“பிற்சேர்க்கை B: ஆரம்ப வகுப்புக்காக—தேவனுடைய உடன்படிக்கை பாதையில் வாழ்நாள் முழுவதுக்குமாக உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல், என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“பிற்சேர்க்கை B,“என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
பிற்சேர்க்கை B
ஆரம்ப வகுப்புக்காக—வாழ்நாள் முழுவதும் தேவனுடைய உடன்படிக்கை பாதையிலிருக்க உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல்
ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளைக் கொண்ட மாதங்களில், ஐந்தாம் ஞாயிறு அன்று திட்டமிடப்பட்ட என்னைப் பின்பற்றி வாருங்கள் குறிப்பை, இந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்றல் செயல்பாடுகளுடன் மாற்ற ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள்
கிறிஸ்துவின் கோட்பாடு எவ்வாறு தேவனிடம் திரும்புவது என்று நமக்குக் கற்பிக்கிறது.
இயேசு கிறிஸ்து அமெரிக்காவில் உள்ள ஜனங்களுக்கு தோன்றியபோது, அவர் தனது கோட்பாட்டை அவர்களுக்குப் போதித்தார். நாம் விசுவாசம் கொண்டு, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெற்று, இறுதிவரை நிலைத்திருந்தால், நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கலாம் என்று அவர் கூறினார் (3 நேபி 11:31–40; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:29ஐ பார்க்கவும்). இந்தக் கொள்கைகள் மற்றும் நியமங்கள் நம் வாழ்நாள் முழுவதும் இரட்சகரிடம் நெருங்கி வர உதவும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்பிக்க கீழே உள்ள நிகழ்ச்சிகள் உங்களுக்கு உதவும்.
கிறிஸ்துவின் கோட்பாட்டைப் பற்றி மேலும் அறிய, 2 நேபி 31ஐ பார்க்கவும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆகியவற்றைக் குறிக்கும் படங்களை பிள்ளைகளுக்குக் கொடுங்கள். (Gospel Art Book, nos. 1, 111, 103, and 105ஐ பார்க்கவும்). நான்காவது விசுவாசப்பிரமாணத்தை பிள்ளைகளுடன் வாசிக்கவும் அல்லது மனப்பாடம் செய்யவும், அந்தக் கொள்கை அல்லது நியமம் குறிப்பிடப்படும்போது அவைகளின் படங்களைப் பிடிக்கச் சொல்லுங்கள். இந்தக் கொள்கைகள் மற்றும் நியமங்கள் ஒவ்வொன்றும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப் போல ஆக நமக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
-
விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் பெறுதல் மற்றும் திடப்படுத்துதல் ஆகியவை ஒரே நேர நிகழ்வுகள் அல்ல, ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் நமது ஆவிக்குரிய வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்? உதாரணமாக, நீங்கள் அவர்களுக்கு ஒரு விதை மற்றும் ஒரு பெரிய மரத்தின் படத்தைக் காட்டலாம் (அல்லது பலகையில் இவற்றை வரையலாம்). தண்ணீர், மண் மற்றும் சூரிய ஒளி போன்ற பெரிய மரமாக விதை வளர உதவும் விஷயங்களைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு உதவுங்கள். இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தைக் கட்டியெழுப்புதல், ஒவ்வொரு நாளும் மனந்திரும்புதல், நம்முடைய ஞானஸ்நான உடன்படிக்கைகளைப் பின்பற்றுதல், திருவிருந்தில் பங்கேற்றல் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குச் செவிசாய்த்தல் ஆகிய காரியங்களை நம் வாழ்நாள் முழுவதும் தேவனிடம் நெருங்கி வருவதற்கு நாம் செய்பவை என அவர்கள் காண உதவுங்கள்.
-
“How Can Repenting Help Me Feel Happy?” எனும் மூப்பர் டேல் ஜி. ரென்லண்டின் செய்தியிலிருந்து பட்டாசு பற்றிய கதையை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் (Friend, Dec. 2017, 12–13, or Liahona, Dec. 2017, 70–71; “Repentance: A Joyful Choice” [Gospel Library] காணொளியையும் காணுங்கள்). கதையின் பல்வேறு கட்டங்களில், மூப்பர் ரென்லண்ட் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைப் பற்றி சிந்திக்க பிள்ளைகளை அழைக்கவும். நாம் மனந்திரும்பும்போது ஏன் மகிழ்ச்சியை உணர்கிறோம்? உங்களை மன்னிக்கும்படி பரலோக பிதாவிடம் நீங்கள் கேட்டபோது நீங்கள் உணர்ந்த மகிழ்ச்சியையும் அன்பையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4:36Repentance: A Joyful Choice
ஞானஸ்நானம்
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற போது எடுத்துக்காட்டை அவர் எனக்காக ஏற்படுத்தினார்.
இயேசு பாவம் இல்லாதவராக இருந்தாலும், பரலோக பிதாவுக்குக் கீழ்ப்படிவதில் ஒரு சிறந்த முன்மாதிரியை வைப்பதற்காக அவர் ஞானஸ்நானம் பெற்றார் (2 நேபி 31:6–10 பார்க்கவும்).
ஞானஸ்நானம் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள, கோட்பாடும் உடன்படிக்கைகளும். 20:37; Topics and Questions, “Baptism,” Gospel Library பார்க்கவும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
இரட்சகரின் ஞானஸ்நானம் மற்றும் மற்றொரு நபரின் ஞானஸ்நானம் பற்றிய படத்தைக் காட்டுங்கள் (அல்லது Gospel Art Book, எண் 35 மற்றும் எண் 103 அல்லது எண் 104 பார்க்கவும்). இரண்டு படங்களுக்கிடையில் எது வித்தியாசமானது, எது ஒன்றுபோலுள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்ள பிள்ளைகளைக் கேளுங்கள். மத்தேயு 3:13–17 ஒன்று கூடி படியுங்கள் அல்லது “Chapter 10: Jesus Is Baptized” in New Testament Stories, 26–29 இந்த கதைகளில் பிள்ளைகள் கேட்கும் விஷயங்களை அவர்கள் படங்களில் சுட்டிக்காட்டட்டும். இரட்சகர் மீதான உங்கள் அன்பையும், அவரைப் பின்பற்றுவதற்கான உங்கள் விருப்பத்தையும் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.
1:52Chapter 10: Jesus Is Baptized
-
“When Jesus Christ Was Baptized” (Children’s Songbook, 102) போன்ற ஞானஸ்நானம் பற்றி ஒரு பாடலைக் கேளுங்கள் அல்லது பாடுங்கள். பாடலிலிருந்து ஞானஸ்நானம் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? 2 நேபி 31:9–10ஐ வாசித்து, இயேசு கிறிஸ்து ஏன் ஞானஸ்நானம் பெற்றார் என்பதைக் கேட்க பிள்ளைகளை அழைக்கவும். அவர்களின் ஞானஸ்நான நாளில் தங்களைப் பற்றிய ஒரு படத்தை வரைய அவர்களை அழைக்கவும்.
நான் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்து ஞானஸ்நானம் பெற தேர்வு செய்யலாம்.
ஞானஸ்நானத்திற்குத் தயாராவது என்பது ஒரு நிகழ்வுக்கு தயாராவதை விட அதிகம். இதன் பொருள் ஒரு உடன்படிக்கை செய்ய தயாராகி, பின்னர் அந்த உடன்படிக்கையை வாழ்நாள் முழுவதும் கைக்கொள்வதாகும். பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்கும்போது பரலோக பிதாவுடன் அவர்கள் செய்யும் உடன்படிக்கையைப் புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று சிந்தித்துப் பாருங்கள், அதில் அவர் அவர்களுக்கு அளிக்கும் வாக்குத்தத்தங்கள் மற்றும் அவர்கள் அவருக்கு அளிக்கும் வாக்குறுதிகள் ஆகியவை அடங்கும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
ஒரு உடன்படிக்கை என்பது ஒரு நபருக்கும் பரலோக பிதாவுக்கும் இடையிலான வாக்குறுதி என்பதை விளக்குங்கள். நாம் தேவனுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது, தேவன் நம்மை ஆசீர்வதிப்பதாக வாக்களிக்கிறார். பலகையில் தேவனுக்கு எனது வாக்குறுதிகள் மற்றும் எனக்கு தேவனின் வாக்குத்தத்தங்கள் எழுதுங்கள். மோசியா 18:10, 13 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 ஆகியவற்றை ஒன்றாக வாசித்து, தகுந்த தலைப்புகளின் கீழ் அவர்கள் காணும் வாக்குறுதிகளின் பட்டியலை உருவாக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்.(Dallin H. Oaks, “Your Baptism Covenant,” Friend, Feb. 2021, 2–3ஐயும் பார்க்கவும்). உங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையைக் கைக்கொள்ள நீங்கள் முயற்சி செய்யும்போது, பரலோக பிதா உங்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தின் போது செய்த காரியங்களின் படங்களை பிள்ளைகளுக்குக் காட்டுங்கள் (சில எடுத்துக்காட்டுகளுக்கு, Gospel Art Book, nos. 33–49ஐ பார்க்கவும்). ஒவ்வொரு படத்திலும் இயேசு என்ன செய்கிறார் என்பதைப் பற்றி பிள்ளைகள் பேசட்டும். மோசியா 18:8–10,13ஐ வாசித்து, ஞானஸ்நானம் எடுக்கும்போது அவர்கள் செய்வதாக வாக்களிக்கும் விஷயங்களைக் கேட்கும்படி பிள்ளைகளை அழைக்கவும். ( “The Baptism Covenant,” Liahona, Aug. 2023, 10-11ஐயும் பார்க்கவும்). இந்த ஞானஸ்தான உடன்படிக்கை ஒவ்வொரு நாளும் நம் செயல்களை எவ்வாறு பாதிக்கும்? இயேசு செய்வது போல் ஒருவருக்கு உதவுவது போன்ற படத்தை வரைய பிள்ளைகளை அழைக்கவும்.
திடப்படுத்தல்
நான் ஞானஸ்தானம் பெற்று திடப்படுத்தப்பட்டவுடன், நான் இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் பரிசுத்தவான்களின் சபையில் உறுப்பினராகிறேன்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் உறுப்பினராவது தேவனுடைய பணியில் சுறுசுறுப்பான பங்கேற்பாளர்களாக பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் உட்பட பல ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட ஒருவரை வகுப்பிற்கு வருமாறு அழைத்து, திடப்படுத்தப்பட்டதைப் பகிரவும். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் உறுப்பினராவதற்கு அவருக்கு அல்லது அவளுக்கு என்ன அர்த்தம் என்பதைப் பற்றி பேசும்படி அவரிடம் கேளுங்கள். பிள்ளைகள் சபையின் உறுப்பினர்களாக தங்கள் ஞானஸ்நான உடன்படிக்கைகளை கைக்கொள்ளும்படியான வழிகளை சிந்திக்க உதவவும். இவைகளைச் செய்வது கிறிஸ்துவின் சபையில் உறுப்பினராக இருப்பதின் மகிழ்ச்சியை நீங்கள் எப்படி உணர உதவியது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
மார்மன் தண்ணீர்களில் உள்ள ஜனங்களின் படத்தைக் காட்டவும் (Gospel Art Book, no. 76 பார்க்கவும்), மற்றும் பிள்ளைகள் படத்தில் என்ன பார்க்கிறார்கள் என்பதை விவரிக்கச் சொல்லுங்கள். ஆல்மாவும் அவனுடைய ஜனங்களும் ஞானஸ்நானம் பெற்ற கதையை சொல்லவும் ( மோசியா 18:1–17; “மார்மன் தண்ணீர்களில் ஆல்மா,” in Book of Mormon Storiesஐப் பார்க்கவும்). மோசியா 18:8–9ஐ மதிப்பாய்வு செய்து, கிறிஸ்துவினுடைய சபையின் உறுப்பினர்களாக ஜனங்கள் செய்ய மனதுள்ளவர்களாக இருந்த காரியங்களை பிள்ளைகள் நினைவில் வைத்துக்கொள்ள உதவும்படியாக அவர்களை செய்கைகளை செய்ய அழைக்கவும். சபை உறுப்பினர்கள் இந்த வழிகளில் சேவை செய்வதைக் கண்ட உங்கள் அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ளவும் .
2:41Alma at the Waters of Mormon
நான் திடப்படுத்தப்பட்டவுடன், நான் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுகிறேன்.
நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படும்போது, பரலோக பிதா “அவருடைய ஆவியானவர் [நம்முடன்] எப்போதும் இருக்க” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77) வாக்குத்தத்தம் செய்கிறார். தேவனின் இந்த அற்புதமான பரிசு பரிசுத்த ஆவியின் வரம் என்று அழைக்கப்படுகிறது.
பரிசுத்த ஆவியின் வரம் பற்றி மேலும் அறிய, கேரி ஈ. ஸ்டீவன்சன், “Promptings of the Spirit,” Liahona, Nov. 2023, 42–45; Topics and Questions, “Gift of the Holy Ghost,” Gospel Library பார்க்கவும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33:15ஐ வாசித்து, நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படும்போது பரலோக பிதா நமக்குக் கொடுக்கும் சிறப்புப் பரிசு என்னவென்று கவனிக்கும்படியாக பிள்ளைகளைக் கேட்டுக்கொள்ளுங்கள் பரிசுத்த ஆவியின் வரம் அவர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவ, யோவான் 14:26; கலாத்தியர் 5:22–23; 2 நேபி 32:5; 3 நேபி 27:20 ஒன்றாக மதிப்பாய்வு செய்யவும். “A Special Gift” (Liahona, Aug. 2023, 18–19) என்ற கட்டுரையையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
-
வகுப்புக்கு முன், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளின் பெற்றோரிடம் பரிசுத்த ஆவியின் வரம் இருப்பதால் அவர்கள் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ளும்படி கேளுங்கள். அவர் அவர்களுக்கு எப்படி உதவுகிறார்? அவர்கள் அவருடைய சத்தத்தை எப்படிக் கேட்கிறார்கள்?
-
“The Holy Ghost” (Children’s Songbook, 105) போன்ற பரிசுத்த ஆவியைப் பற்றிய ஒரு பாடலை ஒன்றாகப் பாடுங்கள். பரிசுத்த ஆவியானவர் நமக்கு எப்படி உதவுவார் என்பதைப் பற்றி பாடல் நமக்கு என்ன கற்பிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பல வழிகளில் பேச முடியும்.
ஆவியின் சத்தத்தை அடையாளம் காணக்கூடிய பிள்ளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்த தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறத் தயாராக இருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசக்கூடிய பல விதங்களைப் பற்றி புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
கடிதம் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது அல்லது தொலைபேசியில் பேசுவது போன்ற தொலைதூரத்தில் வசிக்கும் நண்பரிடம் நாம் பேசுவதற்கான வெவ்வேறு வழிகளைப் பற்றி சிந்திக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். பரலோக பிதா பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடம் வெவ்வேறு வழிகளில் பேச முடியும் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுடனும் இருதயத்துடனும் பேசக்கூடிய பல்வேறு வழிகளைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுவதற்காக “How Does Heavenly Father Speak to Us?” (Friend, Mar. 2020, 2–3, or Liahona, Mar. 2020, F2–F3) தலைவர் டாலின் எச். ஓக்ஸின் செய்தியைப் பயன்படுத்தவும்.
-
உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் மூலமாகவோ அல்லது உங்கள் இருதயத்தில் உள்ள உணர்வு மூலமாகவோ பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் தொடர்பு கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 6:22–23; 8:2–3; பார்க்கவும்); Henry B. Eyring, “Open Your Heart to the Holy Ghost,” Liahona, Aug. 2019, F2–F3 யும் பார்க்கவும்). பரிசுத்த ஆவியானவர் இதேபோன்ற வழிகளில் அவர்களுக்கு உதவ முடியும் என்று பிள்ளைகளுக்கு சாட்சியளிக்கவும்.
-
பிள்ளைகள் ஆவியானவரை உணர்ந்த நேரங்களைப் பற்றி சிந்திக்க உதவுங்கள்—உதாரணமாக, இரட்சகரைப் பற்றி ஒரு பாடலைப் பாடும் தருணமாகவோ அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது நன்மை செய்யும் தருணமாகவோ இருக்கலாம். . பரிசுத்த ஆவியானவர் கொண்டுவரும் ஆவிக்குரிய உணர்வுகளை, குறிப்பாக செயல்படும்படியான அவரது தூண்டுதல்களை அடையாளம் காண அவர்களுக்கு உதவுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஏன் அந்த உணர்வுகளை நமக்குத் தருகிறார் என்று நினைக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சிந்திக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஆவியானவரை இன்னும் தெளிவாகக் கேட்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள்.
திருவிருந்து
நான் திருவிருந்தை எடுக்கும்போது, இரட்சகரின் தியாகத்தை நினைவுகூர்கிறேன், என் உடன்படிக்கைகளைப் புதுப்பிக்கிறேன்.
நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, இரட்சகரை எப்போதும் நினைவுகூரவும், அவருடைய நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளவும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் உடன்படிக்கை செய்கிறோம்.
அதிகம் கற்க மத்தேயு 26:26–30; 3 நேபி 18:1–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79ஐ பார்க்கவும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
“Jesus Introduced the Sacrament to the Nephites” in Scripture Stories Coloring Book: Book of Mormon (2019), 26 பிள்ளைகளை வண்ணமிட அழைக்கவும். படத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும்படி அவர்களிடம் கேளுங்கள். 3 நேபி 18:1–12இலிருந்து பகுதிகளை பிள்ளைகளுக்கு படியுங்கள். அல்லது “ Jesus Shares the Sacrament ,” in Book of Mormon Stories. திருவிருந்தின் போது இயேசு கிறிஸ்துவை நினைவுகூர நாம் என்ன செய்யலாம்?
-
காலணிகளைக் கட்டுவது அல்லது சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவுவது போன்ற அவர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைச் உங்களிடம் சொல்ல பிள்ளைகளிடம் கேளுங்கள். இந்த விஷயங்களை நினைவில் கொள்வது ஏன் முக்கியம்? மரோனி 4:3ஐ பிள்ளைகளுக்கு வாசித்து, நாம் திருவிருந்தை எடுக்கும்போது எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பதாக உறுதியளிக்கும் விஷயங்களைக் கவனிக்குமாறு அவர்களை அழைக்கவும். இயேசு கிறிஸ்துவை நினைவுகூருவது ஏன் முக்கியம்? இயேசு நமக்காக என்ன செய்தார் என்பதை நினைவுகூருவதற்கு திருவிருந்தின் அப்பமும் தண்ணீரும் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள் (மரோனி 4:3; 5:2 பார்க்கவும் ).
-
“நான் வாக்களிக்கிறேன் …” என்று பலகையில் எழுதுங்கள், பிள்ளைகளுக்கு திருவிருந்து ஜெபங்களைப் படியுங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்). நாம் தேவனுக்குச் செய்யும் ஒரு வாக்குறுதியை அவர்கள் கேட்டால், இடைநிறுத்தி, அவர்கள் கேட்ட வாக்குறுதியுடன் பலகையில் உள்ள வாக்கியத்தை முடிக்க அவர்களுக்கு உதவுங்கள்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நாமே எடுத்துக்கொள்வதன் அர்த்தம் என்ன? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க பிள்ளைகளுக்கு உதவ, நாம் நமது பெயர்களை சிலவற்றின் மீது எழுதிய ஏதாவது ஒரு உதாரணத்தைப் பகிரவும். இந்த பொருள்கள் மீது ஏன் நம் பெயர்களை வைக்கிறோம்? இயேசு கிறிஸ்து ஏன் தம்முடைய நாமத்தை நம்மீது வைக்க விரும்புகிறார்? தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த விளக்கத்தைப் பகிர எண்ணுங்கள்: “இரட்சகரின் நாமத்தை நம்மிது தரித்துக்கொள்ளல் நம்முடைய செயலிலும் நம்முடைய வாக்கிலும் இயேசுவே கிறிஸ்து என்று மற்றவர்களுக்கு அறிவித்தலையும் சாட்சி பகிர்தலையும் உள்ளடக்கியது.” (“The Correct Name of the Church,” Liahona, Nov. 2018, 88).
ஆசாரியத்துவ வல்லமை, அதிகாரம் மற்றும் திறவுகோல்கள்
ஆசாரியத்துவத்தின் மூலம் தேவன் தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
பெண்ணும் ஆணும் சிறியோரும் பெரியோருமான தேவனுடைய பிள்ளைகள் யாவரும் தாங்கள் தேவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை கைக்கொள்ளும்போது அவருடைய வல்லமையை பெற்றுக் கொள்கிறார்கள். ஞானஸ்நானம் போன்ற ஆசாரியத்துவ நியமங்களைப் பெறும்போது இந்த உடன்படிக்கைகளைச் செய்கிறோம் (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 3.5, 3.6, Gospel Library பார்க்கவும்.) அதிகம் கற்பதற்கு ரசல் எம். நெல்சன், “Spiritual Treasures,” Liahona, Nov. 2019, 76–79; “Priesthood Principles,” chapter 3 in General Handbookஐ பார்க்கவும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
ஆசாரியத்துவத்தின் காரணமாக பிள்ளைகள் பெறும் ஆசீர்வாதங்களை அவர்கள் கவனிக்க உதவுங்கள். அவர்களுக்கு சில யோசனைகளை கொடுக்க “ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்கள்” (சுவிசேஷ நூலகம்) என்ற காணொளியை காண்பியுங்கள். இந்த ஆசீர்வாதங்களை பலகையில் பட்டியலிடுவதைக் கருத்தில் கொள்ளவும். இந்த ஆசீர்வாதங்கள் நமக்கு ஏன் முக்கியமானவை? இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய ஆசாரியத்துவ வல்லமையின் நிமித்தமாக இந்த ஆசீர்வாதங்கள் நமக்கு வருகின்றன என்று சாட்சியளிக்கவும்.
3:5Blessings of the Priesthood
-
நம்மை ஆசீர்வதிக்க தேவன் எவ்வாறு தமது வல்லமையைப் பயன்படுத்துகிறார் என்பதை விளக்கும் படங்களைக் கண்டுபிடிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். உதாரணமாக, அவர் நமக்காக உருவாக்கிய உலகத்தின் சித்திரம், நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவர் நமக்காக வழங்கிய பரிசுத்தமான நியமங்கள் ஆகியவற்றைக் காணலாம். (see Gospel Art Book, nos. 3, 46, 104, 105, 107, 120). ஆசாரியத்துவத்திற்கும் அது தரும் ஆசீர்வாதங்களுக்கும் நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பகிரவும். பிள்ளைகள் தேவனின் ஆசாரியத்துவ வல்லமையால் ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவங்களைப் பற்றி சிந்திக்க உதவுங்கள்.
-
நம் வாழ்வில் தேவனின் வல்லமையின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று ஆசாரியத்துவ நியமங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் பார்க்கவும் 84:20). பிள்ளைகள் இந்த சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு உதவ, பின்வரும் வேதவாக்கியங்களைப் பலகையில் பட்டியலிடலாம்: 3 நேபி 11:21–26, 33 (ஞானஸ்நானம்); மரோனி 2 (திடப்படுத்தல்); மரோனி 4–5 (திருவிருந்து). பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்தப் பத்திகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது விவரிக்கும் நியமத்தை அடையாளம் காண முடியும். ஆசாரியத்துவ நியமங்களைப் பெறுவதன் மூலம் அவர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள பிள்ளைகளை அழைக்கவும்.
-
பிள்ளைகள் ஞானஸ்நானம் பெறும்போதும், தங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையைக் கடைபிடிக்கும்போதும் தேவனிடமிருந்து வல்லமையைப் பெறுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள். இந்த வல்லமை அவர்களுக்கு எப்படி உதவும் என்று பிள்ளைகளிடம் கேளுங்கள்.
தேவனின் பணி ஆசாரியத்துவ திறவுகோல்களால் வழிநடத்தப்படுகிறது மற்றும் ஆசாரியத்துவ அதிகாரத்தால் நிறைவேற்றப்படுகிறது.
கூடுதலாக, ஒரு நபர் ஒரு அழைப்பிற்காக பணிக்கப்பட்டிருக்கும்போதோ அல்லது தேவனுடைய பணியில் உதவுவதற்காக நியமிக்கப்படும்போதோ, அவர் பணிக்கப்பட்ட ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். கூடுதலாக, தகுதியான ஆண் சபை உறுப்பினர்கள் தங்கள் மீது ஆசாரியத்துவம் வழங்கப்பட்டவர்களாய் ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்படலாம். சபையில் உள்ள அனைத்து ஆசாரியத்துவ அதிகாரத்தின் பயன்பாடு, பிணையத் தலைவர், ஆயர் மற்றும் குழுமத் தலைவர்கள் போன்ற ஆசாரியத் திறவுகோல்களை வைத்திருக்கும் நபர்களால் வழிநடத்தப்படுகிறது. ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் கர்த்தருடைய பணியைச் செய்வதில் ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
மாற்கு 3:14–15ஐ பிள்ளைகளுடன் படித்து, அங்கு விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வின் படத்தை அவர்களுக்குக் காட்டுங்கள் (such as Gospel Art Book, no. 38). யாராவது ஒரு ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்பட்டிருப்பதை அல்லது ஒரு அழைப்பிற்காக பணிக்கப்பட்டிருப்பதை அவர்கள் எப்போதாவது பார்த்ததுண்டா என்று பிள்ளைகளிடம் கேளுங்கள் (அல்லது நீங்கள் பெற்ற அனுபவங்களைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்). இரட்சகர் தம்முடைய அப்போஸ்தலர்களுடன் செய்ததைப் போலவே இது எப்படி ஒத்ததாயிருக்கிறது? குழுவில் உள்ள ஆசாரியத்துவ அலுவல்கள் அல்லது ஒரு அமைப்பில் சபையின் உறுப்பினர்களுக்கு ஆசிரியர் அல்லது தலைவர் போன்ற வழங்கக்கூடிய அழைப்புகளை பட்டியலிட பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஒவ்வொரு அலுவல் அல்லது அழைப்பிற்கு அடுத்ததாக, அந்த அலுவல் அல்லது அழைப்பிற்குரிய அதிகாரம் என்ன என்பதை நீங்கள் எழுதலாம். ஆசாரியத்துவத் திறவுகோல்கள் வழிகாட்டுதலின் கீழ் ஒருவரால் பணிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு எவ்வாறு சேவை செய்ய உதவியது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.
-
கார் அல்லது கதவுக்கு சாவி தேவைப்படுவது போல சாவி தேவைப்படுகிற வேறு எதையாகிலும் பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைகளை அழைக்கவும். உங்களிடம் சாவி இல்லையென்றால் என்ன நடக்கும்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65:2ஐ ஒன்றாகப் படித்து, ஆசாரியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். “Where Are the Keys?” காணொளியையும் நீங்கள் பார்க்கலாம் (சுவிசேஷ நூலகம்) மற்றும் மூப்பர் கேரி ஈ. ஸ்டீவன்சன் ஆசாரியத்துவத் திறவுகோல்களைப் பற்றி என்ன கற்பிக்கிறார் என்பதைத் தேடுங்கள்.
2:51Where Are the Keys?
ஆலயமும் மகிழ்ச்சியின் திட்டமும்
ஆலயம் கர்த்தரின் வீடு.
ஆலயங்கள் என்பது பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆலயங்களில், நாம் அவருடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளுகிறோம், நாம் ஆசாரியத்துவதால் தரிப்பிக்கப்படுகிறோம், வெளிப்படுத்துதலைப் பெறுகிறோம், மரித்த நம் முன்னோர்களுக்கு நியமங்களைச் செய்கிறோம், நித்தியமாக நம் குடும்பங்களுடன் முத்திரிக்கப்படுகிறோம். இவை அனைத்தும் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவாரண பலியால் சாத்தியமாகிறது.
நீங்கள் கற்பிக்கும் பிள்ளைகள் கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்தத்தன்மையை உணர்ந்து, ஆலய நியமங்களில் பங்குகொள்ளத் தகுதியுடையவர்களாக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள உதவுவது எப்படி? இந்த ஆதாரங்களை பரிசீலிப்பதை கருத்தில் கொள்ளவும்: ரசல் எம். நெல்சன், “ஆலயமும் உங்கள் பரிசுத்த அஸ்திபாரமும்,” லியஹோனா, நவ. 2021, 93–96; “பிற்கால பரிசுத்தவான்கள் ஏன் ஆலயங்களைக் கட்டுகிறார்கள்,” temples.ChurchofJesusChrist.org.
ஆலயங்கள் என்பது பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
ஆலயங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களைக் காண்பிக்கவும். ஆலயத்தை சிறப்பான இடமாக எது ஆக்குகிறது என்று பிள்ளைகளிடம் கேளுங்கள். ஒவ்வொரு ஆலயத்திலும் இந்த கல்வெட்டு இருப்பதை சுட்டிக்காட்டுங்கள்: “கர்த்தருக்கு பரிசுத்தம்: கர்த்தருடைய வீடு.” “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்றால் என்ன என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். ஆலயம் கர்த்தரின் வீடு என ஏன் அழைக்கப்படுகிறது? ஆலயத்தைப்பற்றி இது உங்களுக்கு என்ன போதிக்கிறது? பிள்ளைகளில் யாராவது ஒருவர் ஆலயத்துக்கு சென்றிருந்தால், அவர்கள் அங்கு இருந்தபோது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்தால், அங்கு கர்த்தரின் பிரசன்னத்தை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் ஆலயம் உங்களுக்கு ஏன் பரிசுத்தமான இடம் என்பதைப் பற்றி பேசுங்கள்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:15–17 ஒன்றாக வாசிக்கவும். தம்முடைய பரிசுத்த வீட்டிற்குள் நுழைபவர்களிடம் கர்த்தர் என்ன எதிர்பார்க்கிறார் என்று பார்க்கும்படி பிள்ளைகளிடம் கேளுங்கள். அவருடைய வீட்டிற்குள் நுழைவதற்கு நாம் ஏன் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்? இந்த உரையாடலின் ஒரு பகுதியாக ஆலய பரிந்துரைகளைப் பற்றி அதில் ஒன்றை எப்படி பெறுவது என்பதை உட்பட பிள்ளைகளுடன் பேசுங்கள், ஒரு ஆலய பரிந்துரை நேர்காணல் எப்படி இருக்கும் என்பதையும் அதில் கேட்கப்படும் கேள்விகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆயத்தின் உறுப்பினர் ஒருவரை நீங்கள் அழைக்கலாம்.
ஆலயத்தில், தேவனுடன் நாம் உடன்படிக்கை செய்கிறோம்.
தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தாா், “ நாம் நம்முடைய பரலோகப் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பவும், நாம் நேசிக்கிறவர்களுடனிருக்கவும் உடன்படிக்கை பாதையை எடுக்க இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். (“Come, Follow Me,” Liahona, May 2019, 91). உடன்படிக்கையின் பாதையில் ஞானஸ்நானம், திடப்படுத்தல் மற்றும் ஆலய தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தல் ஆகியவை அடங்கும் என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
நாம் ஞானஸ்நானம் பெறும்போதும் திருவிருந்தை புசிக்கும் போதும் தேவனோடு செய்துகொள்ளுகிற உடன்படிக்கைகளை நீங்கள் யோசிக்க உங்களுக்கு உதவும்படி பிள்ளைகளை கேட்கவும். (மோசியா 18:10,13 கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்). ஆலயத்தின் படத்தைக் காட்டி, ஆலயத்தில் நமக்குக் கொடுக்க விரும்புகிற, அதிகமான ஆசீர்வாதங்கள் பரலோக பிதாவிடம் உள்ளன என்பதை விளக்குங்கள்.
-
ஒரு பாதைக்கு செல்லும் வாயிலை வரையவும். நடக்க ஒரு பாதை இருப்பது உதவியாக இருக்கும் என்று ஏன் நினைக்கிறார்கள் என பிள்ளைகளிடம் கேளுங்கள். 2 நேபி 31:17–20ஐ ஒன்றாக வாசியுங்கள், அங்கு நேபி ஞானஸ்நானத்தின் உடன்படிக்கையை ஒரு வாயிலுடன் ஒப்பிட்டு, ஞானஸ்நானத்திற்குப் பிறகு அந்த பாதையில் தொடர நம்மை அழைக்கிறான். ஆலயத்தில் செய்யப்படுகிற உடன்படிக்கைகள் உட்பட ஞானஸ்நானத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய உடன்படிக்கைகள் அநேகம் உள்ளன, தலைவர் நெல்சன் இந்த பாதையை “உடன்படிக்கைப் பாதை” என்று அழைத்தார் என்பதை விளக்குங்கள்.
ஆலயத்தில், மரித்த மூதாதையர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து திடப்படுத்தலாம்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் சுவிசேஷத்தை அறியாமல் இறந்தாலும், அவருடன் வாழத் திரும்புவதை சாத்தியமாக்குகிறது. மரித்த மூதாதையர்களுக்கு ஆலயத்தில் ஞானஸ்நானம் கொடுத்து திடப்படுத்தலாம்.
சாத்தியமான நிகழ்ச்சிகள்
-
உங்களுக்காக உங்களால் செய்ய முடியாத ஒன்றை வேறுயாராவது உங்களுக்காக செய்த தருணத்தைப் பற்றி பேசுங்கள். இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பிள்ளைகளை அழைக்கவும். நாம் ஆலயத்துக்குச் செல்லும்போது, மரித்த மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் போன்ற பரிசுத்த நியமங்களைப் பெறலாம் என்பதை விளக்குங்கள். மரித்தவர்களுக்காக நாம் வேலை செய்யும்போது எப்படி இயேசுவைப் போல இருக்கிறோம்? நாம் நமக்காக செய்ய முடியாத எதை அவர் நமக்காக செய்தார்?
-
தங்கள் முன்னோர்களுக்காக ஞானஸ்நானம் பெற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இளைஞர்களை தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள அழைக்கவும். ஆலயத்தில் எப்படி இருந்தது என்று அவர்களை கேளுங்கள். தங்கள் முன்னோர்களுக்காக இந்த வேலையைச் செய்வதை அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கவும்.
-
வேர்கள் மற்றும் கிளைகள் உட்பட பலகையில் ஒரு மரத்தை வரையவும். ஒரு குடும்பம் ஒரு மரத்தைப் போன்றது என்பதை பிள்ளைகளை சிந்திக்கச் சொல்லுங்கள். வேர்களை முன்னோர்கள் என்று பெயரிடுங்கள், கிளைகளை சந்ததிகள் என்று பெயரிடுங்கள், மரத்தின் தண்டுக்கு நீ என்று பெயரிடுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:18 இலிருந்து இந்த வாக்கியத்தை ஒன்றாக வாசியுங்கள்: “அவர்கள் [நம் முன்னோர்கள் ] இல்லாமல் நாம் பரிபூரணமாக்கப்பட முடியாது; நாமில்லாமல் அவர்களும் பரிபூரணமாக்கப்பட முடியாது.” பின்வருவனவற்றைப் போன்ற கேள்விகளைக் கேளுங்கள்: “நமது முன்னோர்கள் நமக்கு ஏன் தேவை? நமது முன்னோர்களுக்கு நாம் ஏன் தேவை? நமது பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் பிற மூதாதையர்கள் நமக்கு எப்படி உதவினார்கள்? நம் முன்னோர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பதை விவரிக்கும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:18இல் உள்ள எஞ்சியவற்றில் ஒரு சொற்றொடரை தேட பிள்ளைகளை அழைக்கவும்.
-
ஆலயத்தில் நியமங்கள் தேவைப்படும் மூதாதையரின் பெயரைக் கண்டறிய ஒவ்வொரு பிள்ளையின் பெற்றோருடன் இணைந்து பணியாற்றுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.( FamilySearch.org பார்க்கவும்).