என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜனுவரி 26–பெப்ருவரி 1 “உங்களுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக இந்தக் காரியங்களைப் போதி”: ஆதியாகமம் 5; மோசே 6


“ஜனுவரி 26–பெப்ருவரி 1. “உங்களுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக இந்தக் காரியங்களைப் போதி”: ஆதியாகமம் 5; மோசே 6” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“ஜனுவரி 26–பெப்ருவரி 1. உங்களுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக இந்தக் காரியங்களைப் போதி,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026

ஆதாமும் ஏவாளும்

பரதீசை விட சிறந்தது–கென்டல் ரே ஜான்சன்

ஜனுவரி 26; பெப்ருவரி 1: “இந்த காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்தரமாக போதி”

ஆதியாகமம் 5; மோசே 6

ஆதியாகமம் 5ன் அதிகமானது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நோவாவுக்கும் இடையிலான தலைமுறைகளின் பட்டியல். நாம் நிறைய பெயர்களை வாசிக்கிறோம், ஆனால் அவர்களைப்பற்றி நாம் அதிகம் கற்பதில்லை. பின்பு நாம் இந்த கவரும் ஆனால் விளக்கப்படாத, வரியை வாசிக்கிறோம்: “ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான், தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.” (ஆதியாகமம் 5:24 ). நிச்சயமாக அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதிக விளக்கம் இல்லாமல், தலைமுறைகளின் பட்டியல் மீண்டும் தொடங்குகிறது.

நன்றி சொல்லக்கூடிய விதமாக, மோசே 6 ஏனோக்கின் கதையின் விளக்கங்களை வெளிப்படுத்துகிறது—இது ஒரு அருமையான கதை. ஏனோக்கின் மனத்தாழ்மை, அவனது பாதுகாப்பின்மை, தேவன் அவனிடம் கண்ட ஆற்றல் மற்றும் தேவனின் தீர்க்கதரிசியாக அவன் செய்த மகத்தான பணிகளைப்பற்றி நாம் கற்கிறோம். அது தலைமுறைகளாக முன்னேறியபோது, ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்பத்தின் தெளிவான படத்தையும் பெறுகிறோம். சாத்தானின் “பலத்த ஆளுகை” பற்றியும், ஆனால் பிள்ளைகளுக்கு “தேவனின் வழிகளை” கற்பித்த பெற்றோரைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம்.(மோசே 6:15, 21). இந்த பெற்றோர் கற்பித்த கோட்பாட்டைப்பற்றி நாம் கற்றுக்கொள்வது மிகவும் அருமையானது: இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல் (மோசே 6: 50–52 பார்க்கவும்). அந்தக் கோட்பாடு, அதனுடன் கூடவரும் ஆசாரியத்துவத்தைப் போலவே, “அது ஆரம்பத்தில் இருந்தது [மற்றும்] உலகத்தின் முடிவிலும் இருக்கும்” ( மோசே 6:7).

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

மோசே 6:26–36

தேவனின் காரியங்களைப் பார்க்கவும், உணரவும், கேட்கவும் என் திறனை பாவம் கட்டுப்படுத்துகிறது.

நீங்கள் மோசே 6:26–36 படிக்கும்போது, பாவத்தின் விளைவுகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இந்த விளைவுகளை நீங்கள் எவ்வாறு பார்த்திருக்கிறீர்கள்? இந்த விளைவுகளைச் சமாளிக்க ஏனோக்கின் என்ன பண்புகள் உதவியது? இதன் விளைவாக தேவன் அவனை எவ்வாறு ஆசீர்வதித்தார்?

மோசே 6:26–47

வேத பாட வகுப்பு சின்னம்
என் பெலவீனங்களை மீறி தம்முடைய பணியைச் செய்ய தேவன் என்னை அழைக்கிறார்.

கர்த்தர் உங்களைச் செய்ய அழைத்ததை நீங்கள் எப்போதாவது பாரமாக உணர்ந்தால், நீங்கள் தனியாக இல்லை. கர்த்தர் அவனை தீர்க்கதரிசியாக அழைத்தபோது ஏனோக்கு கூட அப்படி உணர்ந்தான். நீங்கள் மோசே 6: 26–36 வாசிக்கும்போது, ஏனோக்கு ஏன் பாரமாக உணர்ந்தான் என்பதையும், அவனுக்கு தைரியம் கொடுக்க கர்த்தர் சொன்னதையும் தேடுங்கள்.

வசனங்கள் 37–47ல், கர்த்தர் ஏனோக்கை ஆதரித்த வழிகளையும் அவருடைய பணியைச் செய்ய அவனுக்கு வல்லமை அளித்ததையும் தேடுங்கள் ( மோசே 7:13). போதாதவன் என உணர்ந்த மோசே போன்ற பிற தீர்க்கதரிசிகளின் அனுபவத்துடன் ஏனோக்கின் அனுபவத்தை ஒப்பிடலாம் ( யாத்திராகமம் 4:10–16 ), எரேமியா (எரேமியா 1:4–10 பார்க்கவும்), நேபி ( 2 நேபி 33:1–4 ), மற்றும் மரோனி (ஏத்தேர் 12:23–29 பார்க்கவும்). அவர் நீங்கள் செய்யுமாறு கொடுத்த பணியைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளவேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதைப்பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

ஏனோக்கு ஜெபித்தல்

ஒரு ஞானதிருஷ்டிக்காரரை கர்த்தர் எழுப்பியிருக்கிறார் (மோசே 6:36)-ஈவா டிமோத்தி

பல தற்கால அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் தங்கள் அழைப்புகளைப் பெற்றதை எப்படி உணர்ந்தனர் என்பதை விவரித்தபோது ஏனோக்கைப் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, “Prophets Speak by the Power of the Holy Spirit” (Liahona, May 2018, 98–99)இல் மூப்பர் உலிசஸ் சோயர்ஸின் சாட்சியத்தைப் பார்க்கவும்

இந்த தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களிடமிருந்து உங்கள் போதாமை உணர்வுகளைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடினமான காரியங்களைச் செய்யும்படி இரட்சகர் உங்களிடம் கேட்டபோது அவர் உங்களுக்கு உதவுவதை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் இரட்சகரின் உதவியை சார்ந்திருக்க வேண்டியிருக்கும் போது சில அனுபவங்களை எழுதுங்கள். இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் இந்த நிகழ்வுகளை நீங்கள் எவ்வாறு அணுகலாம்?

See also David A. Bednar, “Abide in Me, and I in You; Therefore Walk with Me,Liahona, May 2023, 123–25; “I’ll Go Where You Want Me to Go,” Hymns, no. 270.

மோசே 6:48–68.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆரம்பத்திலிருந்தே போதிக்கப்பட்டது.

மோசேயின் புத்தகம் நம்மிடம் இருப்பதால், ஆதாம் ஏவாளிலிருந்தே மீட்பை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை தேவன் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்திருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம். மோசே 6:48–68, நீங்கள் படிக்கும்போது நாம் மீட்கப்படும்படிக்கு நாம் எதை அறிய வேண்டும் மற்றும் செய்ய வேண்டும் என தேடவும். வசனம் 53ல் ஆதாமின் கேள்வியைக் கவனிக்கவும். நீங்கள் எப்போதாவது அவ்வாறு ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? வசனங்கள் 53–65ல் கர்த்தரின் பதிலிலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்? ஆதாமின் ஞானஸ்நான ஆராதனையில் இந்த வசனங்கள் கர்த்தருடைய செய்தியாக நீங்கள் நினைக்கலாம். அவருடைய செய்தியிலிருந்து ஞானஸ்நானம் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஞானஸ்நானத்தை “மறுபடியும் பிறப்பதற்கு” என்று அவர் ஏன் ஒப்பிட்டார் என்று நினைக்கிறீர்கள்? (வசனம் 59). உங்கள் வாழ்நாள் முழுவதும் “மறுபடியும் பிறக்க” நாம் என்ன செய்ய முடியும்?

அடையாளங்களுக்காக தேடவும். வேதங்களில், பொருள்கள் அல்லது நிகழ்வுகள் பெரும்பாலும் ஆவிக்குரிய சத்தியங்களை, குறிப்பாக இரட்சகரைப் பற்றிய சத்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது அடையாளப்படுத்தலாம். (see Teaching in the Savior’s Way7). இந்த அடையாளங்கள் அவரையும் அவருடைய கோட்பாட்டையும் பற்றிய உங்கள் புரிதலை வளப்படுத்தலாம். உதாரணமாக, மோசே 6:27இல் இருதயங்களும் காதுகளும், மோசே 6:35இல் கண்களும் களிமண்ணும், அல்லது மோசே 6:59–60இல் தண்ணீர் அடையாளங்களிலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

மோசே 6:51–62

“உங்களுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக இந்தக் காரியங்களைப் போதி.”

மோசே 6:51–63இல் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சத்தியங்களை ஆதாமுக்கு கற்பித்த பிறகு, வருங்கால சந்ததியினருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் ஆதாமிடம் கூறினார். இந்த சத்தியங்களின் பட்டியலை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும். (வசனங்கள் 51–52, 53–57, 58–60, 61–63 போன்ற வசனங்களின் சிறிய குழுக்களாக பத்தியைப் பிரிக்க இது உதவும்). இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு இந்த சத்தியங்கள் ஏன் மதிப்புமிக்கவை? மோசியா 4:14–15 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–28; 93:40–50இல் பெற்றோருக்கு கர்த்தரின் அறிவுரைகளிலிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்பத்தினர் வைத்திருந்த “ஞாபகப் புத்தகத்தைப்பற்றிப்” படிப்பது உங்கள் சொந்த ஞாபகப் புத்தகத்தை உருவாக்க உங்கள் குடும்பத்தை ஊக்குவிக்கும். நீங்கள் எதைச் சேர்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? FamilySearch.orgல் உங்கள் ஞாபகப் புத்தகத்திலிருந்து தகவல்களை பாதுகாப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

See also Dieter F. Uchtdorf, “Jesus Christ Is the Strength of Parents,” Liahona, May 2023, 55–59; “Parenting: Touching the Hearts of Our Youth,” “But Why?” (videos), Gospel Library.

குடும்பம் ஒன்றுசேர்ந்து வேதங்களை வாசித்தல்

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

மோசே 6:26–34

கடினமான காரியங்களைச் செய்ய தேவன் எனக்கு உதவ முடியும்.

  • சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஏனோக்கு அழைக்கப்பட்டபோது, ​​தான் தோல்வியடைவோமோ என்று கவலைப்பட்டான். ஆனால் தேவன் அவனுக்கு உதவினார். மோசே 6:26–34லுள்ள கதையை ஒன்றாக வாசிக்கவும் (see also “Enoch the Prophet” in Old Testament Stories, 19–21). சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியவில்லை என்று ஏனோக்கு ஏன் உணர்ந்தான்? (மோசே 6:31 பார்க்கவும்). ஏனோக்குக்கு தேவன் எவ்வாறு உதவினார்? (மோசே 6:32–34; 7:13 பார்க்கவும்).

  • கடினமான காரியங்களைச் செய்ய மனிதர்களுக்கு தேவன் உதவியபோது உங்கள் பிள்ளைகள் மற்ற உதாரணங்களைப் பகிர்ந்துகொள்வதையோ அல்லது செயல்படுவதையோ விரும்பலாம்—உதாரணமாக, நோவா, தாவீது, அம்மோன் அல்லது லாமானாகிய சாமுவேல் (see Gospel Art Book, nos. 7, 19, 7881). நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் கடினமான விஷயங்களைச் செய்ய தேவன் அவர்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளைப் பேச அனுமதிக்கலாம்.

மோசே 6:50–62

கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியைப் பெறுதல் ஆகியவை தேவனிடம் திரும்புவதற்கு என்னை தயார்படுத்துகின்றன.

  • தேவன் தம்மிடம் திரும்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆதாமுக்குக் கற்றுக் கொடுத்தார்—இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் பெறுதல், மற்றும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுதல். மோசே 6:52, 57 லுள்ள இந்தக் கொள்கைகளைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். பின்னர், கொள்கைகளில் ஒன்றைப் பற்றி ஒரு சிறு செய்தி எழுத நீங்கள் அவர்களுக்கு உதவலாம். ஒவ்வொரு செய்தியிலும் மோசே 6-ல் இருந்து ஒரு வேதவாக்கியம், ஒரு அனுபவம் மற்றும் ஒரு சாட்சி ஆகியவை அடங்கும். அவர்கள் தங்கள் செய்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளட்டும்.

  • சுவிசேஷத்தின் முதல் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படங்களையும் நீங்கள் காட்டலாம் (நான்காவது விசுவாசப் பிரமாணம் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் படத்திற்கு வழிநடத்தும் ஒரு வரிசையில் அவற்றை வைக்கவும். நீங்கள் மோசே 6:52ஐப் வாசிக்கும்போது, ​​அந்தப் படம் குறிப்பிடும் வார்த்தைகளைக் கேட்கும்போது, ​​உங்கள் பிள்ளைகள் சரியான படத்தின் அருகில் நிற்க முடியும்.

  • மோசே 6:52, இல் உள்ள “Faith,” “When I Am Baptized,” and “The Holy Ghost” (Children’s Songbook, 96–97, 103, 105) போன்ற கொள்கைகளைப் போதிக்கும் பாடல்களை உங்கள் பிள்ளைகள் பாடி மகிழ்வார்கள். மோசே 6:52ல் உள்ள இந்தக் கொள்கைகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்.

மோசே 6:57–58

பரலோக பிதா பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்புகிறார்.

  • சுவிசேஷ போதகர்களாக தங்கள் பெற்றோருக்கு ஆதரவளிக்க உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க, மோசே 6:58ஐ வாசிக்கும்படியும், தேவன் பெற்றோருக்குக் கொடுத்த கட்டளையை அடையாளம் காணும்படியும் ஒரு பிள்ளையைக் கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு, ஆதாமும் ஏவாளும் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் படத்தைக் காட்டலாம் (இந்த குறிப்பின் முடிவில் உள்ளதைப் போல) உங்கள் பிள்ளைகள் படத்தில் அவர்கள் பார்ப்பதைப் பற்றி பேசலாம். உங்கள் பிள்ளைகள் தங்கள் குடும்பங்கள் ஒன்றாக வேதங்களை வாசிப்பது, ஒன்றாக ஜெபிப்பது அல்லது ஒன்றாக விளையாடுவது போன்ற படங்களை வரையலாம்.

கூடுதலாக , நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

ஆதாமும் ஏவாளும் மரத்தடியில் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்தல்

ஆதாம் ஏவாள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்தல் –டெல் பார்சன்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: பரலோக பிதாவிடம் எப்படித் திரும்புவது என்பதை சுவிசேஷம் எனக்குக் கற்பிக்கிறது