என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூன் 1–7. “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூர்கிறது”: ரூத்; 1 சாமுவேல் 1–7


“ஜூன் 1–7 ‘என் இருதயம் கர்த்தருக்குள் களிகூர்கிறது’: ரூத்; 1 சாமுவேல் 1–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“ஜூன் 1–7 ‘“என் இருதயம் கர்த்தருக்குள் களிகூர்கிறது,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

ரூத் மற்றும் நகோமி ஒன்றாக பயணம் செய்தல்

நீர் போகுமிடத்திற்கு–சாண்டி ப்ராக்கிள்டன் காகன்

ஜூன் 1–7: “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூர்கிறது”

ரூத்; 1 சாமுவேல் 1–7

சில நேரங்களில் நம் வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரு தெளிவான பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று நாம் கற்பனை செய்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான மிகக் குறுகிய தூரம் ஒரு நேர் கோடு. இருப்பினும் எதிர்பாராத திசைகளில் நம்மை அழைத்துச் செல்லும் தாமதங்கள் மற்றும் மாற்றுப்பாதைகள் ஆகியவற்றால் வாழ்க்கை பெரும்பாலும் நிரம்பியுள்ளது.

ரூத்தும் அன்னாளும் இதை நிச்சயமாகப் புரிந்து கொண்டனர். ரூத் ஒரு இஸ்ரவேலர் அல்ல, ஆனால் அவள் இஸ்ரவேலனை மணந்தாள், அவளுடைய கணவன் இறந்தபோது, அவள் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அவள் தன் குடும்பத்தினருக்கும் அவளுடைய பழைய, பழக்கமான வாழ்க்கைக்கும் திரும்புவாளா, அல்லது அவள் இஸ்ரவேலின் நம்பிக்கையையும், மாமியுடன் ஒரு புதிய வீட்டையும் ஏற்றுக்கொள்வாளா? (ரூத் 1:4–18 பார்க்கவும்). அன்னாளின் வாழ்க்கைக்கான திட்டம் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாக இருந்தது, அவ்வாறு செய்ய இயலாமை அவளை “ஆத்துமாவின் கசப்பில்” விட்டுவிட்டது (1 சாமுவேல் 1:1–10 பார்க்கவும்). ரூத் மற்றும் அன்னாளைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, அவர்களின் எதிர்பாராத பாதைகளில் பயணிக்க வேண்டிய விசுவாசத்தைக் கவனியுங்கள். பின்பு உங்கள் சொந்த பயணத்தைப்பற்றி நீங்கள் சிந்திக்கலாம். இது ரூத் மற்றும் அன்னாளிலிருந்தும், வேறு எவரிடமிருந்தும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் இங்கேயும் உங்கள் நித்திய இலக்குக்கும் இடையிலான சோதனைகள் மற்றும் ஆச்சரியங்கள் முழுவதிலும், “என் இருதயம் கர்த்தரிடத்தில் களிகூர்கிறது” (1 சாமுவேல் 2:1). என்று அன்னாளுடன் சொல்ல நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

இப்புத்தகங்களின் மேம்போக்கான பார்வைக்கு ரூத் மற்றும் 1 சாமுவேல், “ரூத்” மற்றும் “சாமுவேல்” Bible Dictionary பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ரூத்

சோகத்தை வெற்றியாக கிறிஸ்துவால் மாற்ற முடியும்.

எந்த காலகட்டத்திலும் ஒரு விதவையின் வாழ்க்கை கடினமானது. ஆனால் ரூத்தின் கணவன் இறந்தபோது, ​​அவளுடைய நிலைமை மிகவும் கடினமாக இருந்தது. அந்த நேரத்தில் இஸ்ரவேலர் கலாச்சாரத்தில், கணவன் அல்லது மகன்கள் இல்லாத ஒரு பெண்ணுக்கு சொத்துரிமை இல்லை, நடைமுறையில் ஒரு வாழ்க்கைக்காக சம்பாதிக்க வழி இல்லை. ரூத்தின் கதையை நீங்கள் வாசிக்கும்போது, கர்த்தர் சோகத்தை எவ்வாறு பெரிய ஆசீர்வாதங்களாக மாற்றினார் என்பதைக் கவனியுங்கள். ரூத்துக்கு உதவியிருக்கக்கூடியவைபற்றி நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? ரூத்தை அவளது அவநம்பிக்கையான சூழ்நிலையிலிருந்து மீட்பதில் போவாஸ் எப்படி மீட்டான்? (ரூத் 4:4–10 பார்க்கவும்). ரூத் மற்றும் போவாஸ் இருவரும் எப்படி இயேசு கிறிஸ்துவைப் போல் இருந்தனர்?

See also “Be Still, My Soul,” Hymns, no. 124.

ரூத்; 1 சாமுவேல் 1

எனது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவன் எனக்கு வழிகாட்டுவார் மற்றும் உதவுவார் என்று என்னால் நம்ப முடியும்.

ஒருவேளை ரூத்தும் நவோமியும் போல நீங்கள் ஒரு பெரிய இழப்பைச் அனுபவித்திருக்கலாம் (ரூத் 1:1–5 பார்க்கவும்). அல்லது, அன்னாளைப் போலவே, நீங்கள் இதுவரை பெறாத ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் ஏங்கலாம் (1 சாமுவேல் 1:1–10 பார்க்கவும்). இந்தப் பெண்கள் தேவனில் விசுவாசத்தை எப்படிக் காட்டினார்கள்? அவர்களது உதாரணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

நிச்சயமாக, ஒரு குழந்தைக்காக ஜெபிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றைப் பெறுவதில்லை, மேலும் துணை இறந்த ஒவ்வொருவரும் மறுமணம் செய்துகொள்வதில்லை. ஆனால் இரட்சகரிடம் திரும்பும் ஒவ்வொருவரும் அவருடைய உதவியையும் வழிகாட்டுதலையும் பெறுகிறார்கள். வாழ்க்கை கடினமாக இருக்கும்போது கூட நீங்கள் எவ்வாறு கர்த்தரை (ரூத் 2:12) “நம்புகிறீர்கள்” என்பதைக் கவனியுங்கள்.

See also Amy A. Wright, “Abide the Day in Christ,” Liahona, Nov. 2023, 9–11.

அன்னாளும் அவளது குழந்தையும்

இந்தப் பிள்ளைக்காக நான் ஜெபித்தேன்–எல்ஸ்பெத் யங்

1 சாமுவேல் 2; 4–7

கர்த்தருடைய உதவியைப் பெற, நான் அவரை நம்பி அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

தங்கள் எதிரிகள் தாக்கியபோது, ​​​​இஸ்ரவேலர்கள் உடன்படிக்கைப் பெட்டியை வைத்திருப்பதே தங்களைப் பாதுகாக்கும் என்று நினைத்தார்கள். நீங்கள் 1 சாமுவேல் 4–6 ஐப் படிக்கும்போது, ​​அது ஏன் ஒத்துவரவில்லை என்று சிந்தியுங்கள். (1 சாமுவேல் 2:12–25ல், ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களாக பணியாற்றிய ஏலியின் மகன்களின் அநீதியான செயல்களையும் கவனியுங்கள்.) கர்த்தர் உங்களுக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பேழையைக் கைப்பற்றிய பிறகு பெலிஸ்தியர்களுக்கு என்ன நடந்தது என்பதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (அதிகாரங்கள் 5–6 பார்க்கவும்). 1 சாமுவேல் 7ல் கர்த்தரின் பாதுகாப்பை மீண்டும் பெற இஸ்ரவேலின் முயற்சிகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

1 சாமுவேல் 2:1–10 இல் அன்னாளின் பாராட்டுக் கவிதையைப் படிப்பதன் மூலம் நீங்கள் உணர்த்தப்பட்டிருக்கலாம். ஏலியின் மகன்களுக்கும் மற்ற இஸ்ரவேலர்களுக்கும் உதவியிருக்கும் அவளுடைய வார்த்தைகளில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

1 சாமுவேல் 3

வேத பாட வகுப்பு சின்னம்
கர்த்தருடைய குரலை நான் கேட்கவும் கீழ்ப்படியவும் முடியும்.

சில சமயங்களில், கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டபோதிலும் அதை அறியாத சாமுவேலைப் போல் நீங்கள் உணரலாம். நம் அனைவரையும் போலவே, சாமுவேல் கர்த்தருடைய குரலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் 1 சாமுவேல் 3 ஐப் படிக்கும்போது, கர்த்தரின் குரலைக் கேட்பதும் கீழ்ப்படிவதையும்பற்றி இந்த சிறுவனிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் இந்தக் கூடுதல் வேத வாக்கியங்களைத் தேடி, கர்த்தரின் குரலை அடையாளம் காண உதவும் வழிகாட்டுதல்களின் பட்டியலை உருவாக்கலாம்.: 1 ராஜாக்கள் 19:11–12; லூக்கா 24:15–32; 3 நேபி 11:3–7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–23; 8:2–3; 9:7–9.

மற்ற நேரங்களில், வானங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், தேவன் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் நீங்கள் உணரலாம். தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்: “உண்மையிலேயே தேவன் உங்களிடம் பேச விரும்புகிறாரா? ஆம்!” See Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 93–96. தலைவர் நெல்சனின் செய்தியை நீங்கள் படிக்கும்போது, ​​கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவும் கீழ்ப்படியவும் உங்களுக்கு உணர்த்துவது எது? தலைவர் நெல்சன் உங்களை என்ன செய்ய அழைக்கிறார், என்ன ஆசீர்வாதங்களை அவர் வாக்களிக்கிறார்? “Walk in God’s light” (For the Strength of Youth: A Guide for Making Choices, 16–20) இல் வெளிப்படுத்தல் பற்றிய அழைப்புகள் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் நீங்கள் காணலாம். “வெளிப்படுத்தல் பெற உங்கள் ஆவிக்குரிய ஆற்றலை அதிகரிக்குமாறு ” நீங்கள் செய்யக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ரூத்

என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பையும் தயவையும் காட்ட முடியும்.

  • ரூத்தின் கதையை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளும்போது (“Ruth and Naomi” in Old Testament Stories, 100–103 பயன்படுத்தலாம்), கதையில் தயவின் செயலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் கைகளை உயர்த்த அவர்களை அழைக்கவும். மற்றவர்கள் அவர்களிடம் தயவு காட்டும்போது அல்லது மற்றவர்களிடம் அவர்கள் தயவு காட்டும்போது அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இரட்சகர் எப்படி நம்மிடம் தயவு காட்டினார்? அவருடைய முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? (see “Kindness Begins with Me,Children’s Songbook, 145).

    2:0

    Ruth and Naomi

ரூத்; 1 சாமுவேல் 1

நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க முடியும்.

  • ரூத் மற்றும் அன்னாளின் கதைகள் கடினமான காலங்களில் உண்மையாக இருக்க உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கும். பாடுகள், செயல்கள், ஆசீர்வாதங்கள் தலைப்புகளுடன் எளிய விளக்கப்படத்தை உருவாக்க அவர்களுக்கு உதவுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். ரூத் 1:3–5, 8, 16; 2:1–3, 8–12; 4:13–17; 1 சாமுவேல் 1:1–18 -ஐ பிறகு சேர்ந்து படிக்கலாம், மேலும் இந்த வசனங்களில் அவர்கள் கண்டதை தலைப்புகளின் கீழ் எழுதுங்கள். ரூத்தும் அன்னாளும் தேவன் மீது எப்படி விசுவாசத்தைக் காட்டினர்? கடினமான காலங்களில் கர்த்தர் உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதற்கான உதாரணங்களை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் பகிர்ந்து கொள்ளலாம்.

1 சாமுவேல் 1:1–18

பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.

  • அன்னாளைப் பற்றி அறிய, உங்கள் பபிள்ளைகள் படிக்கலாம் 1 சாமுவேல் 1:1–18 அல்லது “Hannah” in Old Testament Stories (104–5) “Hannah’s Faith” (video, Gospel Library) அல்லது பார்க்கவும். ஒரு பிள்ளைக்கு பந்தைத் தூக்கி எறிவது மேலும் பந்தை வேறொருவருக்கு அனுப்பும் முன் கதையின் ஒரு பகுதியைச் சொல்ல அவர்களை அழைப்பது வேடிக்கையாக இருக்கலாம். அன்னாளின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் ஜெபத்தைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளுகிறோம்?

    1:15

    Hannah

    3:9

    Hannah's Faith

சாமுவேலும் ஏலியும்

சாமுவேல் ஏலியிடம் உண்மையைச் சொல்லுதல்-ராபர்ட் டி பாரெட்.

1 சாமுவேல் 3:1–10

நான் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவும், கீழ்ப்படியவும் முடியும்.

  • சாமுவேலின் வெளிப்பாட்டின் அனுபவத்திலிருந்து உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள ஒரு எளிய நாடகம் உதவக்கூடும். 1 சாமுவேல் 3:1–10 வாசிக்கும்போது ஒரு பிள்ளை சாமுவேலைப் போலவும், இன்னொரு பிள்ளை ஏலியைப் போலவும் நடிக்கலாம் (see also “Samuel the Prophet” in Old Testament Stories, 106–9, or the video “Samuel and Eli,” Gospel Library). கர்த்தருடைய சத்தத்தை எவ்வாறு கேட்பது என்பது பற்றி சாமுவேலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கர்த்தர் நம்மிடம் பேசும்போது நாம் கேட்கத் தயாராக இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

    2:10

    Samuel the Prophet

    1:58

    Samuel and Eli

  • உங்கள் பிள்ளைகளிடம் கர்த்தர் எப்படிப் பேசுகிறார் என்பதை ஒருவருக்கு எப்படி விளக்குவார்கள் என்று கேளுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–23; 8:2–3; 9:7–9 இல் பதில்களைத் தேட நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.

பிள்ளைகள் ஆவியை அடையாளம் காண உதவுங்கள். நம்முடைய சொந்த உணர்வுகளுக்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையில் பகுத்தறிவது எளிதல்ல. இதற்கு ஒவ்வொருவரும் அவ்வப்போது போராடுகிறார்கள். உங்கள் பிள்ளைகள் ஆவியின் செல்வாக்கை உணரும்போது அவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் 1 சாமுவேல் 3:1–10 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் பரிந்துரைக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போது, ​​உங்கள் மனதிலும் இதயத்திலும் கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

சாமுவேல் படுக்கையிலிருந்து எழுதல்

சிறுவனான சாமுவேல் கர்த்தரால் அழைக்கப்படுதல், -ஹாரி ஆண்டர்சன்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்