“ஜூலை 18–24. எஸ்றா 1; 3–7; நெகேமியா 2; 4–6; 8: ‘நான் பெரிய வேலையைச் செய்கிறேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“ஜூலை 18–24. எஸ்றா 1; 3–7; நெகேமியா 2; 4–6; 8,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
செருபாபேல் ஆலயத்தின் பட விளக்கம்–சாம் லாலர்
ஜூலை 18–24
எஸ்றா 1; 3–7; நெகேமியா 2; 4–6; 8
“நான் பெரிய வேலையைச் செய்கிறேன்”
தலைவர் எஸ்றா டாஃப்ட் பென்சன் போதித்தார், “தேவனின் வார்த்தை … பரிசுத்தவான்களை பலப்படுத்துவதற்கும் பரிசுத்த ஆவியினால் அவர்களை ஆயுதந்தரிக்கவும் வல்லமை பெற்றிருக்கிறது, இதனால் அவர்கள் தீமையை எதிர்க்கவும், நல்லதைப் பிடித்துக் கொள்ளவும், இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணவும் முடியும்” (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 118).
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
சுமார் 70 ஆண்டுகளாக யூத மக்கள் பாபிலோனியாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எருசலேமையும் ஆலயத்தையும் இழந்துவிட்டார்கள், தேவ நியாயப்பிரமாணம் மீதான தங்கள் ஒப்புக்கொடுத்தலை பலர் மறந்துவிட்டார்கள். ஆனால் தேவன் அவர்களை மறக்கவில்லை. உண்மையில், அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக அறிவித்தார், “நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பி வரப்பண்ணும்படிக்கு, உங்கள் மேல் என் நல் வார்த்தையை நிறைவேறப் பண்ணுவேன்” (எரேமியா 29:10). இந்த தீர்க்கதரிசனத்திற்கு உண்மையாக, கர்த்தர் யூதர்கள் திரும்புவதற்கு ஒரு வழியைச் செய்தார், மேலும் அவர் தம் ஜனங்களுக்காக “ஒரு பெரிய வேலையை” செய்த ஊழியர்களை எழுப்பினார் (நெகேமியா 6:3). இந்த ஊழியர்களில் செருபாபேல் என்ற அதிபதியும் அடங்குவான், அவன் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினான்; ஜனங்களின் இதயங்களை கர்த்தருடைய நியாயப் பிரமாணத்திற்கு திருப்பிய ஆசாரியனும் வேதபாரகருமான எஸ்றா, எருசலேமைச் சுற்றியுள்ள பாதுகாப்புச் சுவர்களைக் கட்டும் பணியை வழிநடத்திய யூதாவின் பிற்கால அதிபதியான நெகேமியா. அவர்கள் எதிர்ப்பை சந்தித்தனர், ஆனால் எதிர்பாராத இடங்களிடமிருந்து உதவிகளையும் பெற்றனர். அவர்களின் அனுபவங்கள் நமது அனுபவங்களுக்குத் தெரியப்படுத்தவும் உணர்த்தவும் முடியும், ஏனென்றால் நாமும் ஒரு பெரிய வேலையைச் செய்கிறோம். அவர்களைப் போலவே, நம்முடைய வேலையும் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய நியாயப்பிரமாணம் மற்றும் அவரிடத்தில் நாம் காணும் ஆவிக்குரிய பாதுகாப்பு ஆகியவற்றுடன் நிறைய தொடர்புடையது.
எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு,“Ezra” and “Nehemiah” in the Bible Dictionary பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
எஸ்றா 1
தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற கர்த்தர் ஜனங்களுக்கு உணர்த்துகிறார்.
பெர்சியா பாபிலோனியாவைக் கைப்பற்றிய பிறகு, பாரசீக மன்னரான கோரேசு, ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப யூதர்கள் ஒரு குழுவை எருசலேமுக்கு அனுப்ப கர்த்தரால் உணர்த்தப்பட்டான். நீங்கள் எஸ்றா 1 வாசிக்கும்போது, இந்த முக்கியமான வேலையில் யூதர்களை ஆதரிக்க கோரேசு என்ன செய்ய விரும்பினான் என்பதைக் கவனியுங்கள். கர்த்தர் தம்முடைய சபையில் அங்கத்தினர்களாக இல்லாதவர்கள் உட்பட உங்களைச் சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மூலமாக செயல்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கர்த்தரைப்பற்றியும் அவருடைய வேலையைப்பற்றியும் இது உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?
ஏசாயா 44:24–28ஐயும் பார்க்கவும்.
எஸ்றா 3:8–13; 6:16–22
ஆலயங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும்.
பாபிலோனியர்கள் எருசலேமுக்கு படையெடுத்தபோது, அவர்கள் ஆலயத்தைக் கொள்ளையடித்து தரைமட்டமாக எரித்தனர் (2 இராஜாக்கள் 25:1–10; 2 நாளாகமம் 36:17–19 பார்க்கவும்). இதைக் கண்ட யூதர்களிடையே நீங்கள் இருந்திருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள்? (சங்கீதம் 137 பார்க்கவும்). பல தசாப்தங்கள் கழித்து, ஆலயத்தை திரும்பி வந்து கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டபோது யூதர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைக் கவனியுங்கள் (எஸ்றா 3:8–13; 6:16–22 பார்க்கவும்). ஆலயத்தைப்பற்றிய உங்கள் சொந்த உணர்வுகளை சிந்தித்துப் பாருங்கள். ஆலயங்கள் ஏன் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கின்றன? ஆலயங்களுக்காக கர்த்தருக்கு உங்கள் நன்றியை எவ்வாறு காட்ட முடியும்?
ஆலயங்கள் கட்டுவதைப்பற்றி களிகூரும் தற்கால உதாரணங்களுக்கு, “Practice, Celebration, Dedication: Temple Blessings in El Salvador” and “The Laie Hawaii Temple Youth Cultural Celebration” (ChurchofJesusChrist.org) காணொலிகள் பார்க்கவும்.
Practice, Celebration, Dedication: Temple Blessings in El Salvador
The Laie Hawaii Temple Youth Cultural Celebration
இந்த ஆலயம் நம் வாழ்வில் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்க முடியும்.
எஸ்றா 4–6; நெகேமியா 2; 4; 6
எதிர்ப்பையும் மீறி தேவனின் பணி முன்னேற நான் உதவ முடியும்.
கர்த்தருடைய பணி அரிதாகவே எதிர்க்கப்படாமல் போகிறது, இது செருபாபேல் மற்றும் நெகேமியா தலைமையிலான முயற்சிகளில் நிச்சயமாக உண்மையாகும். இரண்டு சந்தர்ப்பங்களிலும், “யூதாவின் சத்துருக்கள்” (எஸ்றா 4: 1) சமாரியர்கள், புறஜாதியினருடன் கலந்த இஸ்ரவேலரின் சந்ததியினர். ஆலயம் கட்டுவதற்கான அவர்களின் எதிர்ப்பைப்பற்றி வாசித்தல் (எஸ்றா 4–6 பார்க்கவும்) இன்று தேவனின் பணி எதிர்கொள்ளும் எதிர்ப்பையும், எதிர்ப்பு வரும்போது நீங்கள் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதையும் சிந்திக்க வழிவகுக்கும்.
இதேபோல், எருசலேமின் சுவர்களை சரிசெய்யும் நெகேமியாவின் வேலையைப் படித்தல் ( நெகேமியா 2 ;4;6 பார்க்கவும்) தேவன் நீங்கள் விரும்பும் வேலையைப்பற்றி சிந்திக்க வைக்கக்கூடும். நெகேமியாவின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
Dieter F. Uchtdorf, “We Are Doing a Great Work and Cannot Come Down,” Liahona, May 2009, 59–62ஐயும் பார்க்கவும்.
எஸ்றா 7; நெகேமியா 8
நான் வேதங்களைப் படிக்கும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.
ஆலயம் புனரமைக்கப்பட்ட பின்னரும், எருசலேம் ஜனங்கள் ஆவிக்குரிய ரீதியில் போராடினார்கள், ஏனென்றால், தலைமுறைகளாக, அவர்களுக்கு “மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்திற்கு” மட்டுப்படுத்தப்பட்ட அணுகுதல் இருந்தது ( நெகேமியா 8: 1 ). வேதபாரகனான எஸ்றா பெர்சியாவின் ராஜாவிடம் எருசலேமுக்குச் செல்ல அனுமதி பெற்றான், அங்கு அவன் “நியாயப்பிரமாணத்தை சபைக்கு முன்பாகக் கொண்டுவந்தான்” ( நெகேமியா 8: 2 ). எஸ்றா 7:10ல் விவரிக்கப்பட்டுள்ளபடி எஸ்றாவின் உதாரணத்தை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம்? எஸ்றா ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை வாசித்ததை விவரிக்கும் நெகேமியா 8 நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையின் வல்லமையைப்பற்றி உங்களுக்கு என்ன எண்ணங்கள் உள்ளன?
Teachings: Ezra Taft Benson, 115–24ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
எஸ்றா 3:8–13; 6:16–22.ஆலயம் புனரமைக்கப்படுகையில், பின்னர் அது அர்ப்பணிக்கப்பட்டபோது யூதர்கள் எவ்வாறு தங்கள் மகிழ்ச்சியைக் காட்டினார்கள்? ஆலயத்தைப்பற்றிய நமது மகிழ்ச்சியைக் காட்ட நாம் என்ன செய்கிறோம்? உங்கள் குடும்பத்தினர் ஆலயங்களின் படங்களைப் பார்த்து, ஆலயங்கள் உங்களுக்கு எவ்வாறு மகிழ்ச்சியைத் தருகின்றன என்பதைப்பற்றி பேசலாம் (temples.ChurchofJesusChrist.org பார்க்கவும்).
-
எஸ்றா 7:6, 9–10, 27–28.இந்த வசனங்களில் அவன் எருசலேமுக்குச் செல்லும்போது கர்த்தருடைய கரம் அவன்மீது இருந்தது என பலமுறை எஸ்றா எழுதினான். இந்த சொற்றொடரின் அர்த்தம் என்ன? கர்த்தருடைய கரத்தை நம்மீது எப்படி உணர்ந்திருக்கிறோம்? ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
-
நெகேமியா 2; 4; 6.குடும்ப அங்கத்தினர்கள் “ஒரு பெரிய வேலையைச்” செய்யும்போது எதிர்ப்பை எதிர்கொள்ளும்போது நெகேமியாவின் கதை அவர்களுக்கு உணர்த்தமுடியும் (நெகேமியா 6: 3). முக்கிய பாகங்களை ஒன்றாக வாசிக்கும்போது குடும்ப அங்கத்தினர்கள் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களிலிருந்து ஒரு சுவரை உருவாக்க முடியும் (நெகேமியா 2:17–20; 4:13–18; 6:1–3 போல). எதிர்ப்பை எதிர்கொள்ளுதல் குறித்து நெகேமியாவிடம் இருந்து நாம் எதைக் கற்கலாம்? நாம் என்ன பெரிய வேலையைச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்? இந்த வேலைக்கு எதிரான எதிர்ப்பைக் கடக்க கர்த்தர் நம்மை எவ்வாறு பலப்படுத்தியுள்ளார்?
-
நெகேமியா 8:1–12.நெகேமியா 8ல், தேவனின் வார்த்தையைக் கேட்க ஆர்வமாக இருந்த மக்களுக்கு எஸ்றா மோசேயின் நியாயப் பிரமாணத்தை வாசித்தான். வசனங்கள் 1–12 வாசித்தல் உங்கள் குடும்பத்தினருக்கு தேவனுடைய வார்த்தையைப் பாராட்டுவதை ஆழப்படுத்த உதவும். தேவனின் சட்டத்தைப்பற்றி மக்கள் எப்படி உணர்ந்தார்கள்? ஒருவருக்கொருவர் “வாசிப்பைப் புரிந்துகொள்ள” நாம் எவ்வாறு உதவ முடியும்? (வசனம் 8).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Love to See the Temple,” Children’s Songbook, 95.
நமது போதித்தலை மேம்படுத்துதல்
வசனங்களை ஒரு குடும்பமாகப் பகிரவும். உங்கள் குடும்ப வேதப் படிப்பின் போது, குடும்ப அங்கத்தினர்கள் தங்களின் தனிப்பட்ட படிப்பில் இருந்து பாகங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கவும்.
எருசலேமில் ஜனங்களுக்கு எஸ்றா வேதம் வாசித்தல், பட விளக்கம்–எச்.வில்லார்ட் ஆர்ட்லிப், © Providence Collection/licensed from goodsalt.com