இளைஞர்
8. ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் தேவனின் ஆசீர்வாதங்களை அதிக அளவில் பெற உங்களுக்கு உதவுகின்றன


இயேசு கிறிஸ்து அமர்ந்து தம் சீஷர்களுக்குப் போதித்தல்

8.

ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் தேவனின் ஆசீர்வாதங்களை அதிக அளவில் பெற உங்களுக்கு உதவுகின்றன.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:8

பரலோக பிதாவின் சில ஆசீர்வாதங்கள் மிகவும் பரிசுத்தமானவை, அவற்றைப் பெறக்கூடிய சிறப்பு, பரிசுத்த இடங்களை ஒதுக்கி வைக்க அவர் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்: ஆலயங்கள். கர்த்தருடைய வீடாகிய ஆலயத்தில், நீங்கள் அவருடைய உயர்ந்த நியமங்களைப் பெறலாம்—தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தல்—மற்றும் அவருடைய பெரிய வாக்குறுதிகளைப் பெறலாம்.

நித்திய சத்தியங்கள்

இந்த தரிப்பித்தல் அறிவு மற்றும் வல்லமையின் வரம். ஆலய தரிப்பித்தல்களின் நியமங்களில், நீங்கள் இரட்சகரின் நாமத்தை முழுமையாக உங்கள் மீது தரித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய உடன்படிக்கை செய்கிறீர்கள், அவருடைய சித்தத்தைச் செய்ய தியாகம் செய்கிறீர்கள், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்கிறீர்கள், கற்புடைமை நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள், உங்கள் வாழ்க்கையையும் தேவன் உங்களுக்குக் கொடுத்த அனைத்தையும் அவருடைய சபைக்கு பரிசுத்தப்படுத்துகிறீர்கள்—அல்லது அர்ப்பணிக்கிறீர்கள். இவை உங்கள் வாக்குறுதிகள். தேவன் உங்களுக்கு அதிக அறிவு, பாதுகாப்பு மற்றும் அவரது வல்லமையை பெறும் வாய்ப்பை அளித்து ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். அவரோடு நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுப்பதாகவும் அவர் வாக்குறுதி அளிக்கிறார். தரிப்பித்தலின் ஒரு பகுதியாக, பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரத்தை அணியும் பரிசுத்த சிலாக்கியத்தைப் பெறுகிறீர்கள். அந்த வஸ்திரம் இயேசு கிறிஸ்துவின் சின்னமாகவும், உங்கள் ஆலய உடன்படிக்கைகளின் நினைவூட்டலாகவும் இருக்கிறது.

ஆலய முத்திரித்தல் தம்பதிகளையும் குடும்பங்களையும் நித்தியத்திற்கும் ஒன்றிணைக்கிறது. ஆலய முத்திரித்தல் நியமப்படி, நீங்களும் உங்கள் துணைவரும் தேவனுடனும் ஒருவரோடொருவரும் ஒரு உடன்படிக்கை செய்வீர்கள். நீங்கள் தேவனுக்கும் ஒருவருக்கொருவர் முழுமையாக உண்மையாக இருப்பீர்கள் என்றும், ஒருவரையொருவர் நேசித்து சேவை செய்வீர்கள் என்றும், தேவனின் நியாயப்பிமாணங்களைக் கடைப்பிடிக்க ஒன்றாக உழைப்பீர்கள் என்றும் உறுதிமொழி எடுப்பீர்கள். இது உங்கள் வாக்குறுதி. உங்கள் துணைவருடனும் உங்கள் பிள்ளைகளுடனும் உங்கள் உறவு என்றென்றும் நீடிக்கும் என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார். நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, ​​பரலோக ராஜ்யத்தில் அவருடன் மிக உயர்ந்த மகிமையைப் பெற முடியும் என்றும் அவர் வாக்குறுதி அளிக்கிறார். இந்த ஆசீர்வாதம் மேன்மையடைதல் என்று அழைக்கப்படுகிறது.

அழைப்புகள்

எப்போதும் ஒரு ஆலய பரிந்துரையை வைத்திருங்கள். அதைப் பெற உங்கள் ஆயத்தின் உறுப்பினரை சந்தித்துப் பெறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கான தரங்கள்படி நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள் என்பது குறித்து அவர் உங்களிடம் கேள்விகள் கேட்பார். இந்தக் கேள்விகளை அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள். (இந்த வழிகாட்டியின் பிற்சேர்க்கையில் அவற்றைக் காணலாம்.) நீங்கள் ஒரு ஆலயத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்தாலும், உங்கள் பரிந்துரை கர்த்தர் மீதான உங்கள் அன்பிற்கும், அவருடைய தரங்கள்படி வாழ்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பிற்கும் அடையாளமாக இருக்கட்டும்.

உங்களால் முடிந்தவரை அடிக்கடி ஆலயம் செல்லுங்கள். உங்கள் ஆலய பரிந்துரையுடன், நீங்கள் கர்த்தருடைய வீட்டிற்குள் பிரவேசித்து ஞானஸ்நானம் பெற்று, உங்கள் மூதாதையர்களுக்காக திடப்படுத்தப்படலாம், இதனால் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற முடியும். ஆலயத்தில் இருக்க ஒவ்வொரு வாய்ப்பையும் சாதகப்படுத்திக் கொள்ளுங்கள். கர்த்தரை அவருடைய பரிசுத்த வீட்டில் தேடுங்கள். நியமங்கள், சின்னங்கள் மற்றும் நீங்கள் உணரும் ஆவியில் அவரைத் தேடுங்கள். நீங்கள் அவரைக் கண்டுபிடிப்பீர்கள்.

கர்த்தருடைய ஆலயத்தில் உடன்படிக்கைகளைச் செய்யத் தயாராகுங்கள். இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதாகும். ஆலய நியமங்களைப் பெறுவதையும், வாழ்நாள் முழுவதும் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவராக இருப்பதையும் உங்கள் வழிகாட்டும் இலக்குகளில் ஒன்றாக ஆக்குங்கள். ஆலயத்தில் நீங்கள் கீழ்ப்படிவதாக உறுதியளிக்கும் நியாயப்பிரமாணங்களின்படி வாழ இப்போதே தொடங்குங்கள்: தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், தியாகம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், கற்புடைமை மற்றும் பரிசுத்தப்படுத்தல். உங்கள் குடும்பத்தினர், ஆயர் மற்றும் சபையின் பிற தலைவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.

டெகுசிகல்பா ஹோண்டுராஸ் ஆலயம்

வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போல ஆகலாம். அவர் உங்களை நீதியின் சிறந்த பின்பற்றுபவராக மாற்ற உதவுவார். தேவனுடைய பிரசன்னத்தில் எப்படி பிரவேசிப்பது, அவரோடு நித்திய ஜீவனைப் பெறுவது என்பதை ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் உங்களுக்குக் கற்பிக்கும்.

நீங்கள் தேவ வல்லமையால் சர்வாயுத வர்க்கம் தரிப்பீர்கள். தேவனுடைய வல்லமையும் மகிமையும் உங்கள் மீது இருக்கும் என்ற வாக்குறுதியுடன் ஆலய உடன்படிக்கைகள் வருகின்றன. அவருடைய தூதர்கள் உங்களைக் கண்காணிப்பார்கள்.

ஆலயத்தில் இருக்கும் நேரம் உங்களை இயேசு கிறிஸ்துவுடனும் பரிசுத்த ஆவியுடனும் மிக நெருக்கமாக இணைக்கும். நீங்கள் தேவ சமாதானத்தையும் ஓய்வையும் உணர்வீர்கள். நீங்கள் அவருடைய குரலை அதிக தெளிவுடன் கேட்பீர்கள். பரலோகங்கள் உங்களுக்குத் திறக்கும், அவருடைய வழிகளை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். உங்கள் இருதயம் அவரோடு இணைந்திருப்பதால், உங்கள் சவால்களை எதிர்கொள்ள உங்களுக்கு அதிக பலம் கிடைக்கும்.

கேள்விகளும் பதில்களும்

நான் எப்போது தரிப்பித்தல் பெற முடியும்? உங்கள் தரிப்பித்தலைப் பெறுவதற்கான முடிவு தனிப்பட்டது; இந்த முடிவை ஜெபத்துடன் எடுங்கள். உங்கள் குடும்பம் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். இந்த தரிப்பித்தலைப் பெற, உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும், மேலும் உயர்நிலைப் பள்ளி அல்லது மேல்நிலைப் பள்ளி கல்வி முடித்தவராகவும் இருக்க வேண்டும். ஒரு ஊழியம் செய்வதற்கு முன்பு அல்லது முத்திரிக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் தரிப்பிக்கப்படுவீர்கள், ஆனால் தரிப்பிக்கப்படுவதற்கு முன்பு இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் பரலோக பிதாவுடன் கூடுதல் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் காத்துக்கொள்ள உங்களுக்கு ஒரு விருப்பமும் தயாரிப்பும் மட்டுமே தேவை. நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை அறிய உங்கள் ஆயர் அல்லது கிளைத் தலைவர் உங்களுக்கு உதவ முடியும். தரிப்பித்தலை ஒரு நித்திய சரிபார்ப்புப் பட்டியலில் உள்ள ஒரு பணியாகப் பார்க்காதீர்கள். கிறிஸ்துவிடம் வந்து தேவனின் மிகப்பெரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உங்கள் நித்திய பயணத்தின் அழகான மற்றும் மகிமையான பகுதியாக இதைப் பாருங்கள்.

ஆலயத்துக்குள் பிரவேசிக்க எனக்கு ஏன் ஆலய பரிந்துரை தேவை? ஆலயம் கர்த்தருடைய வீடு, அதற்குள் பிரவேசிப்பதற்கான தரங்களை அவரே நிர்ணயிக்கிறார். ஆலயத்தின் நியமங்களும் உடன்படிக்கைகளும் மிகவும் பரிசுத்தமானவை, அவற்றுக்கு சிறப்பு ஆவிக்குரிய ஆயத்தம் தேவைப்படுகிறது. ஆலய பரிந்துரை நேர்காணல் என்பது, ஆலய உடன்படிக்கைகளின் உயர்ந்த சிலாக்கியங்களுக்கு நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் தயாராக இருப்பதை உறுதி செய்வதாகும். பரலோக பிதா தம்முடைய பரிசுத்த வீட்டில் தம்முடன் வாக்குறுதிகளைச் செய்யத் தயாராகும்படி தம்முடைய எல்லாப் பிள்ளைகளையும் அழைக்கிறார்.

ஆலய உடன்படிக்கைகளைச் செய்ய நான் பரிபூரணமாக இருக்க வேண்டுமா? யாரும் பரிபூரணமானவர்கள் இல்லை. தேவன் உங்களை நேர்மையாகவும், தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ள விருப்பமுள்ளவராகவும் இருக்கச் சொல்கிறார். தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் காத்துக்கொள்வதுதான் இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிபூரணமாக மாற உங்களுக்கு வல்லமையை அளிக்கிறது. அவரே உங்கள் பெலன்!

ஏசாயா 2:2–3 பார்க்கவும் (தேவன் ஆலயத்தில் தம்முடைய வழிகளை நமக்குக் கற்பிக்கிறார்); மத்தேயு 11:28–30 (இரட்சகரின் நுகத்தை உங்கள் மீது ஏற்றுக்கொள்ளுங்கள்); 1 நேபி 14:14 (தேவனின் வல்லமை அவருடைய உடன்படிக்கை மக்கள் மீது உள்ளது); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:15–16 (தேவனின் பிரசன்னமும் மகிமையும் அவருடைய வீட்டில் இருக்கிறது); 109:22 (ஆலயத்தில் நாம் தேவ வல்லமையால் ஆயுதம் தரித்துள்ளோம்); 131:1–4; 132:4–6, 15–20 (நித்திய ஜீவனைப் பெற, ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையின் மூலம் நித்தியத்திற்கும் முத்திரையிடப்பட வேண்டும்); ஆபிரகாம் 1:2 (ஆபிரகாம் நீதியைப் பின்பற்றுபவனாகவும், அதிக அறிவைப் பெறவும் விரும்பினான்.).

ஆலய பரிந்துரை கேள்விகள்

  • கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் ஆலய நியமங்களில் பங்கேற்கவும் தகுதியுள்ளவராக உங்களை நீங்களே கருதுகிறீர்களா?