என்னைப் பின்பற்றி வாருங்கள்
மார்ச் 9–15. “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்”: ஆதியாகமம் 37–41


“மார்ச் 9–15. ‘கர்த்தர் யோசேப்போடே இருந்தார்‘: ஆதியாகமம் 37–41,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“மார்ச் 9–15. ‘கர்த்தர் யோசேப்போடே இருந்தார்‘,”: என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026

யோசேப்பின் சகோதரர்கள் அங்கியை அவிழ்த்தல்

யோசேப்பும் அவனது சகோதரர்களும்–சாம் லாலர்

மார்ச் 9–15: “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்”

ஆதியாகமம் 37–41

தேவன் தம்மை நம்பி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் மக்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில நேரங்களில் அது அப்படித் தெரியவில்லை. சில சமயங்களில் தேவனை நம்பும் நபர் குடும்ப உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கைவிடப்படுகிறார். சில சமயங்களில் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை தைரியமாக மீற மறுக்கும் நபர் எப்படியும் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாவார். அதுபோன்ற சம்பவங்கள் நமக்கு நிகழும்போது, ​​தேவன் மீது கோபம் கொள்ள நாம் தூண்டப்படலாம். “சரியானதைச் செய்ய முயற்சிக்கும்போது அது வாழ்க்கையை கடினமாக்குவதாகத் தோன்றினால், என்ன பயன்?” என்று நாம் ஆச்சரியப்படலாம்.

அது குறித்து யாக்கோபின் மகன் யோசேப்பு வியந்திருக்கலாம். சில சமயங்களில், இந்த உண்மையுள்ள மனிதன் செழித்தான்; மற்ற நேரங்களில், அவன் எவ்வளவு விசுவாசமாக இருந்தானோ, அவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டான் என்று தோன்றியது. ஆனால் யோசேப்பு ஒருபோதும் கர்த்தரை விட்டு விலகவில்லை, கர்த்தர் யோசேப்பை விட்டு விலகவில்லை. யோசேப்புக்கு கெட்ட காரியங்கள் நடக்காமல் கர்த்தர் தடுத்தார் என்று அர்த்தம் இல்லை, ஆனால் எல்லாவற்றிலும், “கர்த்தர் அவனுடன் இருந்தார்” (ஆதியாகமம் 39:3).

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 37:1–28; 39; 41:9–45

என் கஷ்டத்தில் கர்த்தர் என்னுடன் இருப்பார்.

மீண்டும் மீண்டும், நல்ல அதிர்ஷ்டம் யோசேப்பைக் கைவிட்டதாகத் தோன்றியது, ஆனால் கர்த்தர் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. நீங்கள் யோசேப்பின் கதையை வாசிக்கும்போது, இதுபோன்ற கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள்:கர்த்தருக்கு நெருக்கமாக இருக்க யோசேப்பு என்ன செய்தான்? கர்த்தர் எவ்வாறு “அவனுடன் இருந்தார்.”? (ஆதியாகமம் 39; 40:1–19; 41:9–45). உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய பிரசன்னத்தை அடையாளம் காண உதவும்படி யோசேப்பின் கதையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

உங்கள் வாழ்க்கையைப்பற்றியும் நீங்கள் இதே போன்ற கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் சோதனை காலங்களில் கர்த்தர் உங்களை கைவிடவில்லை என்பதற்கு என்ன ஆதாரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் அனுபவங்களை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (1 நேபி 5:14 பார்க்கவும்).

நிச்சயமாக, எதிர்காலத்தில் உங்களுக்கு வேறு சோதனைகள் இருக்கும். இந்த சோதனைகள் உங்களை கர்த்தரிடம் இருந்து விலக்கி விடாமல் இருக்க நீங்கள் இப்போது என்ன செய்யலாம்? எதுவாக இருந்தாலும் அவருடன் நெருக்கமாக இருக்க உங்கள் எதிர்கால சுயத்தை ஊக்குவிக்க ஒரு கடிதம் எழுதுங்கள். “Our Relationship with God” (Liahona, May 2022, 78–81), யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து அல்லது மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சனின் செய்தியிலிருந்து உள்ளுணர்வுகளை நீங்கள் சேர்க்கலாம் .

யோவான் 14:18; ரோமர் 8:28; ஆல்மா 36:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8; “Abide with Me!,” Hymns, no. 166 ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 37:5–11; 40; 41:1–38

நான் உண்மையுள்ளவனாக இருந்தால், கர்த்தர் என்னை வழிநடத்தி உணர்த்துவார்.

யோசேப்புக்கு சொப்பனங்கள் மூலம் கர்த்தரின் செய்திகளை பகுத்தறியும் ஒரு வரம் இருந்தது. ஆதியாகமம் 37:5–11; 40:5–8; 41:14–25, 37–38லிருந்து, கர்த்தரிடமிருந்து வெளிப்படுத்துதல் பெற்று புரிந்து கொள்ளுதலைப்பற்றி நீங்கள் என்ன கற்க முடியும்? உதாரணமாக, வெளிப்படுத்தலைப் புரிந்துகொள்ள கடினமாகத் தோன்றும்போது யோசேப்பின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆதியாகமம் 40:8; 41:16 பார்க்கவும்).

கர்த்தர் தம்முடைய சித்தத்தை உங்களுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வெளிப்பாட்டின் அடிப்படையில் செயல்பட நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவரிடமிருந்து கூடுதல் வழிகாட்டுதலை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள்?

யோசேப்பு சொப்பனங்களை விளக்குதல்

பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகியின் சொப்பனங்களை யோசேப்பு விளக்குதல்–ப்ரான்காயிஸ் ஜெரார்ட்

ஆதியாகமம் 39:1–20.

வேத பாட வகுப்பு சின்னம்
கர்த்தருடைய உதவியுடன், நான் சோதனையிலிருந்து தப்பியோட முடியும்.

பாலுறவு பாவம் செய்யும் சோதனையை எப்படி எதிர்ப்பது என்று யோசேப்பு ஆலோசனை கொடுத்தால், அவன் என்ன சொல்வான் என்று நினைக்கிறீர்கள்? ஆதியாகமம் 39ல் அவனது அனுபவத்தைப் படிக்கும்போது இதைப் பற்றி சிந்தியுங்கள் உதாரணமாக, யோசேப்பு இது போன்ற கவலைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதைக் கவனியுங்கள்:

  • நான் என்ன செய்கிறேன் என்று யாருக்கும் தெரியாதபோது, என்ன பெரிதாக ஆகிவிடப்போகிறது? (8–9 வசனங்களைப் பார்க்கவும்).

  • நான் எதிர்க்க முயற்சிக்கிறேன், ஆனால் சோதனை மட்டும் நிற்பதாக இல்லை (வசனம் 10ஐப் பார்க்கவும்).

  • சோதனை வலுவாக இருக்கும் எனது சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? (12 வசனத்தைப் பார்க்கவும்).

கற்புடைமை நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம் என்பதை எப்படி விளக்குவீர்கள்? (see For the Strength of Youth: A Guide for Making Choices, 23–28).

யோசேப்பின் உதாரணம், நிச்சயமாக, மற்ற வகையான சோதனைகளுக்கும் பொருந்தும். யோசேப்பின் உதாரணத்தை மனதில் கொண்டு, சோதனையைத் தவிர்ப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்குவதை கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு சோதனையைப் பற்றி யோசித்து, தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகளை எழுதலாம் மற்றும் சோதனை எழும் போது நீங்கள் எப்படி “தப்பியோடுவீர்கள்.”

சோதனை

தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

பதிலளிக்க திட்டம்:

உங்கள் திட்டத்தைத் தெரிவிக்கக்கூடிய வேறு சில வசனங்கள் இங்கே உள்ளன. சோதனையை எதிர்க்க இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றி ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? மத்தேயு 4:1–11; 1 கொரிந்தியர் 10:13; 1 நேபி 15:23–24; 3 நேபி 18:17–18.

நீங்கள் திட்டமிடும்போது, ​​கடந்த காலங்களில் நீங்கள் சோதனையை வெற்றிகரமாகத் தவிர்த்த அல்லது எதிர்த்ததைப் பற்றி சிந்திக்கவும் இது உதவும். இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவி செய்தார்? (2 நேபி 4:18–33 பார்க்கவும்).

ஆதியாகமம் 41:15–57.

சாத்தியமான கஷ்டங்களுக்கு ஆயத்தமாக கர்த்தர் எனக்கு உதவுவார்.

பார்வோனின் சொப்பனத்தைப் பற்றிய யோசேப்பின் விளக்கம், பஞ்சத்திலிருந்து தப்பிப்பதற்காக மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் நடைமுறை ஆலோசனைக்கு வழிவகுத்தது (ஆதியாகமம் 41:15–57 பார்க்கவும்). இந்த விவரத்தில் கர்த்தர் உங்களுக்காக என்ன ஆவிக்குரிய செய்திகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைக் கவனியுங்கள். உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளஎப்படி தயாராக வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று உணருகிறீர்கள்?

See also David A. Bednar, “We Will Prove Them Herewith,” Liahona, Nov. 2020, 8–11.

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 37

நான் என் குடும்பத்தாரிடம் அன்பாக இருக்க முடியும்.

  • யோசேப்பின் குடும்பத்தில் உள்ள கடினமான உணர்வுகளைப் பற்றி படித்தால், குடும்ப உறுப்பினர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்கலாம். ஆதியாகமம் 37, லிருந்து யோசேப்பு மற்றும் அவனது சகோதரர்களின் கதையைச் சொல்ல “Joseph’s Inspired Dreams” (in Old Testament Stories, 47–51) இல் இந்த குறிப்பில் உள்ள அல்லது படங்களை நீங்கள் பயன்படுத்தலாம். கதையைப் பற்றி உங்கள் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளட்டும். உங்கள் பிள்ளைகள் யோசேப்பின் குடும்பத்தில் இருப்பதாக கற்பனை செய்யும்படி நீங்கள் அவர்களிடம் கேட்கலாம். குடும்பத்தில் ஒரு சமாதானம் பண்ணுபவராக அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் அல்லது செய்திருப்பார்கள்? உதாரணமாக, நம் குடும்பத்தில் “சமாதானமாகப் பேசுவது” என்றால் என்ன? (வசனம் 4). தேவனுடைய குடும்பத்தில் இயேசு கிறிஸ்து எப்படி சமாதானம் பண்ணுபவராக இருக்கிறார்?

    2:17

    Joseph’s Inspired Dreams

ஆதியாகமம் 37:18–28; 39:20–23; 41:38

கெட்ட விஷயங்கள் நடக்கும்போது தேவன் எனக்கு உதவுவார்.

  • உங்கள் பிள்ளைகள் கடினமான காலங்களை எதிர்கொள்ளும்போது, ​​கர்த்தர் யோசேப்புடன் இருந்ததுபோல அவர்களோடும் இருப்பார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். யோசேப்புக்கு நடந்த கடினமான விஷயங்களைப் பட்டியலிட்டு உங்கள் பிள்ளைகளுக்கு ஒருவேளை நீங்கள் உதவலாம் (ஆதியாகமம் 37:23–28; 39:20; அல்லது “Joseph’s Inspired Dreams” and “Joseph in Egypt,” in Old Testament Stories, 47–51, 52–56) பார்க்கவும். ஒவ்வொரு கஷ்டத்தையும் அவர்கள் கண்ட பிறகு, “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” (ஆதியாகமம் 39:2) என்று திரும்பச் சொல்ல உங்கள் பிள்ளைகளை மீண்டும் அழைக்கவும்.

    2:17

    Joseph’s Inspired Dreams

    2:50

    Joseph in Egypt

  • ஒருவேளை உங்கள் பிள்ளைகள் ஆதியாகமம் 39:1–3, 20–23ல் “கர்த்தர் யோசேப்புடன் இருந்தார்” என்ற சொற்றொடரின் ஒவ்வொரு நிகழ்வையும் அதே போன்ற சொற்றொடர்களையும் தேடலாம். இந்த சொற்றொடரின் அர்த்தம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும். கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதை எப்படி அறிகிறோம்? ஒரு சவாலான நேரத்தில் தேவன் உங்களுடன் இருப்பதை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லுங்கள்.

சிறையில் யோசேப்பு

எகிப்தின் யோசேப்பு சிறையில், பட விளக்கம்–ஜெப் வார்ட் (விளக்கம்)

ஆதியாகமம் 39:7–12.

கர்த்தருடைய உதவியுடன், நான் சோதனையிலிருந்து தப்பி ஓட முடியும்.

  • போத்திபாரின் மனைவியிடமிருந்து தப்பி ஓடிய யோசேப்பின் உதாரணத்தை உங்கள் பிள்ளைகள் பின்பற்ற உதவும் ஒரு பொருள் பாடம் இங்கே உள்ளது: இயேசு கிறிஸ்துவையும் சாத்தானையும் பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு காந்தங்களைப் பயன்படுத்துங்கள். நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த காகித கிளிப் போன்ற சிறிய உலோகப் பொருளைப் பயன்படுத்தவும். பொருளை அருகே நகர்த்தும்போது அதன் மீது ஒரு காந்தத்தின் தாக்கம் எவ்வளவு வலிமையானது என்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்கட்டும். ஆதியாகமம் 39:7–12ல் உள்ள யோசேப்பின் அனுபவம் இந்த உண்மையை எவ்வாறு விளக்குகிறது? பாவத்திலிருந்து விலகி இயேசுவிடம் நெருங்க நாம் என்ன செய்யலாம்? The video “Temptation Fades as We Seek Christ in Every Thought” (Gospel Library) மற்றும் இப்படி ஒரு பாடல் “I Need Thee Every Hour” (Hymns, no. 98) இந்த உரையாடலுக்கு உதவியாக இருக்கும்.

    2:58

    Temptation Fades as We Seek Christ in Every Thought

    இசையைப் பயன்படுத்தவும். “துதிப்பாடல்கள் மற்றும் பிற பரிசுத்தப் பாடல்கள் தேவனின் அன்பை உணரவும், பரிசுத்த ஆவியை உணரவும், சுவிசேஷ சத்தியங்களைக் கற்றுக்கொள்ளவும் பிள்ளைகளுக்கு உதவும். மெல்லிசைகள், தாளங்கள் மற்றும் எளிமையான பாட்டுக்கள் பிள்ளைகளுக்கு வரும் ஆண்டுகளில் சுவிசேஷ சத்தியங்களை நினைவில் வைக்க உதவும். நீங்கள் பிள்ளைகளுடன் பாடும்போது, பாடல்களில் கற்பிக்கப்படும் கொள்கைகளைக் கண்டறிந்து புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்” (Teaching in the Savior’s Way32).

  • உங்கள் பிள்ளைகள் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சோதனைகளைப் பற்றி சிந்திக்க உதவுங்கள். இந்த சோதனைகளிலிருந்து அவர்கள் எப்படி “தப்பி ஓடுவது” என்பதை அவர்கள் நடிக்கட்டும்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

யோசேப்பின் சகோதரர்கள் அங்கியை எடுத்துக் கொள்ளுதல்

யோசேப்பு, சொப்பனங்களை விளக்குபவன்-க்றிஸ்டி க்றிஸ்பெர்க் ஹார்மன்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் என் குடும்பத்தினருடன் அன்பாய் இருக்க முடியும்.