“தீர்க்கதரிசி எலியா,”பழைய ஏற்பாட்டு கதைகள்
“தீர்க்கதரிசி எலியா,”பழைய ஏற்பாட்டு கதைகள்
1 இராஜாக்கள் 16–18
தீர்க்கதரிசி எலியா
ஒரு தாயின் விசுவாசமும் கர்த்தரின் அற்புதங்களும்
இஸ்ரவேல் ராஜ்யத்தில் மழை இல்லை, தண்ணீர் வற்றிப்போனது. ஆகாப் ராஜாவும், யேசபேல் ராணியும் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை விரும்பவில்லை. அவர்கள் சில தீர்க்கதரிசிகளையும் கொன்றனர். ராஜாவும் ராணியும் சிலைகளிடம் மழைக்காக ஜெபம் செய்தனர். ஆனால் எலியா தீர்க்கதரிசி அவர்களிடம் கர்த்தர் பல ஆண்டுகளாக மழை அனுப்ப மாட்டார் என்று கூறினான்.
1 இராஜாக்கள் 16:29–33; 17:1; 18:13
ராஜாவும் ராணியும் எலியா மீது கோபமடைந்தார்கள். எலியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மறைந்திருக்கும்படி கர்த்தர் எச்சரித்தார்.
1 இராஜாக்கள் 17:2–3
கர்த்தர் எலியாவை ஒரு நீரோடைக்கு அழைத்துச் சென்று, உணவைக் கொண்டு வர பறவைகளை அனுப்பினார். ஆனால் மழை இல்லாததால், ஓடை வறண்டு, எலியாவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
1 இராஜாக்கள் 17:4–7
கர்த்தர் எலியாவை தொலைதூர நகரத்தில் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றார். எலியா அவளிடம் தண்ணீரும் அப்பமும் கேட்டான். ஆனால் அவள் தனக்கும் தன் மகனுக்கும் இன்னும் ஒரு நாள் மட்டுமே போதுமானதை வைத்திருந்தாள்.
1 இராஜாக்கள் 17:8–12
அது அவளுடைய கடைசி உணவு என்று எலியாவுக்குத் தெரியும். அவனுக்கு அவள் உணவளித்தால், மழை திரும்பவரும் வரை கர்த்தர் அவளுடைய குடும்பத்திற்கு உணவு அளிப்பார் என்று அவன் உறுதியளித்தான்.
1 இராஜாக்கள் 17:13–14
அந்தப் பெண் எலியாவுக்கு ரொட்டி தயாரித்தாள். பின்னர் அவளுடைய எண்ணெயும் மாவும் பெருகின! எலியாவுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் பல நாட்கள் போதுமான உணவு இருந்தது.
1 இராஜாக்கள் 17:15–16
ஒரு நாள் அந்தப் பெண்ணின் மகன் நோய்வாய்ப்பட்டு மரித்தான். கர்த்தர் ஏன் தனக்கு இது நடக்க அனுமதிக்கிறார் என்று அவள் எலியாவிடம் கேட்டாள்.
1 இராஜாக்கள் 17:17–20
எலியாவுக்கு ஆசாரியத்துவம் இருந்தது. அவன் அவளது மகனை ஆசீர்வதித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க அனுமதிக்கும்படி கர்த்தரிடம் கேட்டான். குழந்தை மீண்டும் சுவாசித்தது, எலியா கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று அந்தப் பெண் அறிந்தாள்.
1 இராஜாக்கள் 17:21–24