மாதாந்தர நண்பன் செய்தி, ஜூன் 2025
கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டுதல்
அமெரிக்காவின் ஓஹாயோவில் உள்ள கர்த்லாந்தில் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.என்று கர்த்தர் ஜோசப் ஸ்மித்திடம் சொன்னார். கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுடன் வாக்குத்தத்தங்களைச் செய்யும் ஒரு சிறப்பான இடமாக அது இருக்கும்
பரிசுத்தவான்கள் ஆலயம் கட்டத் தொடங்கினர். அதற்கு நிறைய பணம் செலவானது, நிறைய வேலை தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற உற்சாகமாக இருந்தார்கள்.
பரிசுத்தவான்கள் ஆலயத்தில் வேலை செய்யும்போது, அவர்களிடம் பணம் தீர்ந்து போக ஆரம்பித்தது. உதவிக்காக அவர்கள் தேவனிடம் கெஞ்சினர்.
கரோலின் டிப்பெட்ஸ் என்ற பெண்ணும் அவரது குடும்பத்தினரும் நிறைய பணத்தை சேமித்திருந்தனர். அவர்கள் ஆலயம் கட்ட உதவுவதற்காக சபை பணத்தை கடன் வாங்க அனுமதித்தார்கள்.
பரிசுத்தவான்கள் கடுமையாக உழைத்தனர். சிலர் கற்கள் நிறைந்த வண்டிகளை ஓட்டினர். மற்றவர்கள் தொழிலாளர்களுக்கு உடைகள் மற்றும் உணவு தயாரித்தனர்.
குழந்தைகள் உடைந்த கண்ணாடித் துண்டுகளைச் சேகரித்து அரைத்து, ஆலய சுவர்களில் வைத்தார்கள், அதனால் அவை சூரிய ஒளியில் மின்னும், பிரகாசிக்கும்.
சீக்கிரமே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது! பரிசுத்தவான்கள் கர்த்தருடைய வீட்டிற்குள் சென்று அவர் வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாதங்களைப் பெற உற்சாகமாக இருந்தார்கள்.
வண்ணமிடும் பக்கம்
கர்த்தர் நான் யார் என்பதை அறிந்திருக்கிறார், என்னை நேசிக்கிறார்.
கோரி எக்பெர்ட்டின் விளக்கப்படம்
நீள்வட்டத்தில் உங்கள் முகத்தை வரையவும். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்தர நண்பன் செய்தி, ஜூன் 2025 மொழிபெயர்ப்பு. Tamil. 19643 418