2020–2024
எங்களுடைய தேவனே, உம்முடைய துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை நினைவுகூரும்
அக்டோபர் 2021 பொது மாநாடு


10:17

எங்களுடைய தேவனே, உம்முடைய துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை நினைவுகூரும்

துன்பப்படுகிற உங்களுக்கு வலிமையையும் மகிழ்ச்சியையும் அளிக்க, உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவது இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் வல்லமையைத் திறக்கிறது.

பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டத்தில் அவரது பிள்ளைகள் அனைவரும் சோதிக்கப்பட்டு, சோதனைகளை எதிர்கொள்ளும் ஒரு அநித்திய அனுபவமும் அடங்கும்.1 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைகள், கதிர்வீச்சு சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளிலிருந்து சரீர வேதனைகளை நான் உணர்ந்தேன், இன்னும் உணர்கிறேன். சித்திரவதையான தூக்கமில்லாத இரவுகளில் நான் உணர்ச்சிப் போராட்டங்களை அனுபவித்திருக்கிறேன். எனக்கு எல்லாமுமாக இருக்கிற ஒரு குடும்பத்தை கொஞ்ச காலம் விட்டுச் சென்று, நான் எப்போதும் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே மரித்துவிடுவேன் என மருத்துவ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பது பொருட்டின்றி, பல்வேறு சோதனைகள் மற்றும் உலகப்பிரகார பலவீனங்களால் உடல் அல்லது உணர்ச்சி ரீதியான துன்பம் ஏற்பட்டிருக்கிறது, அது இப்போது இருக்கிறது, அல்லது எப்போதாவது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்

இயற்கையான முதுமை, எதிர்பாராத நோய்கள் மற்றும் சீரற்ற விபத்துகள், பசி அல்லது வீடின்மை; அல்லது துஷ்பிரயோகம், வன்முறை செயல்கள் மற்றும் போரால் சரீர பாடுகள் ஏற்படலாம்.

கவலை அல்லது மனச்சோர்விலிருந்து; துணை, பெற்றோர் அல்லது நம்பகமான தலைவரின் துரோகம்; வேலை அல்லது நிதியின் தலைகீழ் மாற்றங்கள்; மற்றவர்களின் நியாயமற்ற தீர்ப்பு; நண்பர்கள், பிள்ளைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களின் தீர்மானங்கள்; அதன் பல வடிவங்களில் துஷ்பிரயோகம்; திருமணம் அல்லது பிள்ளைகளின் நிறைவேறாத கனவுகள்; அன்புக்குரியவர்களின் நோய் அல்லது மரணம்; அல்லது வேறு பல வழிகளிலிருந்து உணர்வுபூர்வ துன்பங்கள் எழலாம்.

நம் ஒவ்வொருவருக்கும் வரும் தனித்துவமான மற்றும் சில நேரங்களில் பலவீனப்படுத்தும் துன்பங்களை நீங்கள் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

நன்றியுடன், நம்பிக்கை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் காணப்படுகிறது, மேலும் நம்பிக்கையும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். வேதம், தீர்க்கதரிசன போதனைகள், பல ஊழியக்காரர்களின் சந்திப்புகள் மற்றும் எனது சொந்த ஆரோக்கிய சோதனையிலிருந்து பெறப்பட்ட நம்பிக்கையின் நான்கு கொள்கைகளை இன்று நான் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கொள்கைகள் பரந்த அளவில் பொருந்தாது, ஆனால் ஆழமான தனிப்பட்டவையாகவும் இருக்கிறது.

முதலாவதாக, துன்பங்கள் என்பதற்கு, தேவன் உங்கள் வாழ்க்கையில் அதிருப்தி அடைந்திருக்கிறார் என்று அர்த்தமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் சீஷர்கள் ஆலயத்தில் ஒரு குருடனைப் பார்த்து, “ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இல்லை பெற்றவர்கள் செய்த பாவமோ?” என்று கேட்டார்கள்.

வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களும் துன்பங்களும் பாவத்தின் விளைவு என்று இன்றுள்ள பெரும்பாலான மக்கள் நம்புவதைப்போல அவருடைய சீஷர்கள் தவறாக நம்பினார்கள் எனத் தோன்றுகிறது. ஆனால், “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டே”2 என இரட்சகர் பதிலளித்தார்.

மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது தேவனுடைய கிரியை.3 ஆனால் சோதனைகள் மற்றும் துன்பங்கள், குறிப்பாக மற்றொருவரின் பாவ சுயாதீன உபயோகத்தால்,4 இறுதியில் எவ்வாறு தேவனின் பணியை முன்னேற்ற முடியும்?

“உன்னைப் புடமிட்டேன் … ; உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்” 5என கர்த்தர் அவருடைய உடன்படிக்கையின் மக்களிடம் கூறினார். உங்கள் துன்பங்களின் காரணங்கள் எதுவாயிருந்தாலும், உங்கள் ஆத்துமாவை சுத்திகரிக்க, உங்களுடைய அன்பிற்குரிய பரலோக பிதா அவர்களுக்கு வழிகாட்டமுடியும்.6 சுத்திகரிக்கப்பட்ட ஆத்துமாக்கள் உண்மையான பச்சாத்தாபத்துடனும் இரக்கத்துடனும் மற்றவர்களுடைய பாரங்களைச் சுமக்கமுடியும்.7 “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” வந்த சுத்திகரிக்கப்பட்ட ஆத்துமாக்கள் என்றென்றும் தேவனுடைய பிரசன்னத்தில் மகிழ்ச்சியுடன் வாழ ஆயத்தப்பட்டிருப்பார்கள், “தேவன் இவர்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார்.”8

இரண்டாவதாக, உங்கள் துன்பங்களை பரலோக பிதா நெருக்கமாக அறிவார். சோதனைகளுக்கு மத்தியில், தேவன் தொலைவில் இருக்கிறார் என்றும், நம் வேதனையைப்பற்றி கவலைப்படாமலிருக்கிறார் என்றும் நாம் தவறாக நினைக்கலாம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கூட இந்த உணர்வை அவரது வாழ்வில் ஒரு தாழ்வான நிலைமையில் வெளிப்படுத்தினார். லிபர்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான பிற்காலப் பரிசுத்தவான்கள் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டபோது, ஜெபத்தின் மூலமாக ஜோசப் ஸ்மித் புரிந்துகொள்ளுதலை நாடினார்: “தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்? உம்முடைய மறைவான இடத்தை மூடியிருக்கிற கூடாரம் எங்கே?” இந்த வேண்டுதலுடன் அவர் முடித்துக்கொண்டார்: “எங்களுடைய தேவனே, உம்முடைய துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை நினைவுகூரும்.”9

துன்பப்படுகிற ஜோசப்புக்கும் மற்ற அனைவருக்கும் கர்த்தருடைய பதில் மறு உறுதியளிக்கிறது.

“என்னுடைய மகனே, உன்னுடைய ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக; உன்னுடைய இக்கட்டுகளும் உன்னுடைய உபத்திரவங்களும் ஒரு சிறிய சமயத்திற்கு மட்டுமே;

“பின்னர் நீ அதை நன்கு சகித்திருந்தால், உன்னதத்தின் தேவன் உன்னை உயர்த்துவார்.”10

தங்களுடைய சோதனைகளின்போது தேவனின் அன்பை அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்களென என்னுடன் அநேக பரிசுத்தவான்கள் பகிர்ந்துகொண்டனர். சில கடுமையான வலிக்கான காரணத்தை மருத்துவர்கள் இன்னும் கண்டறியாதபோது என் புற்றுநோய் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் என் சொந்த அனுபவத்தை நான் தெளிவாக நினைவு கூருகிறேன். எங்கள் மதிய உணவின் வழக்கமான ஆசீர்வாதத்தை வழங்கும் எண்ணத்தில், நான் என் மனைவியுடன் உட்கார்ந்தேன். அதற்கு பதிலாக, “பரலோக பிதாவே, தயவுசெய்து எனக்கு உதவும். நான் மிகவும் உடல் நலமில்லாமலிருக்கிறேன்” என அழுவதே நான் செய்யமுடிந்ததெல்லாம். அடுத்த 20 லிருந்து 30 விநாடிகள் அவருடைய அன்பினால் நான் சூழப்பட்டேன். எனது நோய்க்கான காரணமோ, இறுதி முடிவின் அறிகுறியோ, வலியிலிருந்து நிவாரணமோ எனக்கு வழங்கப்படவில்லை. அவருடைய தூய அன்பை நான் உணர்ந்தேன், அது போதுமாயிருந்தது.

ஒரு குருவி விழுவதைக்கூட கவனிக்கிற நமது பரலோக பிதா உங்கள் துன்பங்களை அறிந்திருக்கிறாரென நான் சாட்சியளிக்கிறேன்.11

மூன்றாவதாக, உங்கள் துன்பத்தை நன்கு தாங்கும் வலிமை உங்களுக்கிருக்க உதவ இயேசு கிறிஸ்து தனது இயலும் வல்லமையை வழங்குகிறார். அவருடைய பாவநிவர்த்தியின் மூலமாக இந்த இயலும் வல்லமை சாத்தியமாக்கப்படுகிறது.12 அவர்கள் சிறிது முரடாக இருந்தால் எந்தத் துன்பத்தையும் தாங்களாகவே சமாளிக்க அவர்களால் முடியும் என அநேக சபை அங்கத்தினர்கள் நினைக்கிறார்கள் என நான் பயப்படுகிறேன். இது வாழ்வதற்கு கடினமான வழி. உங்கள் ஆத்துமாவைப் பலப்படுத்தும் இரட்சகரின் வழங்கப்படும் எல்லையற்ற வல்லமையை உங்கள் தற்காலிக பலத்தால் ஒருபோதும் ஒப்பிட முடியாது.13

நமக்கு ஒத்தாசை செய்யும்படியாக, நமது வேதனைகளையும், நோய்களையும், உடல் குறைபாடுகளையும் இயேசு கிறிஸ்து “தம் மேல் ஏற்றுக்கொள்வார்” என மார்மன் புஸ்தகம் போதிக்கிறது.14 துன்பத்தின் நேரங்களில் உங்களுக்கு ஒத்தாசை செய்வதற்கும் உங்களை வலுப்படுத்துவதற்கும் இயேசு கிறிஸ்து வழங்குகின்ற வல்லமையை உங்களால் எவ்வாறு ஈர்க்க முடியும்? இரட்சகருடன் நீங்கள் செய்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுவதால் உங்களை நீங்களே அவருடன் பிணைத்துக் கொள்வது முக்கியம். ஆசாரியத்துவ நியமங்களை நாம் பெறும்போது இந்த உடன்படிக்கைகளை நாம் செய்கிறோம்.15

ஆல்மாவின் மக்கள் ஞானஸ்நான உடன்படிக்கைக்குள் பிரவேசித்தார்கள். பின்னர் அவர்கள் அடிமைத்தனத்தில் அவதிப்பட்டனர் மற்றும் பகிரங்கமாக வழிபடவோ அல்லது சத்தமாக ஜெபிக்கவோ அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இருதயங்களில் அழுது கொண்டு, தங்கள் உடன்படிக்கைகளை தங்களால் முடிந்தவரை கைக்கொண்டனர். அதன் விளைவாக, தெய்வீக வல்லமை வந்தது. “அவர்கள் தங்கள் சுமைகளை இலகுவாக சுமக்கும்படி கர்த்தர் அவர்களை பலப்படுத்தினார்.”16

“ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே”17 என நமது நாட்களில் இரட்சகர் அழைக்கிறார். எப்போதும் அவரை நினைவுகூர நமது திருவிருந்து உடன்படிக்கையை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய ஆவி நம்முடன் இருக்கும் என்று அவர் வாக்களிக்கிறார். சோதனைகளைச் சகித்துக்கொள்ளவும், நம்மால் சொந்தமாகச் செய்ய முடியாததைச் செய்யவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வலிமையைக் கொடுக்கிறார். “இந்த குணப்படுதலில் சில மற்றொரு உலகில் நடக்கலாம்” என தலைவர் ஜேம்ஸ் இ. பாஸ்ட் போதித்திருந்தாலும் ஆவியானவரால் நம்மைக் குணப்படுத்தமுடியும்.18

“தேவபக்திக்குரிய வல்லமை வெளிப்படுத்தப்படுகிற” 19ஆலய உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களாலும் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஒரு பயங்கர விபத்தில் தனது பதின்ம வயது மகளையும் பின்னர் புற்றுநோயால் தனது கணவரையும் இழந்த ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். இத்தகைய இழப்பையும் துன்பத்தையும் அவளால் எப்படி சகித்துக்கொள்ள முடிந்ததென நான் அவளிடம் கேட்டேன். வழக்கமான ஆலய வழிபாட்டின் போது பெறப்பட்ட நித்திய குடும்பத்தின் ஆவிக்குரிய உறுதிகளிலிருந்து வலிமை வந்தது என்று அவள் பதிலளித்தாள். வாக்களிக்கப்பட்டதைப் போல, கர்த்தருடைய வீட்டின் நியமங்கள் தேவ வல்லமையுடன் அவளை பாதுகாத்தது.20

நான்காவதாக, ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தைக் காண தேர்ந்தெடுங்கள். இரவு தொடர்ந்து செல்கிறது, பகலின் வெளிச்சம் ஒருபோதும் வராது என அடிக்கடி துன்பப்படுகிறவர்கள் உணருகிறார்கள். கண்ணீர் விடுவது பரவாயில்லை.21 ஆயினும், துன்பத்தின் இருண்ட இரவுகளில் நீங்கள் இருப்பதைக் கண்டால், விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியான பிரகாசமான காலைகளில் எழலாம்.22

உதாரணமாக, வலியிருந்தாலும் கூந்தல் இல்லாவிட்டாலும் அவளது நாற்காலியில் கம்பீரமாக சிரித்துக்கொண்டிருந்த, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிற ஒரு இளம் தாயை நான் சந்தித்தேன். தங்களால் கருத்தரிக்க முடியாவிட்டாலும், இளைஞர் தலைவர்களாக சந்தோஷமாக சேவை செய்து கொண்டிருந்த நடுத்தர வயதான தம்பதியரை நான் சந்தித்தேன். ஒரு சில நாட்களில் மரித்துவிடப்போகிற ஒரு இளம் பாட்டியும், தாயும், மனைவியுமாயிருந்த ஒரு அன்பான பெண்ணுடன் நான் அமர்ந்திருந்தேன், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியிலும் சிரிப்போடும் மகிழ்ச்சியான நினைவுகளோடும் அவர்களிருந்தார்கள்.

இந்த துன்பப்பட்டுக் கொண்டிருந்த பரிசுத்தவான்கள், தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தவற்றுக்கு உதாரணமாயிருந்தனர்:

நாம் அடைகிற மகிழ்ச்சி, நமது வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொருத்தது அல்ல, எல்லாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் பொருத்ததே.

“நமது வாழ்க்கையில், இரட்சிப்பின் தேவனுடைய திட்டத்திலும் … இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய சுவிசேஷத்திலும் கவனமிருக்கும்போது நமது வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருந்தாலும், அல்லது நடக்காவிட்டாலும் நாம் சந்தோஷத்தை உணரமுடியும்.”23

நமது பரலோக பிதா அவருடைய துன்பப்படும் பரிசுத்தவான்களை நினைவுகூருகிறார், உங்களை நேசிக்கிறார், நெருக்கமாக உங்களைப்பற்றி அறிந்திருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன்.24 நீங்கள் எப்படி உணருகிறீர்களென நமது இரட்சகர் அறிந்திருக்கிறார். “மெய்யாகவே அவர் நம் சஞ்சலங்களை ஏற்றுக்கொண்டு, நமது துக்கங்களைச் சுமந்தார்.”25 துன்பப்படுகிற உங்களுக்கு வலிமையையும் மகிழ்ச்சியையும் அளிக்க, உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுதல் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் வல்லமையைத் திறக்கிறது என்பதை அன்றாடம் பெறுபவனாக நான் அறிவேன்.26

“அவருடைய குமாரனால் உண்டான சந்தோஷத்தின் மூலம் உங்கள் சுமைகள் இலகுவாகும்படி தேவன் உங்களுக்கு அருளுவாராக”27 என துன்பப்படுகிற அனைவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. 1 பேதுரு 4:12–13 பார்க்கவும்.

  2. யோவான் 9:1–3 பார்க்கவும்.

  3. மோசே 1:39 பார்க்கவும்.

  4. மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் சுயாதீனத்தின் பாவமான பயன்பாடுகள் பட்டியலிட முடியாதவை, ஆனால் விபச்சாரம் செய்யும் துணை, குழந்தை அல்லது பெரியவரை துஷ்பிரயோகம் செய்யும் நபர், குடிபோதையில் ஒரு அன்பிற்குரியவரை காயப்படுத்தும் அல்லது கொல்லும் வாகன ஓட்டி, அல்லது அநேகரை சுடுவது அல்லது பலரை ஊனமுற அல்லது கொல்லும் தீவிரவாத வெடிகுண்டு வீசுபவர் நிச்சயம் அடங்குவர்.

  5. ஏசாயா 48:10; சகரியா 13:9ஐயும் பார்க்கவும்.

  6. 2 நேபி 2:1–2 பார்க்கவும்.

  7. மூப்பர் ராபர்ட் டி.ஹேல்ஸ் போதித்தார்: “நாம் துன்பப்படும்போது மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது ஆவிக்குரிய வளர்ச்சியில் இது ஒரு முக்கிய அம்சமாகும். சக மனிதர்களின் சேவையில் நாம் நம் வாழ்க்கையை இழக்கும்போது, நம்மை நாமே காண்கிறோம்” (“Your Sorrow Shall Be Turned to Joy,” Ensign, Nov. 1983, 66).

  8. வெளிப்படுத்தின விசேஷம் 7:13–17; 21:3–4 பார்க்கவும்.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:1, 6.

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8.

  11. மத்தேயு 10:29–31 பார்க்கவும்.

  12. Bible Dictionary, “Grace” பார்க்கவும்.

  13. பிலிப்பியர் 4:13, 19; ஆல்மா 26:12 பார்க்கவும்; 2 நாளாகமம் 32:7–8 ஐயும் பார்க்கவும்.

  14. ஆல்மா 7:11–13 பார்க்கவும்; 2 நேபி 9:21 ஐயும் பார்க்கவும்.

  15. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 3.5, ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  16. மோசியா 24:13–15 பார்க்கவும்.

  17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36.

  18. James E. Faust, “Where Do I Make My Stand?,” Liahona, Nov. 2004, 21.

  19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20..

  20. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:22 பார்க்கவும்; 1 நேபி 14:14 ஐயும் பார்க்கவும்.

  21. யோவான் 11:35; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:45 பார்க்கவும்.

  22. This idea is inspired by Elder Joseph B. Wirthlin’s message “Sunday Will Come,” Liahona, Nov. 2006, 28–30. யாக்கோபு 1:2–4 (including the Joseph Smith Translation in footnote 2a); 5:10–11 ஐயும் பார்க்கவும்.

  23. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 82.

  24. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அப்போஸ்தலர் மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் தனது வலிமிகுந்த மற்றும் இறுதியில் வாழ்நாள் முடிவுக்கு வரும் நோயைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் கிசுகிசுத்தார், “நீங்கள் என் மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் கற்பிக்கும்படி நான் உங்களுக்கு லுகேமியா நோயைக் கொடுத்தேன்.” (Bruce C. Hafen, A Disciple’s Life: The Biography of Neal A. Maxwell [2002], 562 பார்க்கவும்).

  25. மோசியா 14:4; ஏசாயா 53:4 ஐயும் பார்க்கவும்.

  26. பெறுனருக்கு மிகவும் பொருத்தமான வேத வார்த்தை பங்குதாரர் (ஏத்தேர் 12:6–9 பார்க்கவும்).

  27. ஆல்மா 33:23.