2020–2024
அவர் நம்மைப் பயன்படுத்த நான் ஜெபிக்கிறேன்
அக்டோபர் 2021 பொது மாநாடு


0:0

அவர் நம்மைப் பயன்படுத்த நான் ஜெபிக்கிறேன்

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் செய்கிற அநேக தனிப்பட்ட காரியங்களை பெரிதாக்கி, சிறிய முயற்சிகள் கூட்டாக பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பைலோ மாவை மற்றும் பிஸ்தாசியோ கொட்டைகளால் செய்யப்பட்ட இந்த தின்பண்டம் ஒரு உங்களுக்கு நன்றி. சிரியாவின் டமாஸ்கஸில் பல தசாப்தங்களாக, மூன்று பேக்கரிகளை வைத்திருந்த கடடோ குடும்பத்தால் இது தயாரிக்கப்பட்டது. போர் வந்தபோது, அவர்களுடைய நகரின் ஒரு பகுதிக்கு உணவு மற்றும் பொருட்களை ஒரு முற்றுகை நிறுத்தியது. கடடோ குடும்பம் பட்டினி கிடக்க ஆரம்பித்தது. இந்த மோசமான சூழ்நிலையின் உச்சத்தில், பிற்காலப் பரிசுத்தவான்களின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய ரஹ்மாவில் சில தைரியமான ஊழியர்கள் தினசரி சூடான உணவை, சிறு குழந்தைகளுக்கு பாலுடன் வழங்கத் தொடங்கினர். ஒரு கடினமான காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு புதிய நாட்டில் அந்தக் குடும்பம் தங்கள் வாழ்க்கையையும், பேக்கரியையும் தொடங்கினார்கள்.

சமீபத்தில் பின்வரும் செய்தியுடன் தின்பண்டத்தின் ஒரு பெட்டி சபை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது: “இரண்டு மாதங்களுக்கு மேலாக, ரஹ்மா-பிற்காலப் பரிசுத்தவான் [தொண்டு நிறுவனங்கள்] சமையலறையிலிருந்து எங்களால் உணவைப் பெறமுடிந்தது. அது இல்லாமல் நாங்கள் பசியால் மரிக்க நேரிட்டிருக்கும். என் கடையிலிருந்து ஒரு சிறிய நன்றியின் மாதிரியாக தயவுசெய்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற ஒவ்வொன்றிலும் … உங்களை ஆசீர்வதிக்க சர்வ வல்ல தேவனை நான் கேட்கிறேன்.”1

நன்றியுணர்வின் நினைவுகூருதலின் ஒரு தின்பண்டம். இது உங்களுக்கானது. செய்திகளில் ஒரு கதையைப் பார்த்த பின் ஜெபித்த அனைவருக்கும், வசதியில்லாதபோது தன்னார்வமாக வந்த, அல்லது மனிதாபிமான நிதிக்கு பணம் நன்கொடையளித்த, இது ஏதோ ஒரு நன்மையை அளிக்கும் என நம்பிய அனைவருக்கும், உங்களுக்கு நன்றி.

ஏழைகளை பராமரிப்பதற்கான தெய்வீக பொறுப்பு

ஏழைகளைப பராமரிப்பதற்கு இயேசு கிறிஸ்து சபை தெய்வீக ஆணைக்கு கீழிருக்கிறது.2 இது, இரட்சிப்பின், மேன்மையடைதலின் பணியின் தூண்களில் ஒன்று.3 ஆல்மாவின் நாட்களின்போது எது உண்மையாயிருந்ததோ அது நிச்சயமாக நமக்கும் உண்மையாயிருக்கிறது: “ஆகையால், தங்களுடைய விருத்தியடைந்த நிலையிலும் வஸ்திரமில்லாதவனையும், பட்டினியாயிருப்போனையும், விடாய்த்திருப்போனையும், வியாதியஸ்தனையும், போஷிக்கப்பட்டிராதவனையும் திருப்பி அனுப்பவில்லை; ஐஸ்வரியத்தின் மீது தங்கள் இருதயத்தை வைக்கவில்லை; அதனால் முதியோருக்கும், வாலிபருக்கும், அடிமைக்கும், சுயாதீனனுக்கும், புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்கும் சபையைச் சேர்ந்த மற்றும் சேராதவர்களுக்குமாய் அனைவருக்கும் பட்சபாதமின்றி தேவையிலிருந்தவர்களுக்கு உதாரத்துவமாய் கொடுத்தார்கள்.”4

பின்வருபவற்றையும் சேர்த்து பல்வேறு வழிகளில் இந்த குற்றச்சாட்டுக்கு சபை பதிலளிக்கிறது:

  • ஒத்தாசைச் சங்கம், ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் வகுப்புகள் மூலம் நாம் ஊழியம் செய்கிறோம்.

  • உபவாசம் மற்றும் உபவாசக் காணிக்கைகளின் பயன்.

  • நல்வாழ்வு பண்ணைகள் மற்றும் உணவு சாலைகள்.

  • குடியேறியவர்களுக்கு வரவேற்பு மையங்கள்.

  • சிறையிலிருப்போரை சென்றடைதல்.

  • சபை மனிதாபிமான முயற்சிகள்.

  • சேவை வாய்ப்புகளுடன் தன்னார்வலர்களுடன் பொருந்தக்கூடிய கிடைக்கக்கூடிய JustServe செயலி.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் செய்கிற அநேக தனிப்பட்ட காரியங்களை பெரிதாக்கி, சிறிய முயற்சிகள் கூட்டாக பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுகிற இவைகள் எல்லா வழிகளிலும் ஆசாரியத்துவத்தால் நிர்வகிக்கப்பட்டது.

முழு பூமிக்கும் தீர்க்கதரிசிகள் உக்கிராணக்காரர்களாயிருக்கின்றனர்

சபை உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, முழு பூமிக்கும் தீர்க்கதரிசிகள் பொறுப்பாயிருக்கிறார்கள். அந்த பொறுப்பை எவ்வாறு தனிப்பட்ட வகையிலும் அர்ப்பணிப்புடனும் பிரதான தலைமை பொறுப்பேற்கிறார்களென என்னுடைய சொந்த அனுபவத்தில் என்னால் அறிவிக்கமுடியும். தேவைகள் வளருகிறதைப்போல, ஒரு விசேஷித்த வழியில் நமது மனிதாபிமான அணுகுதலை அதிகரிக்க பிரதான தலைமை நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய போக்குகள் மற்றும் மிகச்சிறிய விவரங்களில் அவர்கள் ஆர்வமாயிருக்கிறார்கள்.

சமீபத்தில், தொற்றுநோயின்போது பயன்பாட்டிற்காக மருத்துவமனைகளுக்காக பீஹைவ் ஆடை நிலையம் தைத்த பாதுகாப்பு மருத்துவ ஆடைகளில் ஒன்றை அவர்களிடம் நாங்கள் கொண்டுவந்தோம். ஒரு மருத்துவராக தலைவர் ரசல் எம்.நெல்சன் மிகுந்த ஆர்வமுள்ளவராயிருந்தார். அவர் அதை சாதாரணமாக பார்க்க விரும்பவில்லை. சுற்றுப்பட்டைகள் மற்றும் நீளம் மற்றும் பின்புறத்தில் அது கட்டப்பட்ட விதத்தை சரிபார்க்க அவர் அதை அணிந்து பார்க்க விரும்பினார். “உங்கள் பணிகளில் நீங்கள் மக்களைச் சந்திக்கும் போது, அவர்களுடைய உபவாசத்திற்காக, அவர்களுடைய காணிக்கைகளுக்காக மற்றும் கர்த்தருடைய பெயரால் அவர்களின் ஊழியத்திற்காக அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்” என அவரது குரலில் உணர்ச்சியுடன், அவர் பின்னர் எங்களிடம் கூறினார்.

மனிதாபிமான அறிவிப்பு

சூறாவளி, பூகம்பங்கள், அகதிகள் இடப்பெயர்ச்சி மற்றும் ஒரு தொற்றுநோய்க்கும் தலைவர் நெல்சனின் வழிகாட்டுதலில், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை எவ்வாறு பிரதியுத்திரமளித்தது என்பதைப்பற்றி நான் உங்களுக்கு மீண்டும் தெரிவிக்கிறேன், பிற்காலப் பரிசுத்தவான்கள் மற்றும் அநேக நண்பர்களின் அன்பிற்கு நன்றி. கடந்த 18 மாதங்களில், 1,500 க்கும் மேற்பட்ட கோவிட்-19 திட்டங்கள் நிச்சயமாக சபையின் நிவாரணத்தின் மிகப்பெரிய கவனமாக இருந்தபோது, 108 நாடுகளில் 933 இயற்கை பேரழிவுகள் மற்றும் அகதிகள் நெருக்கடிகளுக்கும் சபை பிரதியுத்தரமளித்தது. ஆனால் புள்ளி விவரங்கள் முழு கதையையும் கூறவில்லை. என்ன செய்யப்படுகிறது என்பதன் சிறிய சுவையை சித்தரிக்க, நான்கு சுருக்கமான உதாரணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தென் ஆப்ரிக்க கோவிட் நிவாரணம்

தென்னாப்பிரிக்காவின் வெல்கோமைச் சேர்ந்த பதினாறு வயதான டீகே ம்புட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோரை இழந்தாள், இதனால் மூன்று இளைய உடன்பிறப்புகளைத் தனியாகப் பராமரிக்க விடப்பட்டாள். போதுமான உணவைக் கண்டுபிடிப்பது எப்போதுமே அவளுக்குக் கடினமாக இருந்தது, ஆனால் கோவிட் வழங்கலில் பற்றாக்குறை மற்றும் தனிமைப்படுத்தல்கள் அதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியது. அண்டை வீட்டாரின் தாராள மனப்பான்மையால் துடைக்கப்பட்டு பெரும்பாலும் அவர்கள் பசியாயிருந்தார்கள்.

Dieke Mphuti

ஆகஸ்டு 2020ல், ஒரு வெப்பமான நாளில், அவளுடைய கதவு தட்டப்பட்டதில் டீகே ஆச்சரியப்பட்டாள். அவள் கதவைத் திறந்து இரண்டு அந்நியர்களைக் கண்டாள், ஒருவர், ஜோன்ஸ்பெர்க்கின் பிரதேச அலுவலகத்திலிருந்து வந்த சபை பிரதிநிதி, மற்றொருவர், தென் ஆப்ரிக்காவின் சமுக மேம்பாட்டு இலாக்காவின் அலுவலர்.

ஆபத்திலிருந்த வீடுகளுக்கு உணவைக் கொண்டுவர இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்திருந்தன. சபை மனிதாபிமான நிதியிலிருந்து வாங்கப்பட்ட சோள மாவு மற்றும் பிற உணவுப் பொருட்களின் குவியலைப் பார்த்தபோது, டீக்கின் மீது நிவாரணம் கழுவப்பட்டது. அரசாங்க உதவித் தொகுப்பு அவளுக்கு நடைமுறைக்கு வரும் வரை பல வாரங்கள் அவளுடைய குடும்பத்தைத் தக்கவைக்க இவை உதவும்.

கோவிட் தொற்றுநோய்களின் போது உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற இதுபோன்ற ஆயிரக்கணக்கான அனுபவங்களில் டீகின் கதை ஒன்றாகும், உங்கள் பரிசுத்தப்படப்பட்ட நன்கொடைகளுக்கு நன்றி.

Afghan Relief at Ramstein

ஆப்கானிஸ்தானிலிருந்து விமானத்தில் வெளியேறிய ஆயிரக்கணக்கானவர்களின் சமீபத்திய படங்களை நாம் அனைவரும் பார்த்தோம். தங்கள் இறுதி இடங்களுக்கு தொடர்வதற்கு முன், அநேகர், கத்தார், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் உள்ள விமான தளங்கள் அல்லது பிற தற்காலிக இடங்களுக்கு வந்தடைந்தனர். அவர்களுடைய தேவைகள் உடனடியாக இருந்தன, பொருட்களுடனும் தன்னார்வலர்களுடனும் சபை பிரதியுத்தரமளித்தது. ஜெர்மனியிலுள்ள ராம்ஸ்டீன் விமானத் தளத்தில், டயபர்கள், குழந்தைக்கான தேவைகள், உணவு மற்றும் காலணிகளின் பெரிய நன்கொடைகளை சபை வழங்கிற்று.

அகதிகளுக்கு மனிதாபிமான நன்கொடைகள்
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக பெண்கள் தைத்தல்

காபூல் விமான நிலையத்தில் ஆவேசத்தில் பல ஆப்கானிஸ்தான் பெண்களின் பாரம்பரிய தலை முக்காடுகள் கிழிந்ததால், அவர்கள் தங்கள் தலையை மறைக்க தங்கள் கணவனின் சட்டைகளை பயன்படுத்துவதை சில ஒத்தாசைச் சங்க சகோதரிகள் கவனித்தனர். எந்தவொரு மத அல்லது கலாச்சார எல்லைகளையும் தாண்டிய நட்பு நடவடிக்கையில், ராம்ஸ்டீன் முதல் தொகுதியின் சகோதரிகள் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பாரம்பரிய முஸ்லீம் ஆடைகளை தைக்க கூடினர். சகோதரி பெத்தானி ஹால்ஸ் சொன்னார், “பெண்களுக்கு ஜெபிப்பதற்கான ஆடைகள் தேவை என்று நாங்கள் கேள்விப்பட்டோம், அவர்கள் ஜெபம் செய்வதற்கு [வசதியாக] நாங்கள் தைத்துக் கொண்டிருக்கிறோம்.”5

Haiti Earthquake Relief

நன்மை செய்ய ஒரு கருவியாயிருக்க நீங்கள் பணக்காரராகவோ அல்லது வயதானவராகவோ இருக்கத் தேவையில்லை என்பதை அடுத்த எடுத்துக்காட்டு காட்டுகிறது. பதினெட்டு வயது மாரி “ஜட்ஜோ” ஜாக் ஹைட்டியில் உள்ள காவில்லான் கிளையைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் மாதத்தில் அவளது நகரின் அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இடிந்து விழுந்த பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களில் அவளது குடும்பத்தின் வீடு ஒன்றாகும். உங்கள் வீட்டை இழக்கும் விரக்தியை கற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் அந்த விரக்தியை விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஜட்ஜோ நம்பமுடியாத அளவிற்கு வெளிப்புறமாக மாறினாள்.

மாரி ஜாக்க்யுஸ்
Haiti Earthquake Relief

தொடர்புடைய ஊடகம்

போராடிக்கொண்டிருந்த அவளைப் பராமரிக்க ஆரம்பித்த ஒரு வயதான பக்கத்து வீட்டாரை அவள் பார்த்தாள். குப்பைகளை அகற்ற அவள் மற்றவர்களுக்கு உதவினாள். அவள் சோர்வாக இருந்தபோதிலும், அவள் சபையின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து உணவு மற்றும் சுகாதார கருவிகளை மற்றவர்களுக்கு விநியோகித்தாள். இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற இளைஞர்களும் இளம் வயமேற்கொள்ளப்பட்ட அநேக சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டுகளுக்கு ஜாட்ஜோவின் கதை ஒன்று.துவந்தோரும் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களால்

German Flood ReliefHaiti Earthquake Relief

பூகம்பத்திற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னால், அட்லான்டிக் முழுவதிலும் இதைப் போன்ற சேவையை மற்றொரு இளம் வயதுவந்தோர் செய்தார்கள். ஜூலை மாதத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதையும் அடித்துச் சென்ற வெள்ளம் தசாப்தங்களில் மிகக் கடுமையாயிருந்தது.

ஜெர்மனியில் வெள்ளம்

இறுதியாக நீர் வடிந்தபோது, நதிக்கரை மாவட்டமான அஹ்ர்வெய்லர், ஜெர்மனியில் உள்ள ஒரு கடைக்காரர் சேதத்தை ஆராய்ந்து மிகவும் கவலைக்குள்ளானார். பக்தியுள்ள கத்தோலிக்கரான இந்த தாழ்மையான மனிதர், தனக்கு உதவ தேவன் யாரையாவது அனுப்ப ஜெபித்தார். மறுநாள் காலையிலே, ஜெர்மனி பிராங்பேர்ட் ஊழியத்தின் தலைவர் டான் ஹம்மன், மஞ்சள் நிற உதவிக் கரங்கள் பட்டைகளை அணிந்த ஊழியக்காரர்களின் சிறிய குழுவுடன் தெருவுக்கு வந்து சேர்ந்தார். கடைக்காரரின் சுவர்களில் 10 அடி(3 மீ) வரை தண்ணீர் நின்று, ஒரு ஆழமான சேறு தேங்கியிருந்தது. சேறை தன்னார்வலர்கள் வாரி எடுத்து, தரை விரிப்புகளையும், உலர் சுவரையும் அகற்றி, அகற்றப்படுவதற்காக எல்லாவற்றையும் தெருவில் குவித்தனர். மிகவும் மகிழ்ச்சியடைந்த கடைக்காரர் அவர்களுடன் மணிக்கணக்கில் வேலை செய்தார், அவருடைய ஜெபத்துக்கு பதிலளிக்க கர்த்தர் தனது ஊழியர்களின் குழுவை, 24 மணி நேரத்திற்குள் அனுப்பியதைக் கண்டு வியந்தார்!6

நல்லது, அவர் எங்களைப் பயன்படுத்த நான் ஜெபிக்கிறேன்.

சபையின் மனிதாபிமான முயற்சிகளைப்பற்றிப் பேசும்போது, மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலன்ட் ஒருசமயம் குறிப்பிட்டார்: “மற்ற மக்களை தேவன் பயன்படுத்துவதில் … பெரும்பாலான நேரங்களில் … ஜெபங்களுக்குப் பதிலளிக்கப்படுகிறது. நல்லது, அவர் எங்களைப் பயன்படுத்த நான் ஜெபிக்கிறேன். மக்களின் ஜெபங்களுக்கு நாம் பதிலாயிருக்க நான் ஜெபிக்கிறேன்.”7

சகோதர சகோதரிகளே, உங்களுடைய ஊழியம், நன்கொடைகள், நேரம், அன்பின் மூலமாக அநேக ஜெபங்களுக்கு நீங்கள் பதிலாயிருக்கிறீர்கள். இருந்தும் செய்யவேண்டியவை மிக அதிகமாயிருக்கின்றன. சபையின் ஞானஸ்நான அங்கத்தினர்களாக தேவையிலிருப்போரைக் கவனிக்க நாம் உடன்படிக்கையின் கீழிருக்கிறோம். நமது தனிப்பட்ட முயற்சிகளுக்கு பணம் அல்லது தொலைதூர இருப்பிடங்கள் தேவையில்லை8; அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலும், “இதோ அடியேனிருக்கிறேன், என்னை அனுப்பும்”9 என கர்த்தரிடம் சொல்ல விருப்பமுள்ள இருதயமும் தேவை.

கர்த்தரின் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஆண்டு

இயேசு வளர்ந்து வந்த நாசரேத்துக்கு அவர் வந்து, வாசிக்க ஜெபஆலயத்தில் எழுந்து நின்றார் என லூக்கா 4 பதிவுசெய்கிறது. இது அவருடைய பூலோக ஊழியத்தின் ஆரம்பத்திற்கு பக்கத்திலிருந்தது, மேலும், ஏசாயா புஸ்தகத்திலிருந்து ஒரு உரையை அவர் மேற்கோள் காட்டினார்:

“கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்,

“கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும். …

“… உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என பின்னர் அவர் அறிவித்தார்.”10

அப்படியே, நமது சொந்த நேரத்திலும் வேத வாக்கியம் நிறைவேறிற்று என நான் சாட்சியளிக்கிறேன். இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்க இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். குருடருக்கு பார்வையை மீட்டெடுப்பதே அவருடைய சுவிசேஷம். அவரது சபை சிறைப்பிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பிரசங்கிக்க உள்ளது, மேலும் உலகெங்கிலும் உள்ள அவரது சீஷர்கள் காயமடைந்தவர்களுக்கு விடுதலையளிக்க முயற்சிக்கின்றனர்.

“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”11 என அவருடைய அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுருவிடம் இயேசு கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டு நான் முடிக்கிறேன். அந்த கேள்விக்கு நமக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் மற்றும் “[அவருடைய] ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக”12 என்பதில் அடங்கியிருப்பது சுவிசேஷத்தின் சாராம்சம். நமது போதகராகிய இயேசு கிறிஸ்துவின்மீது மிகுந்த பக்தியுடனும் அன்புடனும் அவருடைய மகத்துவமான ஊழியத்தின் ஒரு பகுதியாக இருக்க நம் ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன், மேலும் அவர் நம்மைப் பயன்படுத்த நான் ஜெபிக்கிறேன்.” இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Abdul Razaq, personal correspondence, May 2021.

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:11–18 பார்க்கவும்.

  3. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 1.2.2, ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  4. ஆல்மா 1:30.

  5. Bethani Halls, quoted in “Aiding Afghan Evacuees,” Europe Area Welfare and Self-Reliance Newsletter, Aug. 2021.

  6. From Dan Hammon (Germany Frankfurt Mission president), email to Ty Johnson, 2021.

  7. Jeffrey R. Holland, “Neonatal Resuscitation with Elder Holland” (video), The Church of Jesus Christ of Latter-day Saints, Nov. 10, 2011, youtube.com.

  8. Sharon Eubank, “16 Things You Can Do to Be a Humanitarian,” Oct. 3, 2021, ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  9. ஏசாயா 6:18; ஆபிரகாம் 3:27 ஐயும் பார்க்கவும்.

  10. லூக்கா 4:18–19, 21.

  11. யோவான் 21:15–17 பார்க்கவும்.

  12. யோவான் 21:15–17.