“நாவூவைக் கட்டமைத்தல்,” நண்பன், செப்டம்பர் 2025, 26–28.
மாதாந்திரநண்பன் செய்தி, செப்டம்பர் 2025
நாவூவைக் கட்டமைத்தல்
கர்த்தர் பரிசுத்தவான்களை ஒரு புதிய இடத்தில் கூடும்படி கூறினார். அது ஒரு பெரிய நதிக்கு அருகில் இருந்தது, அங்கு நிலம் ஈரமாகவும் சேறும் சகதியுமாக இருந்தது. அது ஒரு நகரத்தைக் கட்டுவதற்கு இது நல்ல இடமாகத் தெரியவில்லை. ஆனால் கர்த்தருடைய உதவியுடன், அதை அழகாக்க முடியும் என்பதை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிந்திருந்தார்.
அதை வாழ்வதற்கு ஒரு நல்ல இடமாக மாற்ற பரிசுத்தவான்கள் கடுமையாக உழைத்தனர். தீர்க்கதரிசி ஜோசப் அந்த நகரத்தை நாவூ என்று அழைத்தார், அதன் அர்த்தம் “அழகான இடம்” என்பதாகும்.
கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்கள் நாவூவில் ஒரு ஆலயத்தைக் கட்ட விரும்பினார். பரிசுத்தவான்கள் விரைவாக வேலை செய்யத் தொடங்கினர்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்க மகத்தான ஆசீர்வாதங்களை வைத்திருந்தார். ஆலயத்தில், அவர்கள் கர்த்தருடன் உடன்படிக்கைகள் அல்லது சிறப்பு வாக்குறுதிகளைச் செய்வார்கள். பரலோக பிதாவின் எல்லா பிள்ளைகளுக்கும் அவர் அளிக்கும் மகிழ்ச்சியின் திட்டத்தைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
பரிசுத்தவான்கள் ஆலயம் கட்ட உதவ ஒன்றிணைந்து வேலை செய்தனர். இது நீண்ட காலம் எடுத்தது, ஆனால் கர்த்தர் தம்முடைய ஆலயத்தில் அவர்களுக்காக வைத்திருந்த சிறப்பு வாக்குறுதிகளைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்ள அவர்கள் உற்சாகமாக இருந்தனர்.
வண்ணமிடும் பக்கம்
ஆலயம் கர்த்தரின் வீடு.
கோரி எக்பெர்ட்டின் விளக்கப்படம்
நீங்கள் ஆலயத்தைப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, செப்டம்பர் 2025. மொழிபெயர்ப்பு. Tamil. 19640 418