மாதாந்திர இளைஞரின் பெலனுக்காக செய்தி, செப்டம்பர் 2025
இயேசு கிறிஸ்து நல்ல நாட்களுக்குமானவர்
காரியங்கள் நன்றாக நடக்கும்போது, நாம் எப்படி இரட்சகரின் மீது கவனம் செலுத்த முடியும்? இங்கே சில ஆலோசனைகள் உள்ளன.
ஒரு நண்பர் கஷ்டப்படும்போது மட்டுமே உங்களுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களைத் தவிர்த்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆரோக்கியமான உறவா? உண்மையாக இல்லை.
நாம் எப்போதாவது நம் இரட்சகருக்கு அப்படிச் செய்கிறோமா—கடினமான காலங்களில் அவரைத் தேடி, நல்ல காலங்களில் அவரை மறந்துவிடுகிறோமா?
நம்முடைய கடினமான காலங்களில் இயேசு கிறிஸ்து எவ்வாறு நமக்கு உதவுகிறார் என்பதைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம், ஏனென்றால் எல்லோரும், ஒரு காலத்தில் அல்லது இன்னொரு காலத்தில், கடினமான காரியங்களை எதிர்கொள்கிறார்கள்.
ஆனால் சில நாட்கள்—நாம் அதிர்ஷ்டசாலிகள் என்றால் வாரங்கள் அல்லது வருடங்கள் கூட—விஷயங்கள் மிகவும் நன்றாக நடக்கும். சில நேரங்களில் நாம் அந்த நேரங்களில் இரட்சகரை மறந்து விடுகிறோம். மார்மன் புஸ்தகத்தின் மக்கள் செய்தார்கள். அவர்கள் சிறிது காலம் தேவனின் ஆசீர்வாதங்களால் செழித்து வளர்ந்தார்கள், ஆனால் இறுதியில் அவரை மறந்தபோது பெருமைக்கு ஆளானார்கள்.
நல்ல காலங்கள் என்றால், நமக்கு திடீரென்று இயேசு கிறிஸ்து இனி தேவையில்லை என்று அர்த்தமல்ல. செழிப்பு காலங்கள் என்பது இரட்சகரை மறந்துவிடுவதற்கு அல்ல, அவருடன் மகிழ்ச்சியடைய சரியான நேரங்கள்.
சோதனைகள் நம்மை இயேசு கிறிஸ்துவிடம் திரும்ப நினைவூட்டாதபோது, நாம் எவ்வாறு இயேசு கிறிஸ்துவுடனும், நம் பரலோக பிதாவுடனும் தொடர்பில் இருக்கிறோம்?
தாழ்மையாயிருங்கள்
காரியங்கள் நன்றாக நடக்கும்போது, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாதனைகளையும் கொண்டாடுவது நல்லது. ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களை யார் அதை சாத்தியமாக்கினார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். பென்யமின் ராஜா தனது மார்மன் புஸ்தகப் பிரசங்கத்தில் இதை இவ்வாறு கூறினான்:
“ஏனெனில் இதோ, நாம் அனைவரும் யாசகர்கள் அல்லவா? நாம் வைத்திருக்கும் எல்லா பொருட்களுக்காகவும், ஆகாரத்துக்காகவும், வஸ்திரங்களுக்காகவும், பொன்னுக்காகவும், வெள்ளிக்காகவும், நாம் வைத்திருக்கும் சகலவிதமான ஐஸ்வரியங்களுக்காகவும், நாம் யாவரும் தேவனாகிய அவரை சார்ந்திருக்கிறோம் அல்லவா?” (மோசியா 4:19).
பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களுக்காகச் செய்ததை நினைவில் கொள்வதன் மூலம் உங்கள் வெற்றியைப் பற்றி மனத்தாழ்மையுடன் இருப்பது, உங்கள் நல்ல காலங்களில் அவர்களைச் சேர்க்க ஒரு சிறந்த வழியாகும்.
நன்றியோடிருங்கள்
பெருமை மற்றும் மறதிக்கு எதிரான சிறந்த மருந்துகளில் ஒன்று நன்றியுணர்வு. தேவனுக்கு நன்றி செலுத்துவது அவரையும், அவரும் அவருடைய குமாரனும் உங்கள் வாழ்க்கையில் செய்த அனைத்து நன்மைகளையும் நினைவில் கொள்ள உதவும். இது நல்ல காலங்களிலும், கடினமான காலங்களில்போல, அதே அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அறிந்திருங்கள்
சாத்தானின் விருப்பமான தாக்குதல்களில் ஒன்று, ”[உங்களை] மற்றவர்களை அவன் சாந்தப்படுத்தி, ஆற்றி, மாம்ச பாதுகாப்பிற்குள் போகவைப்பான்” (2 நேபி 28:21). வேறு வார்த்தைகளில் எனில், உங்கள் நல்ல நேரங்களில் நீங்கள் மிகவும் திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தால், மிக முக்கியமானதை மறந்துவிட்டால் அவன் அதை விரும்புவான். எனவே, தேவனை மறந்துவிடாதீர்கள்! உங்கள் நல்ல நேரங்களிலும் சத்துருவின் நுட்பமான தந்திரங்களை நீங்கள் அறிந்திருந்து அவற்றை எதிர்க்கும்போது, பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நெருக்கமாக இருக்க முடியும்.
நல்ல மேய்ப்பன்–மைக்கல் மாம்
கிறிஸ்துவை மையமாகக்கொண்டிருங்கள்
தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “நம் வாழ்வின் கவனம் தேவனின் இரட்சிப்பின் திட்டத்திலும் … இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் இருக்கும்போது, நம் வாழ்வில் என்ன நடந்தாலும், நடக்காவிட்டாலும் மகிழ்ச்சியை நாம் உணர முடியும்.” அவரிடத்திலிருந்தும் அவராலும் மகிழ்ச்சி வருகிறது. அவரே அனைத்து மகிழ்ச்சியின் ஆதாரம்.”
வாழ்க்கை நன்றாகப் போகும்போது, மகிழ்ச்சியைப் பற்றிய இந்த உண்மையை நீங்கள் எத்தனை முறை நினைக்கிறீர்கள்? இது காரியங்கள் கடினமாக இருக்கும்போது மட்டும் ஆறுதலான அறிவுரை அல்ல. இது எப்போதும் உண்மைதான், உங்கள் சிறந்த நாட்கள் உட்பட. எனவே, நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. இளைஞரின் பெலனுக்காக மாதாந்திர செய்தி, செப்டம்பர் 2025 மொழிபெயர்ப்பு. Tamil. 19626 418