவும்.)

தலைவர் ரசல் எம். நெல்சன்

“இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப் பற்றிய முழுமையான மற்றும் மிகவும் அதிகாரப்பூர்வமான மற்று எங்கும் காணமுடியாத புரிதலை மார்மன் புஸ்தகம் வழங்குகிறது. மறுபடியும் பிறப்பது என்றால் என்ன என்பதை இது கற்பிக்கிறது. … நாம் ஏன் பூமியில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். இவையும் பிற சத்தியங்களும் வேறு எந்த புஸ்தகத்தையும் விட மார்மன் புஸ்தகத்தில் மிகவும் வல்லமைவாய்ந்ததாகவும், வற்புறுத்தும் விதமாகவும் கற்பிக்கப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழு வல்லமையும் மார்மன் புஸ்தகத்தில் உள்ளது.” (Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?Liahona, Nov. 2017, 62).

தனிப்பட்ட படிப்பு

உங்கள் ஊழியம் முழுவதும், உங்கள் படிப்பு குறிப்பிதழில் பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை எழுதுங்கள்:

  • மார்மன் புஸ்தகத்தைப் படித்ததிலிருந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய உங்கள் படிப்பு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் சாட்சியத்தில் என்ன செல்வாக்கு ஏற்படுத்தியுள்ளது?

  • மக்கள் தங்கள் சாட்சியங்களை வலுப்படுத்த உதவ மார்மன் புஸ்தகத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

வேதப் படிப்பு

மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகள் தங்கள் பதிவேடுகளை எழுதுவதற்கு என்ன காரணங்களைக் கூறினர்?

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

மார்மன் புஸ்தகம் “இயேசுவே கிறிஸ்து என்பதை [அனைத்து மக்களையும்] நம்ப வைப்பதற்காக” எழுதப்பட்டுள்ளது (மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்). இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் ஊழியத்தைப் பற்றி சாட்சியமளிக்கும் மார்மன் புஸ்தகத்தின் சில அத்தியாயங்களை பின்வரும் அட்டவணை பட்டியலிடுகிறது. உங்கள் ஊழியம் முழுவதும் படிக்க பாகங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

கூடுதலாக, நீங்கள் கற்பிக்கும் மக்களின் தேவைகளைப் பற்றி சிந்தியுங்கள். இரட்சகரைப் பற்றிய அவர்களின் அறிவையும் சாட்சியத்தையும் வலுப்படுத்த இந்த பகுதிகளை அவர்களுடன் படிக்க திட்டமிடுங்கள்.

தலைப்புப் பக்கம் மற்றும் முன்னுரை

புஸ்தகத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துங்கள்.

1 நேபி 10–11

லேகியும் நேபியும் இரட்சகரைப் பற்றி சாட்சியமளிக்கிறார்கள்.

2 நேபி 2; 9

லேகியும் யாக்கோபும் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பாவநிவர்த்தியையும் பற்றி சாட்சியமளிக்கிறார்கள்.

2 நேபி 31–33

நேபி கிறிஸ்துவின் கோட்பாட்டைக் கற்பிக்கிறார்.

மோசியா 2–5

பென்யமீன் ராஜா கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறார்.

ஆல்மா 57

ஆல்மா இரட்சகரைப் பற்றி சாட்சியமளிக்கிறார்.

ஆல்மா 36

கிறிஸ்துவின் பாவநிவாரண வல்லமையை ஆல்மா அனுபவிக்கிறான்.

3 நேபி 9–10

இயேசு கிறிஸ்து அனைவரையும் அவரண்டை வர அழைக்கிறார்.

3 நேபி 11–18

இரட்சகர் நேபியர்களுக்கு பிதாவையும் அவருடைய கோட்பாட்டையும் போதிக்கிறார்.

3 நேபி 27

இரட்சகர் தமது சுவிசேஷத்தைக் கற்பிக்கிறார்.

ஏத்தேர் 12

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது செயல் மற்றும் வல்லமையின் கொள்கை என்று ஏத்தேரும் மரோனியும் கற்பிக்கிறார்கள்.

மரோனி 7–8

கிறிஸ்துவின் பரிசுத்த அன்பையும் அவருடைய பாவநிவர்த்தியையும் மார்மன் போதிக்கிறார்.

மரோனி 10

மரோனி அனைவரையும் கிறிஸ்துவிடம் வந்து அவரில் பரிபூரணப்பட அழைக்கிறார்.

மார்மன் புஸ்தகம் தேவனிடம் நெருங்கி வர நமக்கு உதவுகிறது

மார்மன் புஸ்தகம் பற்றி தீர்க்தரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார், “எந்த புஸ்தகத்தையும் விட இதன் கொள்கைகளை கடைபிடிப்பதால் ஒருவன் (அல்லது ஒருவள்) தேவனுக்கு அருகாமையில் வருவார்” மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை. மார்மன் புஸ்தகத்தில் உள்ள கொள்கைகளை தொடர்ந்து கற்பிப்பதன் மூலமும், அதன்படி வாழ மக்களை அழைப்பதன் மூலமும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்து, தேவனிடம் நெருங்கி வர நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள்.

மார்மன் புஸ்தகம் சாட்சியத்தை உருவாக்கி, தனிப்பட்ட வெளிப்பாட்டை அழைக்கிறது. மக்கள் ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற உதவ மார்மன் புஸ்தகத்தைப் பயன்படுத்துங்கள், குறிப்பாக இந்தப் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்பதற்கு பரிசுத்த ஆவியின் சாட்சியம்.

நீங்கள் கற்பிக்கும்போது மார்மன் புஸ்தகப் பாகங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவைகளுக்கு பரிசுத்த ஆவியின் மூலம் மாற்றும் வல்லமை இருக்கிறது. நீங்கள் மார்மன் புஸ்தகத்தைப் பயன்படுத்தி சுவிசேஷத்தைக் கற்பிக்கும்போது, ​​உங்கள் போதனை இருதயத்திலும் மனதிலும் வல்லமையுடனும் தெளிவுடனும் எதிரொலிக்கும்.

“[மார்மன் புஸ்தகத்தை] ஜெபத்துடன் படித்தவர்கள், அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, கற்றவர்களாக இருந்தாலும் சரி, கற்காதவர்களாக இருந்தாலும் சரி, அதன் வல்லமையின் கீழ் வளர்ந்திருக்கிறார்கள்” என்று தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி போதித்தார். அவர் மேலும் கற்பித்தார்:

“சகோதர சகோதரிகளே, இதற்கு முன் எத்தனை முறை படித்திருந்தாலும் சரி, மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு படித்தீர்கள் என்றால், கர்த்தருடைய ஆவி இன்னும் அதிக அளவில் உங்கள் இருதயங்களுக்குள் வரும். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற வலிமையான தீர்மானம் எழும், மேலும் தேவனுடைய குமாரனின் ஜீவிக்கும் யதார்த்தத்துக்கு ஒரு வலிமையான சாட்சியும் உருவாகும்” (“The Power of the Book of Mormon,” Ensign, June 1988, 6) என்று முன்பதிவு இல்லாமல் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஊழியக்காரர்கள் வேதம் படித்தல்

மார்மன் புஸ்தகம் ஆத்துமாவின் கேள்விகளைக் கையாள்கிறது.

ஆவியின் வழிகாட்டுதலுடன் மார்மன் புஸ்தகத்தைப் படிப்பது, மக்கள் தங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கு—அல்லது ஆத்துமாவின் கேள்விகளுக்கு—பதில்கள் அல்லது உள்ளுணர்வுகளைக் கண்டறிய உதவும். மார்மன் புஸ்தகத்தில் உள்ள போதனைகள் வாழ்க்கையின் கேள்விகளை எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுங்கள்.

இந்தக் கேள்விகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றுக்கு பதிலளிக்கும் மார்மன் புஸ்தகக் குறிப்புகளுடன்.

மார்மன் புஸ்தகம் பிற முக்கியமான கேள்விகளைப் பற்றிய வழிகாட்டுதலையும் வழங்குகிறது, அவை:

தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ்

“ஊழியக்காரர்கள் தங்கள் சொந்த கேள்விகளுக்கு பதிலளிக்க மார்மன் புஸ்தகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும், இதனால் அவர்கள் அதையே கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ அதை திறம்பட பயன்படுத்த முடியும். … மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கற்பிப்பதில் மார்மன் புஸ்தகத்தின் வல்லமையை அவர்கள் உள்வாங்க வேண்டும், முதலில் அதைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலமும், பின்னர் அவர்கள் கற்பிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும்.” (Dallin H. Oaks, “Counsel for Mission Leaders,” seminar for new mission leaders, June 25, 2022).

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

உங்களிடம் உள்ள அல்லது மற்றவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஆத்துமாவின் கேள்விகளைப் பட்டியலிடுங்கள். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் வசனங்களை மார்மன் புஸ்தகத்தில் காண்க. உங்கள் படிப்பு குறிப்பிதழில் மார்மன் புஸ்தகத்தின் உள்ளுணர்வுகளையும் குறிப்புகளையும் எழுதுங்கள். நீங்கள் கற்பிக்கும்போது அவற்றைப் பயன்படுத்துங்கள்.

மார்மன் புஸ்தகமும் வேதாகமும் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன

“வேதாகமத்திலும் மார்மன் புஸ்தகத்திலும் உள்ள என் சுவிசேஷத்தின் கொள்கைகளைப் போதிக்க வேண்டும், அதில் சுவிசேஷத்தின் முழுமையும் உள்ளது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:12) என்று கர்த்தர் கூறினார். பிற்காலப் பரிசுத்தவான்கள் “வேதாகமம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வரை அது தேவனின் வார்த்தை என்று நம்புகிறார்கள்” (விசுவாசப் பிரமாணங்கள் 1:8; மேலும் 1 நேபி 13:29 பார்க்கவும்). வேதாகமம் ஒரு பரிசுத்த வேதம். மார்மன் புஸ்தகம் என்பது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தைக் கொண்ட துணைப் பரிசுத்த வேதமாகும்.

வேதாகமும் மார்மன் புஸ்தகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்து வளப்படுத்துகின்றன. (எசேக்கியேல் 37:16–17; 1 நேபி 13:40; மார்மன் 7:8–9). வேதத்தின் இரண்டு தொகுதிகளும் பண்டைய தீர்க்கதரிசிகளால் பதிவு செய்யப்பட்ட போதனைகளின் தொகுப்புகளாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிழக்கு அரைக்கோளத்தில் உள்ள மக்களுடன் தேவன் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி வேதாகமம் கூறுகிறது. மார்மன் புஸ்தகம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பண்டைய அமெரிக்காவில் மக்களுடன் தேவனின் தொடர்புகளைப் பற்றி கூறுகிறது.

வேத வாக்கியங்களை முன்னிலைப்படுத்தும் நபர்

மிக முக்கியமாக, இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுப்பதில் வேதாகமும் மார்மன் புஸ்தகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. இரட்சகரின் பிறப்பு, பூலோக ஊழியம் மற்றும் பாவநிவாரணத்தின் விவரத்தை வேதாகமம் வழங்குகிறது—அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் உட்பட. மார்மன் புஸ்தகத்தில் இரட்சகரின் பிறப்பு மற்றும் ஊழியம் பற்றிய தீர்க்கதரிசனங்கள், அவரது பாவநிவர்த்தி பற்றிய போதனைகள் மற்றும் அமெரிக்காவில் அவரது ஊழியத்தின் விவரம் ஆகியவை அடங்கும். இயேசுவே தேவனுடைய ஒரே பேறான குமாரன் மற்றும் உலக இரட்சகர் என்ற வேதாகமத்தின் சாட்சியத்தை மார்மன் புஸ்தகம் உறுதிப்படுத்தி விரிவுபடுத்துகிறது.

வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகம் இரண்டும் சாட்சிகளின் நியாயப்பிரமாணத்தை கற்பிக்கின்றன: “ஒவ்வொரு வார்த்தையும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாயினால் நிலைநாட்டப்படும்.” (2 கொரிந்தியர் 13:1; மேலும் 2 நேபி 11:2–3 பார்க்கவும்). இந்த நியாயப்பிரமாணத்துக்கு இணங்க, இரண்டு வேதப் புஸ்தகங்களும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கின்றன (2 நேபி 29:8 ஐப் பார்க்கவும்).

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

மார்மன் புஸ்தகத்திலும் வேதாகமத்திலும் பின்வரும் தலைப்புகளில் குறிப்புகளைக் கண்டறியவும். ஒவ்வொரு தலைப்புக்குப் பின்னும் அடைப்புக்குறிக்குள் எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் சொந்த தலைப்புகளையும் பாகங்களையும் சேர்க்கவும்.

  • தீர்க்கதரிசிகள் (யாக்கோபு 4:4–6; ஆமோஸ் 3:7)

  • மதமாறுபாடு (2 நேபி 28; 2 தீமோத்தேயு 4:3–4)

  • மறுஸ்தாபிதம் (1 நேபி 13:34–42; அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19–21)

  • நாம் தேவனின் பிள்ளைகள் (1 நேபி 17:36; அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29)

மார்மன் புஸ்தகத்தைப் படித்துப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுங்கள்

மார்மன் புஸ்தகத்தைப் படிக்காதவர்கள் அல்லது புரிந்துகொள்ளாதவர்கள், அது உண்மை என்பதற்கு சாட்சியத்தைப் பெறுவதில் சிரமப்படுவார்கள். அவர்களுடன் சேர்ந்து புஸ்தகத்தைப் படிப்பதன் மூலம் நீங்கள் அதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவலாம். கற்பித்தல் சந்திப்பின் போது, ​​பின்தொடர்தல் சந்திப்பின் போது அல்லது தொழில்நுட்பம் மூலம் படியுங்கள். உறுப்பினர்களை அவர்களுடன் சேர்ந்து படிக்கவும் நீங்கள் ஏற்பாடு செய்யலாம். மார்மன் புஸ்தக காணொளியைப் பார்ப்பதும், அதனுடன் தொடர்புடைய அத்தியாயங்களைப் படிப்பதும் மிகவும் உதவியாக இருக்கும்.

மக்களின் கவலைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் பகுதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது உதவிக்காக ஜெபியுங்கள். 1 நேபி 3:7 அல்லது மோசியா 2:17 போன்ற சிறு பகுதிகளைப் படித்து கலந்துரையாடவும். 2 நேபி 31, ஆல்மா 7, அல்லது 3 நேபி 18 போன்ற மேலும் நீண்ட பகுதிகளையோ அல்லது முழுமையான அத்தியாயங்களையோ படித்து கலந்துரையாடவும். மூன்று மற்றும் எட்டு சாட்சிகளின் சாட்சியங்கள் மற்றும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சியம் உட்பட, மார்மன் புஸ்தகத்தை ஆரம்பத்திலிருந்தே படிக்க மக்களை ஊக்குவிக்கவும்.

ஞாயிறு பள்ளி வகுப்பு

மக்களுடன் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது பின்வரும் பரிந்துரைகளைக் கவனியுங்கள்:

  • வாசிப்பதற்கு முன் ஜெபியுங்கள். புரிந்துகொள்ள உதவி கேளுங்கள். அது உண்மை என்று பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குச் சாட்சி கொடுக்க ஜெபியுங்கள்.

  • மாறி மாறிப் படியுங்கள். அவர்களுக்கு வசதியான வேகத்தில் செல்லுங்கள். அறிமுகமில்லாத சொற்களையும் சொற்றொடர்களையும் விளக்குங்கள்.

  • நீங்கள் வாசித்ததைப் பற்றி கலந்துரையாட அவ்வப்போது நிறுத்துங்கள்.

  • யார் பேசுகிறார்கள், அந்த நபர் எப்படிப்பட்டவர், சூழ்நிலை என்ன போன்ற பகுதியின் பின்னணி மற்றும் சூழலை விளக்குங்கள். மார்மன் புஸ்தக காணொளி தொடர்புடையதாக இருந்தால், அதைக் காண்பிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

  • தேட வேண்டிய முக்கிய செய்திகள் அல்லது கோட்பாட்டை சுட்டிக்காட்டுங்கள்.

  • உங்கள் சாட்சியங்களையும் பொருத்தமான உள்ளுணர்வுகளையும், உணர்வுகளையும், தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலிருந்து நேரடியாக கோட்பாட்டைக் கற்பிக்கவும். இது புஸ்தகத்தின் ஆவிக்குரிய வல்லமையை மக்கள் உணர உதவும்.

  • மக்கள் தாங்கள் படிப்பதை தங்கள் சொந்த வாழ்க்கையுடன் “ஒப்பிட” உதவுங்கள் (1 நேபி 19:23). வேதவாக்கியங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எவ்வாறு பொருத்தமானவை என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள்.

இந்தக் கொள்கைகளை நீங்கள் பயன்படுத்தும்போது, ​​மார்மன் புஸ்தகத்தை தாங்களாகவே படிக்கும் திறனையும் விருப்பத்தையும் மக்கள் வளர்க்க நீங்கள் உதவுவீர்கள். ஞானஸ்நானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் மனமாற்றத்தை நோக்கி முன்னேறுவதற்கு புஸ்தகத்தை தினமும் படிப்பது முக்கியம் என்பதை வலியுறுத்துங்கள்.

மரோனி 10:3–5.-ல் உள்ள வாக்குறுதியை சார்ந்திருங்கள். மார்மன் புஸ்தகத்தை உண்மையாகப் படிக்கவும், அது உண்மை என்பதை அறிய உண்மையான நோக்கத்துடன் ஜெபிக்கவும் மக்களை ஊக்குவிக்கவும். உண்மையான நோக்கம் என்றால் பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் பெறும் பதிலின்படி செயல்படத் தயாராக இருப்பது என்று விளக்குங்கள். மார்மன் புஸ்தகத்தைப் பற்றி உண்மையான நோக்கத்துடன் உண்மையாகப் படித்து ஜெபிக்கிற ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அதன் உண்மைத்தன்மையை அறிய முடியும்.

மார்மன் புஸ்தகம்பற்றிய உங்கள் சொந்த சாட்சியத்தை வலுப்படுத்த இந்த வாக்குறுதியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இந்த வாக்குறுதியைப் பயன்படுத்துபவர்கள் இந்தப் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்பதற்கான சாட்சியத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உங்கள் சாட்சியம் உங்களுக்கு அளிக்கும்.


படிப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான யோசனைகள்

தனிப்பட்ட படிப்பு

  • 2 நேபி 2; 9; 30; 3132 வாசிக்கவும். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் குறியுங்கள். இந்த அதிகாரங்களில் கிறிஸ்துவின் வெவ்வேறு பெயர்கள் மற்றும் பட்டங்களின் பட்டியலை உருவாக்குங்கள். அவர் சொன்ன வார்த்தைகளைக் குறியுங்கள். அவருடைய பண்புகளையும் செயல்களையும் குறியுங்கள்.

  • நீங்கள் தினமும் மார்மன் புஸ்தகத்திலிருந்து படிக்கும்போது, ​​உங்களுக்கு சிறப்பு அர்த்தமுள்ள பகுதிகளை உங்கள் படிப்பு குறிப்பிதழில் பதிவு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பதை எழுதுங்கள்.

  • மார்மன் புஸ்தகம் உண்மை என்று நீங்கள் முதலில் ஒரு ஆவிக்குரிய சாட்சியைப் பெற்றபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் படிப்பு குறிப்பிதழில் எழுதுங்கள்.

  • பின்வரும் மூன்று கேள்விகளை உங்கள் படிப்பு குறிப்பிதழில் எழுதுங்கள். உங்கள் ஊழியம் முழுவதும், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சேர்க்கவும்.

    • மார்மன் புஸ்தகம் இல்லாமல் என் வாழ்க்கை எப்படி இருக்கும்?

    • மார்மன் புஸ்தகம் இல்லாமல் எனக்கு என்ன தெரியாது?

    • மார்மன் புஸ்தகம் இல்லாமல் எனக்கு என்ன இருக்காது?

  • மத்தேயு 5–7-ல் உள்ள மலைப்பிரசங்கத்தையும், 3 நேபி 12–14-ல் உள்ள ஆலயத்தில் கிறிஸ்துவின் பிரசங்கத்தையும் படியுங்கள். இவற்றை ஒன்றாக வாசிப்பது இரட்சகரின் போதனைகளை எவ்வாறு சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவுகிறது?

  • மார்மன் புஸ்தகத்தில் ஒருவர் ஜெபிப்பதைக் குறிப்பிடும் ஒவ்வொரு நிகழ்வையும் படியுங்கள். உங்கள் படிப்பு குறிப்பிதழில், ஜெபத்தைப் பற்றி மார்மன் புஸ்தகத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதை எழுதுங்கள்.

  • மோசியா 11–16 அதிகார தலைப்புகளிலிருந்து, அபிநாதி கற்பித்தவற்றின் சுருக்கத்தை எழுதுங்கள். பின்னர் இந்த அத்தியாயங்களைப் படித்து உங்கள் சுருக்கத்தை விரிவாக்குங்கள்.

  • மோசியா 2–5 அதிகார தலைப்புகளிலிருந்து, பென்யமீன் ராஜா கற்பித்தவற்றின் சுருக்கத்தை எழுதுங்கள். பின்னர் இந்த அத்தியாயங்களைப் படித்து உங்கள் சுருக்கத்தை விரிவாக்குங்கள்.

தோழமை படிப்பு மற்றும் தோழமை பரிமாற்றம்

  • மார்மன் புஸ்தகப் பகுதிகளை ஒன்றாகப் படியுங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதையும் உணர்ந்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றை உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

  • ஆல்மா 26 மற்றும் 29 ஐ ஒன்றாக வாசியுங்கள். உங்கள் ஊழியம் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை உங்கள் படிப்பு குறிப்பிதழில் எழுதுங்கள்.

  • ஆல்மா 37:9ஐ வாசித்து, அம்மோனுக்கும் அவனுடைய சக ஊழியக்காரர்களுக்கும் வேதங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை விவாதிக்கவும். அவர்கள் வேத வாக்கியங்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை விவரிக்கும் குறிப்புகளைக் கண்டறியவும்.

  • ஆல்மா 11–14ஐ வாசியுங்கள், உங்களில் ஒருவர் ஆல்மா அல்லது அமுலேக்கின் பாத்திரத்தையும், மற்றவர் எதிர்ப்பாளர்களின் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். கடினமான கேள்விகளுக்கு இந்த ஊழியக்காரர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைப் பற்றி கலந்துரையாடவும்.

சேகர ஆலோசனைக்குழு, மணடல மாநாடுகள், ஊழியத் தலைமை ஆலோசனைக்குழு

  • இந்த அத்தியாயத்தின் முக்கிய தலைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வழியிலும் மார்மன் புஸ்தகத்தைப் பயன்படுத்திப் பயிற்சி செய்யுங்கள்.

  • நீங்கள் கற்பிப்பவர்கள் எழுப்பும் கேள்விகளைப் பட்டியலிடுங்கள். மார்மன் புஸ்தகத்தைப் பயன்படுத்தி இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் விளக்குங்கள்.

  • மார்மன் புஸ்தகப் பகுதிகளை ஒன்றாகப் படியுங்கள். அறிவு, உணர்வுகள் மற்றும் சாட்சியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • மறுஸ்தாபிதத்தின் செய்தியை உறுதிப்படுத்த மார்மன் புஸ்தகத்தைப் பயன்படுத்திப் பயிற்சி செய்யுங்கள்.

  • மனமாற்ற முறையில் மார்மன் புஸ்தகம் அவர்களுக்கும் அவர்கள் கற்பித்தவர்களுக்கும் உதவிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊழியக்காரர்களை அழைக்கவும்.

  • ஆத்துமாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்க உதவும் மார்மன் புஸ்தகத்தின் விருப்பமான ஒரு வேத வாக்கியத்தை ஊழியக்காரர்கள் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.

  • மனம் மாறிய ஒரு உறுப்பினரை, அவரது மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் பங்கைப் பகிர்ந்து கொள்ள அழைக்கவும்.

ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய ஆலோசகர்கள்

  • மறுஸ்தாபிதத்தின் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த மார்மன் புஸ்தகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஊழியக்காரர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

  • ஊழியக்காரர்களுடன் 1 நேபி 1 ஐப் படித்து, ஜோசப் ஸ்மித்தின் அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

  • ஊழியக்காரர்களுக்கு மார்மன் புஸ்தகத்தின் சுத்தமான காகித அட்டைப் பிரதியை வழங்குங்கள். அடுத்த இரண்டு அல்லது மூன்று இடமாற்ற காலங்களில் புஸ்தகத்தை இரண்டு முறை படித்துக் குறிக்க அவர்களை அழைக்கவும்.

    • முதல் வாசிப்பில், இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டும் அல்லது சாட்சியமளிக்கும் அனைத்தையும் குறிக்கச் சொல்லுங்கள்.

    • இரண்டாவது வாசிப்பில், சுவிசேஷக் கோட்பாடு மற்றும் கொள்கைகளைக் குறிக்கச் சொல்லுங்கள்.

    ஊழியக்காரர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதையும் உணர்ந்ததையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். இந்த வழியில் மார்மன் புஸ்தகத்தைப் படிப்பது ஒரு ஊழியக்காரராக தன்னை எவ்வாறு பாதித்தது என்பதை மூப்பர் ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட் விவரித்தார்:

மூப்பர் ரொனால்ட் எ. ராஸ்பாண்ட்

“என்னுடைய வாசிப்பில் வேத வாக்கியங்களைக் குறிப்பதை விட அதிகம் இருந்தது. மார்மன் புஸ்தகத்தின் ஒவ்வொரு வாசிப்பிலும், முன்னும் பின்னும், நான் கர்த்தர் மீதான ஆழ்ந்த அன்பினால் நிரப்பப்பட்டேன். அவருடைய போதனைகளின் சத்தியம் மற்றும் அவை ‘இந்த நாளுக்கு’ எவ்வாறு பொருந்தும் என்பதற்கு ஆழமான வேரூன்றிய சாட்சியாக நான் உணர்ந்தேன். இந்த புஸ்தகம் அதன் தலைப்புக்கு பொருந்துகிறது, ‘இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு.’ அந்த படிப்பு மற்றும் பெற்ற ஆவிக்குரிய சாட்சியால், நான் மார்மன் புஸ்தக ஊழியக்காரனாகவும், இயேசு கிறிஸ்துவின் சீஷனாகவும் ஆனேன்.” (“This Day,” Liahona, Nov. 2022, 25).

  • ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்த மார்மன் புஸ்தக வேதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களை அழைக்கவும்.

  • உங்கள் ஊழியத்தில் உள்ளவர்களுக்கான ஆத்துமாவின் கேள்விகளை அடையாளம் காணவும். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் மார்மன் புஸ்தகத்தில் வசனங்களைக் கண்டுபிடிக்க ஊழியக்காரர்களை அழைக்கவும்.