2020
ஊழியம் செய்தலின் மூலம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்த்தல்
ஜனுவரி 2020


ministering

ஊழியம் செய்தலின் கொள்கைகள், ஜனுவரி 2020

ஊழியம் செய்தலின் மூலம் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தல்

இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலுக்காக தீர்க்கதரிசியின் போதனைகளைப் பின்தொடர்வதற்கு ஊழியம் செய்தல் ஒரு வாய்ப்பாகும்.

தலைவர் ரசல் எம் நெல்சன் “இன்று இந்த பூமியில் நடக்கும் மிக முக்கியமான செயலான”—இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலுக்கு உதவுவதற்காக நம்மை அழைத்துள்ளார்.1

இந்த இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலில் பணிபுரிய விரும்பும் ஒவ்வொருவருக்கும், ஊழியம் செய்தல் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான மிகச் சிறந்த வழியாகும். குறைந்த ஈடுபாடுள்ள உறுப்பினர்களுக்கு ஊழியம் செய்தாலும் அல்லது நமது விசுவாசத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு சேவை செய்யும்போது நமக்கு உதவுமாறு அவர்களை அழைத்தாலும், ஊழியம் செய்தல் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

திரும்பிவரும் உறுப்பினர்களை மீட்பது

“அன்பை ஊக்குவித்தலாகக் கொண்டால் அற்புதங்கள் நிகழும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அனைவரையும் உள்ளடக்கிய தழுவுதலுக்குள் காணாமல் போன நமது சகோதரிகளையும் சகோதரர்களையும் கண்டு, திரும்பக்கொண்டு வருவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்கலாம்.” —ஜீன் பி. பிங்காம்2

“நானும் எனது கணவரும் வேறொரு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது, குறைந்தது ஆறு வருட காலத்திற்கு நான் எதிலும் பங்குகொள்ளவில்லை. எனது புதிய ஒத்தாசை சங்கத் தலைவர் என்னைச் சந்தித்து, ஊழிய சகோதரியை என்னைப் பார்க்க அனுப்பி வைக்கவா என்று கேட்டார். சிறிது தயக்கத்துடன் நானும் ஒப்புக்கொண்டேன். எனக்கு நாய்கள் என்றால் மிகவும் விருப்பம், அந்த சகோதரிக்கு நாய்களின் மீது ஒவ்வாமை இருந்த போதிலும், ஒவ்வொரு மாதமும் அவர் வந்து என்னைச் சந்தித்தார்! அவரின் ஊழியம் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது, அது என் மீது ஒரு மகத்தான தாக்கத்தை உண்டாக்கியது.

“சகோதரியின் வருகைகள் வழக்கமாகவே முற்றிலும் சமூக தொடர்புடையதாக இருந்தபோதிலும், அவர் எப்போதாவது கேட்கும் கேள்விகள் எங்களை ஆவிக்குரிய உரையாடல்களுக்கு கொண்டு சென்றுவிடும். இவை எனக்கு கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்தின, ஆனால் சுவிசேஷத்தில் முன்னேற வேண்டுமா அல்லது நான் இருந்த இடத்திலேயே இருந்துவிடலாமா என்று தீர்மானிக்க அவை என்னைத் தூண்டின. இந்த முடிவு எனக்கு ஒரு போராட்டமாக இருந்தது, ஆனால் நான் சகோதரியுடன் ஊழியங்களுக்கு செல்வதை தேர்வு செய்தேன்.

“ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக ஆராதனைக் கூட்டத்தில் நான் பங்கேற்க சென்ற போது, உள்ளே செல்வதற்கு எனக்கு பயமாக இருந்தது. ஆலயத்திற்குள் நான் நுழையும் போது, என்னுடைய ஊழிய சகோதரி எனக்காக காத்திருந்து, ஆலயத்திற்குள் என்னுடன் நடந்து வந்தார். அதன் பிறகு, எனது கார் வரை என்னுடன் நடந்து வந்து, நீங்கள் இரட்சகருக்கு நெருக்கமாக மாறுவதற்கு என்னிடமிருந்து உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டும் என கேட்டார்.

“எனது ஊழிய சகோதரியின் நேரம் மற்றும் அன்பு மீண்டும் நான் ஈடுபாட்டுடன் செயல்பட எனக்கு வழிகாட்டியது, மேலும் அவருடைய கவனிப்பை இதுவரை எனக்கு கிடைத்த பரிசுகளில் சிறந்த ஒன்றாக கருதுகிறேன். இரட்சகரின் ஆலயத்திற்கான எனது பயணத்தில் அவர் என்னுடன் இருந்ததற்காக நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.”

பெயர் குறிப்பிடப்படவில்லை, பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா

கருத்தில்கொள்ள வேண்டிய கொள்கைகள்

“ஒவ்வொரு மாதமும் என்னைச் சந்தித்தார்”

மற்ற விஷயங்களை விட நீங்கள் ஊழியம் செய்பவர்களின் மீது அதிக அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை எவ்வாறு காட்ட முடியும்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:44 பார்க்கவும்).

“கேள்விகள்”

சரியான கேள்விகளைக் கேட்பது சுய மதிப்பீட்டைத் தூண்ட உதவும். நமது ஊழியத்திற்கு சமூக உணர்வுடன் இருப்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு நோக்கம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.3

“எனக்காக காத்திருந்தார்”

ஒவ்வொருவரும் தாங்கள் வரவேற்கப்படுவதை உணர வேண்டும் (3 நேபி 18:32 பார்க்கவும்).

“என்னுடைய பயணத்தில் என் பக்கம் இருந்தார்”

தடுமாறி இரட்சகரிடம் திரும்பி வந்து, குணமடைபவர்களுக்கு நமது ஆதரவு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவரும் (எபிரெயர் 12:12–13 பார்க்கவும்).

ஊழியம் மற்றும் கூடிச்சேர்தல்

“இயற்கையாகவும், சாதாரணமாகவும் உங்களுக்கு எந்த வழி தோன்றுகிறதோ அதில், ஏன் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவும் அவருடைய சபையும் முக்கியமானதென மக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். …

“… உங்களுடைய இருதயத்திலுள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வதும் உங்களுடைய நம்பிக்கைகளுடன் சீராக வாழ்வதுவுமே உங்களுடைய பாத்திரம்.” —மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப்4

ஊழியம் மற்றும் நற்செய்தியைப் பகிர்தல் ஒருவருக்கொருவர் பரவுகிறது. நாம் ஊழியம் செய்யும் போது நமது நண்பர்கள் மற்றும் அயலார்களை கூடச் செய்தல் அல்லது நமது நண்பர்கள் மற்றும் அயலார்களுடன் கூடும் போது ஊழியம் செய்தலுக்கான சில வழிகள் இதோ:

  • சேர்ந்து சேவையாற்றுங்கள். ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உங்களுடன் சேர நண்பர்கள் அல்லது அண்டை அயலவர்களை அழைக்க வாய்ப்புகளைத் தேடுங்கள். புது தாய்மார்களுக்கு உணவு தயாரித்தல், வயதான பெரியவர்களை பார்க்க செல்லுதல் அல்லது உடல்நலம் சரியில்லாதவர்களின் வீட்டைச் சுத்தம் செய்தல் ஆகியவற்றில் உங்களுக்கு உதவுமாறு அவர்களிடம் கேளுங்கள்.

  • சேர்ந்து கற்பியுங்கள். ஊழியக்காரர்களுடனான சிலரின் சந்திப்பிற்காக, அடிக்கடி ஆலயத்திற்கு வராத நண்பர் அல்லது அண்டை வீட்டாரின் இல்லத்தில் ஊழியக்காரர் கூட்டத்தை நடத்துவதை கருத்தில் கொள்ளுங்கள். அல்லது உங்கள் வீட்டில் ஒரு கூட்டத்தை நடத்தும் போது அல்லது வேறொருவரின் வீட்டில் கூட்டம் நடத்த உங்களுடன் வருவதில் உங்கள் நண்பரின் ஆதரவைப் பெறுங்கள்.

  • உதவி நாடுபவரைப் பார்க்கும் போது அவரை அணுகுங்கள். ஆலயத்திற்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யுங்கள். முதன்மை செயல்பாடுகளுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்களை அழையுங்கள். ஊழியம் மற்றும் கூடிச்சேருதலுக்கு வேறு என்ன வழிகள் உள்ளன?

  • ஆலயம் வழங்கிய மூல ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள். சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில் உறுப்பினர்களுக்கு உதவ ஆலயம் பல ஆதாரங்களை வழங்குகிறது. நமது சமூகத்தில் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்தலுக்கு எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த யோசனைகளுக்கு Gospel Library செயலியில் “Missionary” பிரிவுக்குச் சென்று, ComeUntoChrist.org என்னும் தளத்தைப் பார்வையிடுங்கள்.

குறிப்புகள்

  1. ரசல் எம். நெல்சன், “இஸ்ரவேலின் நம்பிக்கை” (உலகளாவிய இளம் ஆன்மீகம், ஜூன் 3, 2018), HopeOfIsrael.ChurchofJesusChrist.org.

  2. ஜீன் பி. பிங்காம், “இரட்சகர் செய்வது போல ஊழியம் செய்தல்,” லியஹோனா,மே 2018, 106.

  3. “ஊழிய கோட்பாடுகள்: நமது ஊழியத்தை மாற்றும் காரணம்,” ஜனுவரி 2019 பார்க்கவும்.

  4. டியட்டர் எப். உக்டர்ப், “ஊழியப் பணி: உங்கள் இருதயத்தில் இருப்பதைப் பகிர்தல்,” லியஹோனா, மே 2019, 17.