“பெப்ருவரி 9–15. ‘நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது’: ஆதியாகமம் 6–11; மோசே 8,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“பெப்ருவரி 9–15. ‘நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026
யேகோவா வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்ளுதல்–சாம் லாலர்
பெப்ருவரி 9–15: “நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”
ஆதியாகமம் 6–11 ; மோசே 8
பிற்காலத்தில் வாழும் நாம், வெள்ளத்தின் கதையை கவனத்தில் கொள்ள சிறப்பு காரணம் உள்ளது. அவருடைய இரண்டாவது வருகையை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்தபோது, அவர் சொன்னார், “நோவாவின் நாட்களில் இருந்தபடியே அது மனுஷகுமாரனின் வருகையிலும் இருக்கும்” ( ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1: 41 ). கூடுதலாக, நோவாவின் நாளை விவரிக்கும் வார்த்தைகள், அதாவது “சீர்கெட்டதாயிருந்தது” மற்றும் “கொடுமையால் நிறைந்தது” போன்ற வார்த்தைகள் நம் காலத்தை எளிதாக விவரிக்க முடியும். (ஆதியாகமம் 6:12–13; மோசே 8:28). பாபேல் கோபுரத்தின் கதையும் அதனுடைய பெருமையைப்பற்றிய விளக்கமும், பிறகு வந்த குழப்பமும் பிரிவினைகளும், நம் நாளுக்கு பொருந்தும் போல தோன்றுகிறது.
இந்த பூர்வகால விவரங்கள் மதிப்புமிக்கவை வரலாறு முழுவதும் துன்மார்க்கம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்பதை நமக்குக் காட்டுவதனிமித்தம் மட்டும் அல்ல. மிக முக்கியமாக, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று அவை நமக்குக் கற்பிக்கின்றன. நோவாவுக்கோ “கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (மோசே 8:27). யாரேது மற்றும் அவனது சகோதரனின் குடும்பத்தினர் கர்த்தரிடத்தில் திரும்பினர், பாபேலில் இருந்த குழப்பத்திலிருந்தும் பிரிவினையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டனர் (ஏத்தேர் 1: 33–43 பார்க்கவும்). சீர்கேடு மற்றும் கொடுமையான காலங்களில் நம்மையும் நமது குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாப்பது என்று நாம் ஆச்சரியப்பட்டால், நமக்கு கற்பிக்க இந்த அதிகாரங்களில் நிறைய உள்ளன.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஆதியாகமம் 6; மோசே 8
கர்த்தருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதில் ஆவிக்குரிய பாதுகாப்பு இருக்கிறது.
நோவாவின் நாளைப் பற்றிய விளக்கத்தில் நம் நாளின் நிலைமைகளைப் போலவே தோன்றுகிற எதையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? குறிப்பாக, மோசே 8:15–24, 28 பார்க்கவும். என்ன கருப்பொருட்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறீர்கள்?
நீங்கள் பார்க்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை என்னவென்றால், நோவாவை ஒரு தீர்க்கதரிசியாக தேவன் அழைத்தார், இன்றும் அவர் ஒரு தீர்க்கதரிசியை அழைத்துள்ளார். மோசே 8:13–30லிருந்து தீர்க்கதரிசிகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் சத்தியங்களின் பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். நம் ஜீவிக்கும் தீர்க்கதரிசி எப்படி நோவாவைப் போல் இருக்கிறார்? நிச்சயமாக, இன்று கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒரு வெள்ளத்தைப் பற்றி எச்சரிக்கவில்லை அல்லது ஒரு பேழையைக் கட்ட உதவுவதற்கு நம்மை அழைக்கவில்லை. ஆனால் அவர் எதைப் பற்றி நம்மை எச்சரிக்கிறார்? மேலும் அவர் நம்மை என்ன செய்ய அழைக்கிறார்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவ, Teachings of Presidents of the Church in Gospel Library, முக்கியமாக, “அழைப்புகளும் வாக்குத்தத்தங்களும்” பாகத்திலிருந்து நீங்கள் ஒரு அத்தியாயத்தை மதிப்பாய்வு செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒரு எச்சரிக்கையையும் ஒரு அழைப்பையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மூப்பர் ஆலன் டி. ஹெய்னி, “பரலோகத்தில் உள்ள ஒரு பரிபூரண மற்றும் அன்பான பிதா, ஒரு தீர்க்கதரிசி மூலம் தனது பிள்ளைகளுக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்” என்று கற்பித்தார். (“A Living Prophet for the Latter Days,” Liahona, May 2023, 25). மூப்பர் ஹெய்னியின் செய்தியைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள், ஒரு தீர்க்கதரிசியை பெற்றிருப்பதற்கான காரணங்களைத் தேடுவது பரலோக பிதாவின் அன்பின் அடையாளம். கர்த்தருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றுவது பிற்காலத்தில் பாதுகாப்பாக வாழ உங்களுக்கு எப்படி உதவியது?
See also Topics and Questions, “Prophets,” Gospel Library; “Why Do We Have Prophets?” (video), Gospel Library.
Why Do We Have Prophets?
ஆதியாகமம் 6:5–13.
வெள்ளம் தேவனினுடைய இரக்கத்தின் செயல்.
“மனுஷனை நிக்கிரகம் பண்ண” வெள்ளத்தை அனுப்பியதில் தேவனின் நீதியைப் பற்றி சிலர் ஆச்சரியப்படுகிறார்கள் (ஆதியாகமம் 6:7). மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல், வெள்ளத்தின் போது, “நீதியின் அடிப்படையில் ஆவிகளை இங்கு அனுப்ப முடியாத அளவுக்கு சீர்கேடு ஒரு சுயாதீனத்தை அழிக்கும் நிலையை அடைந்தது” என்று விளக்கினார். (We Will Prove Them Herewith [1982], 58). வெள்ளம் எப்படி இரக்கத்தின் செயல் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். ஆதியாகமம் 6:5–13 இல் கர்த்தருடைய கனிவான இரக்கத்தையும் ஜனங்கள் மீதுள்ள அன்பையும் குறித்து நீங்கள் காண்பது என்ன?
ஆதியாகமம் 9:8–17.
கர்த்தருடனான எனது உடன்படிக்கைகளை நினைவுறுத்த அடையாளங்கள் அல்லது சின்னங்கள் எனக்கு உதவுகின்றன.
ஆதியாகமம் 9: 8–17 படி, ஒரு வானவில் உங்கள் மனதில் எதைக் கொண்டு வர முடியும்? ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 9: 21–25 (வேதாகம பிற்சேர்க்கை) உங்கள் புரிதலுக்கு என்ன சேர்க்கிறது? உங்கள் உடன்படிக்கைகளை உங்களுக்கு நினைவூட்ட தேவன் உங்களுக்கு வழங்கிய மற்ற விஷயங்களின் (சின்னங்கள், பொருள்கள் அல்லது வேறு ஏதேனும்) பட்டியலை உருவாக்கவும் நீங்கள் பரிசீலிக்கலாம். இக்காரியங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? நினைவில் வைத்துக் கொள்ள அவை எவ்வாறு உதவுகின்றன?
See also Gerrit W. Gong, “Always Remember Him,” Liahona, May 2016, 108–11; “Reverently and Meekly Now,” Hymns, no. 185.
பாபேல் கோபுரம்-டேவிட் கிரீன்
ஆதியாகமம் 11:1–9.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதே பரலோக பிதாவிடம் செல்வதற்கான ஒரே வழி.
கடந்த வாரம் நீங்கள் படித்த ஏனோக்கும் அவனது ஜனங்களும் சீயோனைக் கட்டியெழுப்பியது பற்றியும், பாபேல் நகர ஜனங்கள் ஒரு கோபுரத்தைக் கட்டியதைப் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான வேறுபாட்டை வழங்குகிறது. இரு குழுக்களும் வெவ்வேறு வழிகளில் பரலோகத்தை அடைய முயன்றனர். சீயோன் ஜனங்கள் எப்படி பரலோகத்தைப் பெற்றார்கள்? (மோசே 7:18–19, 53, 62–63, 69 பார்க்கவும்). ஆதியாகமம் 11:1–9 மற்றும் ஏலமன் 6:26–28லிருந்து பாபேல் கோபுர ஜனங்கள்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்? தேவ பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கான நமது சொந்த முயற்சிகளைப் பற்றி இது நமக்கு என்ன கற்பிக்கிறது? “பரலோகத்தை அடைய” தேவன் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார்? ஆதியாகமம் 11:4; யோவான் 3:16) ஐயும் பார்க்கவும்.
உற்சாகமாக கற்கவும். கற்றல் என்பது படிப்பது அல்லது கேட்பது மட்டுமல்ல. உதாரணமாக, பாபேல் கோபுரத்தைப் பற்றி அறியும் போது, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அல்லது வகுப்பினரும் தேவனிடமிருந்து நம்மை விலக்கி வைக்கும் விஷயங்களை காகிதத் துண்டுகளில் எழுதலாம். பிறகு, மற்ற காகிதச் துண்டுகளில், தேவனுக்குஅருகில் நம்மைக் கொண்டு வரும் விஷயங்களை நீங்கள் எழுதலாம். முதல் தொகுப்பு காகிதங்களை கோபுர வடிவிலும், இரண்டாவது தொகுப்பை ஆலய வடிவத்திலும் அமைக்கவும்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
ஆதியாகமம் 6:14–22; 7–8; மோசே 8:16–24
கர்த்தருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றுவது என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கும்.
-
பெரும்பாலான பிள்ளைகள் நோவா மற்றும் பேழையின் கதையை விரும்புகிறார்கள். உங்கள் பிள்ளைகள் அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளை வழங்குவதைக் கவனியுங்கள். அவர்களுக்கு உதவ, இந்த குறிப்பில் உள்ள படங்களை நீங்கள் பயன்படுத்தலாம், “Noah and His Family” in Old Testament Stories (22–25), and the third verse of “Follow the Prophet” (Children’s Songbook, 110–11). உங்கள் பிள்ளைகள் கதையின் சில பகுதிகளை நடித்து மகிழ்வார்கள்—உதாரணமாக, பேழையை கட்டுவதற்கு ஒரு கருவியைப் பயன்படுத்துவது போல் பாசாங்கு செய்து அல்லது பேழைக்குள் விலங்குகள் நுழைவது போல் நடப்பது.
-
நோவாவைப் பற்றி நீங்கள் ஒன்றாகப் பேசும்போது, இன்று தேவனுடைய தீர்க்கதரிசியைப் பெற்றிருப்பதால் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் இன்றும் போதிக்கும் நோவா கற்பித்த விஷயங்களைக் கண்டுபிடிக்க மோசே 8:16–24 ஐ ஆராய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். இந்தப் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தால் நாம் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
ஆதியாகமம் 9:15–16.
தேவன் எனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
-
வானவில் எதைக் குறிக்கிறது என்பதைப்பற்றி பேசும்போது, உங்கள் பிள்ளைகள் அதை வரைவது அல்லது வண்ணம் தீட்டுவதை ரசிக்கலாம் ( ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 9: 21–25 [வேதாகம பிற்சேர்க்கை] பார்க்கவும்). நோவாவும் அவனுடைய குடும்பத்தினரும் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எதை நினைக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்?
-
திருமண மோதிரம், படம் அல்லது நாளேடு போன்ற உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை உங்களுக்கு நினைவூட்டும் விஷயங்களை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டலாம். உங்கள் பிள்ளைகள் தங்கள் சொந்த உதாரணங்களைப் பகிர்ந்து கொள்ளட்டும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான ஞானஸ்நான உடன்படிக்கையை நினைவில் கொள்ள உதவும் திருவிருந்து போன்ற நமது உடன்படிக்கைகளை நினைவில் கொள்ள உதவும் விஷயங்கள்பற்றி நீங்கள் உரையாடலை வழிநடத்தலாம் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20: 75–79 பார்க்கவும்).
வானவில் “எனக்கும் உங்களுக்கும் நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக” இருக்கும் என்று நோவாவின் குடும்பத்தாரிடம் தேவன் கூறினார் (ஆதியாகமம் 9:12).
ஆதியாகமம் 11:1–9.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதே பரலோகத்திற்கு ஒரே வழி.
-
உங்கள் பிள்ளைகளுடன் கட்டைகள் அல்லது பிற பொருட்களிலிருந்து ஒரு கோபுரத்தை உருவாக்குவது வேடிக்கையாக இருக்கும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, பாபேலின் ஜனங்கள் உயரமான கோபுரத்தைக் கட்டுவதன் மூலம் பரலோகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்தார்கள் என்பதை விளக்குங்கள். பின்னர் நீங்கள் இரட்சகரின் படத்தை ஒன்றாகப் பார்த்து, பரலோகத்திற்குச் செல்வதற்கு அவர் எவ்வாறு உதவுகிறார் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேட்கலாம். இரட்சகரைப் பின்பற்ற நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் பேசலாம்.
-
ஆதியாகமம் 11:1–9 இல் உள்ள பாபேல் கோபுரத்தின் கதையைப் படிப்பதோடு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஏலமன் 6:28 ஐயும் படிக்கலாம். இந்த வசனத்தின்படி, பாபேலின் ஜனங்கள் ஏன் கோபுரத்தைக் கட்டினார்கள்? இந்த கோபுரத்தை கட்டுவது ஏன் பரலோகத்தை அடைய தவறான வழி? பரலோகத்தை அடைவதற்கான சரியான வழியைக் கண்டறிய 2 நேபி 31:20–21 மற்றும் ஏலமன் 3:28 ஐ நீங்கள் ஆராயலாம். பாபேலின் ஜனங்களுக்கு நாம் என்ன அறிவுரை கூறுவோம்?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.