என்னைப் பின்பற்றி வாருங்கள்
செப்டம்பர் 28–அக்டோபர் 4. “என் ஜனமே நீ ஆறுதலடைவாய்”: ஏசாயா 40– 49


செப்டம்பர் 28–அக்டோபர் 4 ‘என் ஜனமே நீ ஆறுதலடைவாய்’: ஏசாயா 40– 49,:” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

செப்டம்பர் 28–அக்டோபர் 4 ‘என் ஜனமே நீ ஆறுதலடைவாய்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

ஒரு குருடனை  கிறிஸ்து சுகமாக்குதல்

குருடனை சுகமாக்குதல்–கார்ல் ஹெய்ன்ரிச் பிளாக், தேசிய வரலாற்றுக்கான ஃபிரெடெரிக்ஸ்போர்க் அருங்காட்சியகத்தில்.

செப்டம்பர் 28–அக்டோபர் 4: “என் ஜனமே நீ ஆறுதலடைவாய்”

ஏசாயா 40–49

ஏசாயா அதிகாரம் 40ன் முதல் வார்த்தை “ஆறுதல்” இது ஒரு வித்தியாசமான தொனியின் தொடக்கத்தைக் குறிக்கிறது, தீர்க்கதரிசியின் செய்தியில் வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. ஏசாயாவின் முந்தைய எழுத்துக்கள் இஸ்ரவேலையும் யூதாவையும் அவர்களுடைய பாவங்களினால் வரவிருக்கும் அழிவு மற்றும் சிறையிருப்பு பற்றி எச்சரித்தன. இந்த பிற்கால தீர்க்கதரிசனங்கள், எருசலேமும் ஆலயமும் அழிக்கப்பட்டு பாபிலோனால் மக்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், 150 வருஷம் கழித்து எதிர்காலத்தில் யூத ஜனத்தை ஆறுதல்படுத்துதலுக்கானவை. ஆனால் இந்த தீர்க்கதரிசனங்கள் தோற்கடிக்கப்பட்ட, மனச்சோர்வடைந்த இஸ்ரவேலரையும் தாண்டி அதிகமாய் எதிர்காலத்தை தொட்டது. சில சமயங்களில் தோற்கடிக்கப்பட்டு, மனச்சோர்வடைத்து தொலைந்துப்போய்விட்டாக எண்ணுகிற நம்முடன் அவர்கள் பேசுகிறார்கள்.

அவர்களுக்கும் நமக்குமான ஏசாயாவின் செய்தி எளியது: “பயப்படாதே” (ஏசாயா 43:1). அனைத்தும் தொலைந்துபோகவில்லை. கர்த்தர் உங்களை மறக்கவில்லை, உங்கள் கட்டுப்பாட்டையும் தாண்டியதாகத் தோன்றுகிற சூழ்நிலைகளின் மேல் அவருக்கு வல்லமையிருக்கிறது. பாபிலோனைவிட, பாவத்தைவிட, உங்களை சிறைபிடித்து வைத்திருக்கும் எதையும்விட “வானங்களைச் சிருஷ்டித்தவராகிய” (ஏசாயா 42:5), கர்த்தர் அதிக வல்லமையுள்ளவரல்லவா? “என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” என அவர் கெஞ்சுகிறார் (ஏசாயா 44:22). குணப்படுத்த, மீட்டெடுக்க, பெலப்படுத்த, மன்னிக்க, ஆறுதலளிக்க, உங்கள் விஷயத்தில் மீட்டெடுக்கப்பட உங்களுக்கு எது தேவையாயிருந்தாலும் அவரால் முடியும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏசாயா 40–49

வேத பாட வகுப்பு சின்னம்
இயேசு கிறிஸ்து எனக்கு ஆறுதலளித்து எனக்கு நம்பிக்கை அளிக்கமுடியும்.

இஸ்ரவேலர் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட, உடன்படிக்கையின் ஜனம் என்பதான அவர்களது இடத்தை என்றென்றைக்கும் இழந்துவிட்டார்களோவென்று அநேகர் வியப்புற்றிருக்கலாம். ஏசாயா 40–49ஐ நீங்கள் வாசிக்கும்போது, ஆறுதலையும் நம்பிக்கையையும் தரக்கூடியதான வாசகங்களைத் தேடுங்கள். நீங்கள் கண்டறிகிற ஒவ்வொரு வாசகத்திலும், இந்த வசனங்களில் கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை சிந்தித்து பதிவுசெய்யுங்கள். நீங்கள் ஆரம்பிக்கக்கூடிய ஒரு சில வசனங்கள் இங்கே:

  • 40:11, 29–31:

  • 41:10–13, 17–18:

  • 42:6–7:

  • 43:1– 7, 25:

  • 44:1–4, 21–24:

  • 46:3–4:

  • 49:7–16:

தம்மைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

How Firm a Foundation” (Hymns, no. 85) என்ற பாடல் ஏசாயா 41:10; 43:2–5; 46:4இல் உள்ள ஏசாயாவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். பாடல் வரிகளுக்கும் ஏசாயாவின் இந்த வசனங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையைத் தேடும்படியாக இந்த பாடலை பாடவோ அல்லது கேட்கவோ கருதலாம். இந்த வசனங்களில் உள்ள வாக்குத்தத்தங்களைக் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேற்றிருக்கிறார்?

பாட்ரிக் கியரோன், “அவர் சிறகுகளில் குணப்படுத்துதலுடன் உயிர்த்தெழுந்தார்: நாம் வெற்றியாளர்களை விட அதிகமாக இருக்க முடியும்,” லியஹோனா, மே 2022, 37-40 ஐயும் பார்க்கவும்.

கூடுதலான வேதவாக்கியதைப் பயன்படுத்தவும். மார்மன் புஸ்தகத்தில் உள்ள வசனங்களை நமது படிப்பிற்கு துணையாக கொண்டால் பழைய ஏற்பாட்டை சில சமயங்களில் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, மார்மன் தீர்க்கதரிசிகளான நேபியும் யாக்கோபும் பித்தளைத் தகடுகளில் உள்ள ஏசாயாவின் எழுத்துக்களைத் தங்கள் வசம் கொண்டிருந்தார்கள் (1 நேபி 19:22–23 பார்க்கவும்). அவர்கள் இரட்சகரைப் பற்றி கற்பிக்க இந்த தீர்க்கதரிசனங்களைப் பயன்படுத்தினார்கள். நேபியும் யாக்கோபும் எவ்வாறு ஏசாயா 48–49ஐ தங்களுடைய ஜனங்களுக்கு ஒப்பிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள 1நேபி 22ஐ பார்க்கவும். இந்த அதிகாரங்களை உங்கள் சொந்த வாழ்க்கையுடன் ஒப்பிட இது உங்களுக்கு உதவும்.

ஒரு பரந்த, ஆழமற்ற நதி

கர்த்தருக்கு கீழ்ப்படிவதால் “ஒரு நதியையப்போல நமக்கு சமாதானம் இருக்கும்” (ஏசாயா 48:18).

ஏசாயா 40–49

“நீங்களே என் ஊழியக்காரர்கள்.”

ஏசாயா 40–49 முழுவதிலும் கர்த்தர் தம்முடைய “ஊழியக்காரரைப்பற்றியும்” தம்முடைய “சாட்சிகளைப்பற்றியும்” பேசுகிறார். இந்த வார்த்தைகள் இயேசு கிறிஸ்து (Isaiah 42:1–7 பார்க்கவும்), இஸ்ரவேல் வீட்டார் (ஏசாயா 45:4 பார்க்கவும்), யூத ஜனங்களை எருசலேமுக்குத் திரும்பி வந்து ஆலயத்தைக் கட்ட அனுமதித்த கோரேசு இராஜா (ஏசாயா 44:26–28; 45:1–4 பார்க்கவும்) ஆகியோரை குறிக்கலாம். கர்த்தருடைய ஊழியக்காரராகவும் சாட்சியாகவும் இருக்கும் உங்களுக்கு இந்த வாசகங்கள் எவ்வாறு பொருந்தும் என்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். உதாரணமாக, பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள்.

ஏசாயா 40:1-3, 9-11; 43:9-12, எந்த அர்த்தத்தில் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஒரு சாட்சியாயிருக்கிறீர்கள்? அவருடைய சாட்சியாக நீங்கள் பகிரக்கூடிய “நற்செய்தி“ என்ன? நீதிமன்ற விசாரணையில் நீங்கள் சாட்சி கூண்டிற்கு அழைக்கப்பட்டதாக உங்களை எண்ணிக்கொள்ளுங்கள். இந்த விசாரணையில், ஏசாயா 43:11இல் பதிவு செய்யப்பட்டுள்ள கூற்றை இயேசு கிறிஸ்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இயேசுவின் கூற்றுக்கு ஆதரவாக நீங்கள் என்ன சாட்சியம் அளிக்க முடியும்? உங்கள் வாழ்க்கையிலிருந்து என்ன ஆதாரத்தை முன்வைப்பீர்கள்?

ஏசாயா 41:8–13; 42:6; 44:21. உங்களை என்ன செய்ய கர்த்தர் அழைத்தார்? சபை அழைப்புகளையும் அவருக்கு சேவை செய்வதற்கான பிற வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்கள். எப்படி அவர் உங்களை தம்முடைய ஊழியக்காரராய் உருவாக்கியோ அல்லது தயார்படுத்தியோ இருக்கிறார்? நீங்கள் ஊழியம் செய்யும்போது, அவர் உங்களை எவ்வாறு ஆதரிக்கிறார்?

ஏசாயா 49:1–9. உங்கள் முயற்சிகளும் ஊழியமும் வீணும் வியர்த்தமுமாய் இருப்பதாகத் தோன்றுகிறபோது உதவக்கூடிய என்ன செய்திகளை இந்த வசனங்களில் நீங்கள் காண்பீர்கள்”? (வசனம் 4).

ஏசாயா 40:3–8, 15–23; 42:15–16; 47:7–11

உலகத்தின் வல்லமையை விட தேவனின் வல்லமை மிகப்பெரியது.

அவர்களைச் சுற்றியுள்ள ஒடுக்குகிற உலக வல்லமையுடன் ஒப்பிடும்போது, தேவனின் ஒப்பிடமுடியாத வல்லமையை தனது மக்களுக்கு ஏசாயா மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினான். ஏசாயா 40:3–8, 15–23; 42:15–16; மற்றும் 47:7–11 நீங்கள் வாசிக்கும்போது இந்த செய்தியை தேடுங்கள் (அதிகாரம் 47 இஸ்ரவேலை சிறைபிடித்த பாபிலோனுக்கு உரைக்கப்பட்டது என்பதைக் கவனிக்கவும்). உலகப் பிரகாரமான காரியங்களைப்பற்றி இந்த வாசகங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? தேவனைப்பற்றி அவை உங்களுக்கு என்ன போதிக்கின்றன? சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு இந்த செய்தி ஏன் மதிப்புமிக்கதாக இருந்திருக்கக்கூடும் என்று சிந்தியுங்கள். அது ஏன் உங்களுக்கு மதிப்புமிக்கது?

ஏசாயா 48:10; 49:13–16

கர்த்தர் என்னை என் உபத்திரவங்களினூடே சுத்திகரிக்கக்கூடும்.

நீங்கள் ஏசாயா 48:10ஐ வாசிக்கும்போது, உங்களின் சொந்த உபத்திரவத்தின் குகையை குறித்து தியானிக்கவும். கர்த்தர் உங்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார்? நீங்கள் உபத்திரவங்களை அனுபவிக்கும்போது ஏசாயா 49:13–16 உங்களுக்கு எப்படி உதவுகிறது?

“The Refiner’s Fire” (video), Gospel Library ஐயும் பார்க்கவும்.

5:2

The Refiner's Fire

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏசாயா 40:3-5

“கர்த்தருடைய வழியை“ ஆயத்தம் செய்ய என்னால் உதவ முடியும்.

  • ஏசாயா 40:3–5இல் விவரிக்கப்பட்டபடி, “கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துதல்” என்றால் என்ன என்பதை விளக்குவதற்கு சில வழிகளைப் பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் கோணலான ஒன்றை நேராக்கலாம், ஒழுங்கீனமான தரையை சுத்தமாக்கலாம், அல்லது பாறை நிலத்தில் தெளிவான பாதையை உருவாக்கலாம். யோவான் ஸ்நானன் மற்றும் ஜோசப் ஸ்மித் படங்களையும் நீங்கள் காட்டலாம் (Gospel Art Book, nos. 35,87 பார்க்கவும்). கர்த்தருடைய வருகைக்காக வழியை அவர்கள் எவ்வாறு ஆயத்தப்படுத்தினார்கள்? (லூக்கா 3:2–18; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:3 பார்க்கவும்). நாம் எப்படி உதவ முடியும்? ஆரோனிய ஆசாரியத்துவம் பெற்றவர்கள் எவ்வாறு கர்த்தரின் வழியைத் ஆயத்தப்படுத்த உதவுகிறார்கள் என்பதைப் பற்றி பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:26–28 பார்க்கவும்).

ஏசாயா 43:10

கர்த்தருக்கு நான் ஒரு சாட்சியாக இருக்க முடியும்.

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:10ஐ ஒன்றாக வாசித்த பிறகு, சாட்சியாக இருப்பதின் அர்த்தம் என்னவென்று நீங்கள் பேசலாம். நீங்கள் “சாட்சியாக“ இருக்கக்கூடிய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள் - உதாரணமாக, நீங்கள் ருசித்த உணவு, நீங்கள் சென்ற இடம் அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர். கர்த்தரின் சாட்சியாக இருப்பதன் அர்த்தம் என்ன? அவரைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு என்ன சொல்ல முடியும்?

ஏசாயா 44:3–4; 45:8.

கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை என்மீது “ஊற்றுவார்“.

  • இந்த வசனங்களைப் படித்த பின்னர், கர்த்தர் அவர்கள் மீது பொழிந்த ஆசீர்வாதங்களைப்பற்றி பேசும்போது உங்கள் குடும்பத்தினர் ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றலாம். ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது அதற்கு என்ன நேரிடுகிறது? கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் நாம் வளர எவ்வாறு உதவியது?

ஒரு பெரிய கடல் அலை

நமது “நீதித்துவம் கடல் அலைகளைப் போல இருக்கலாம்” (ஏசாயா 48:18).

ஏசாயா 48:17-18

தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவது சமாதானத்தைத் தரும்.

  • ஆறுகள் மற்றும் கடல் அலைகளின் படங்களோ அல்லது காணொளிகளோ உங்கள் பிள்ளைகளுக்கு ஏசாயா 48:18ஐ (இந்த செய்தி சுருக்கத்தில் உள்ள படங்கள் போன்றவை) காட்சிப்படுத்த உதவும். உங்கள் பிள்ளைகள் தங்கள் கைகளையும் கரங்களையும் ஒரு நதியைப்போலவும் கடல் அலைகளைப் போலவும் நகர்த்துவதை விரும்பலாம். சமாதானம் எவ்வாறு ஒரு நதியைப் போலிருக்க முடியும்? நீதி எவ்வாறு அலைகளைப் போலிருக்க முடியும்? தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்வது நதியைப் போல அமைதியாகவோ அல்லது அலையைப் போல வலுவாகவோ உணர உங்களுக்கு எப்படி உதவியது என்பதைப் பற்றி பேசுங்கள்.

  • Keep the Commandments” (Children’s Songbook, 146–47)“ போன்ற கற்பனைகளைப் பற்றிய ஒரு பாடலை ஒன்றாகப் பாடுங்கள். நாம் ஏன் வேதத்தை வாசிக்கிறோம் என்பதைப் பற்றி பாடல் என்ன கற்பிக்கிறது?

ஏசாயா 49:14-16

கர்த்தர் என்னை ஒருபோதும் மறவார்.

  • ஏசாயா 49:14–16 உங்கள் பிள்ளைகளுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் பெரும் ஆறுதலாக இருக்கும். நீங்கள் வசனம் 14ஐப் படிக்கும்போது, ​​மக்கள் மறந்துவிட்டதாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ உணரக்கூடியவற்றைப் பற்றி பேசலாம். கர்த்தர் நம்மை மறக்கவில்லை என்பதை எப்படி அறிவது?

  • வசனங்கள் 15–16ஐ அறிமுகப்படுத்த, உங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற ஒருவரைப் பற்றி கேட்கலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49: 15–16இன்படி, கர்த்தர் ஏன் நம்மை மறக்க மாட்டார்? பின்பு நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

இயேசு ஒரு மனுஷனுடனும், ஒரு சிறுமியுடனும்

கிலேயாத்தின் தைலம்–ஆனி ஹென்றி நாடேர்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் கர்த்தருக்கு சாட்சியாக இருக்க முடியும்